ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராணி எலிசபெத் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகாராணியின் வாழ்த்தை அனுப்பியுள்ளது.
“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அதிபராக இருக்கும் போது இரு நாடுகளுக்கிடையிலான அன்பான நட்புறவைத் தொடர நான் எதிர்நோக்குகிறேன்.
எதிர்காலத்தில் உங்களுக்கான அனைத்து செயற்பாடுகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என ராணி எலிசபெத் இன் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.