பொதுநலவாய விளையாட்டுப் போட்டி – இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்ன புதிய சாதனை !

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த வீராங்கனை கயந்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனையை ஒன்றை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் சுற்றில் தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தை பதிவு செய்து அவர் புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்.

அவர் குறித்த 800 மீற்றர் தூரத்தை நிறைவு செய்ய 2 நிமிடங்கள் 1.20 வினாடிகளை எடுத்துக்கொண்டார்.

கயந்திகா அபேரத்னவின் முந்தைய சிறந்த நேரமாக 2 நிமிடங்கள் 1.40 வினாடிகள் அமைந்திருந்தது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் இன்று 5வது இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *