18

18

கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை வெளியிட்ட சுகாதார அமைச்சகம் – கனடாவில் பெரும் பரபரப்பு !

கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால்  ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்தது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டது.

அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. இந்த வீடியோ பதிவை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கியூபெக் சுகாதார அமைச்சகத்தின் டுவிட்டர் கணக்கை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் சுகாதார அமைச்சகத்தை கடுமையாக சாடியுள்ளனர். இன்னும் சிலர் ஆபாச பதிவு வீடியோவை பலருக்கும் பகிர்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து உஷாரான சுகாதார அமைச்சகம், அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் தனது தவறை உணர்ந்தது.

பின்னர் அந்த வீடியோ பதிவை நீக்கியது. இதற்காக கனடா அரசாங்கத்திடம் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் சமூக ஊடக கணக்குகளை கையாளும் ஊழியர்களில் சிலர் ஆபாச வீடியோ உள்ளடக்கத்தை பார்ப்பதால், அவர்கள் இதுபோன்ற செயல்களை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பகிரங்க மன்னிப்பு கடிதத்தில், ‘எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் பொருத்தமற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருகிறோம்.

தவறு நடந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இருந்தும் அமைச்சகத்தின் செக்ஸ் வீடியோ உள்ளடக்கம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதனை பலரும் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி நிலை மாற்றியமைக்க வேண்டும்.”- பிரியந்த விஜயசூர்ய

“வடக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான விடயங்களை பொலிசார் என்ற ரீதியில் எங்களால் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செயற்படுத்த முயற்சி செய்யவுள்ளேன்..” என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய இன்று காலை காங்கேசன்தறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மாகாணத்திற்கு இன்று சந்தோஷமான நாளாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். அத்துடன் வடக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் சமாதானத்தை ஏற்படுத்த இலங்கை பொலிசார் என்ற அடிப்படையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டஇந்த கடமையினை சரிவர செய்வேன் என உறுதி கூறுகின்றேன்.

அத்தோடு வடக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான விடயங்களை பொலிசார் என்ற ரீதியில் எங்களால் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செயற்படுத்த முயற்சி செய்யவுள்ளேன். அதற்குரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அத்துடன் வடக்கில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிலையினை மாற்றி அமைக்க வேண்டும் அந்த இடைவெளி நிலையினை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க படவேண்டும்.

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்துவது கட்டாயமாக செய்யப்பட வேண்டிய விடயம். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் இந்த விடயங்களை நான் மேற் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன். அத்தோடு வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிசாரின் தேவைகள் குறிப்பாக சில இடங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டடங்கள் இல்லை பொது மக்களின் காணிகளில் பொலிஸ் நிலையங்கள் இயங்குகின்றன.

அவ்வாறான நிலையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் குறிப்பாக பொலிஸாருக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் மற்றும் கட்டிடம் மின்சாரம் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நான் பொலிஸ் தலைமை காரியாலயத்துடன் இணைந்து பொலிஸாருக்குரிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய போக்குவரத்து இதர சேவைகளையும் நான் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற பொறுப்பு என்னிடம் பொலிஸ் மா அதிபராலர கையளிக்கப்பட்டுள்ளது அந்தப் பொறுப்பினை நான் நிறைவேற்றி வடக்கில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையும் சிறந்த வாழ்க்கையையும் முன்னெடுப்பதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

அத்தோடு பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற செய்யக் கூடிய சகல விடயங்களையும் நான் நிறைவேற்றுவதற்கு தயாராக உள்ளேன். குறிப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் விவசாயத்துறையில் ஈடுபடுவோர் கல்வி செயற்பாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் பொலிஸார் ஆகிய நாம் பூரண ஒத்துழைப்பினை வடக்கு மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

குரான் எரிக்கப்பட்ட விவகாரம் – நான்காவது நாளாகவும் சுவீடனில் தொடரும் போராட்டங்கள் !

தீவிர வலதுசாரி, புலம்பெயர்ந்த எதிர்ப்புக் குழுவினால் வெளிப்படையாக குரான் எரிக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மோதல்கள், பல சுவீடன் நகரங்களில் நான்காவது நாளாக மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன.

நேற்று கிழக்கு நகரமான நோர்கோபிங்கில் கலவரக்காரர்கள் மீது பொலிஸார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Gallery

இந்த மோதலின் போது, பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் குறைந்தது 17பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமையன்று, தெற்கு நகரமான மால்மோவில் தீவிர வலதுசாரி பேரணியின் போது பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

முன்னதாக, ஈரான் மற்றும் ஈராக் அரசாங்கங்கள் சுவீடன் தூதர்களை வரவழைத்து, எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஸ்ட்ராம் குர்ஸ் அல்லது ஹார்ட் லைன் இயக்கத்தை வழிநடத்தும் டேனிஷ்- ஸ்வீடிஷ் தராஸ்மஸ் பலுடன் தான் இஸ்லாத்தின் புனிதமான நூலை எரித்துவிட்டதாகவும், அந்த செயலை மீண்டும் செய்வதாகவும் கூறினார்.

கடந்த வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்டாக்ஹோமின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் லிங்கோபிங் மற்றும் நோர்கோபிங் நகரங்கள் உட்பட தீவிர வலதுசாரிக் குழு நிகழ்வுகளைத் திட்டமிட்ட இடங்களில் அமைதியின்மையில் குறைந்தது 16 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் பல பொலிஸ் வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் இனவெறி உள்ளிட்ட குற்றங்களுக்காக 2020இல் ஒரு மாத சிறைத்தண்டனை பெற்ற பலுடன், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற குரானை எரிக்கத் திட்டமிட்டிருந்தாக கூறப்படுகின்றது.

சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ பதிவு செய்து கப்பம் கேட்ட கொடூரம் – கல்முனையில் சம்பவம் !

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களை தலைமறைவாக இருந்த நிலையில் கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை முன்வைத்து கப்பம் கேட்பதாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பொலிஸார் 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்ட நிலையில் தேடுதல் மேற்கொண்டு வந்தனர். எனினும் சந்தேக நபர்களில் ஒருவரான சாய்ந்தமருது 3 இனை சேர்ந்தவர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் ஏனைய சந்தேக நபர்களில் கப்பம் கோரியவரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையான செயற்பட்ட மற்றுமொரு 31 வயதுடைய சந்தேக நபர் சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைதானார்.

குறித்த இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற சந்தேக நபரினை கைது செய்ய நீதிமன்ற நடவடிக்கை ஊடாக சர்வதேச பிடியாணை உத்தரவினை பெறுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைதான சந்தேக நபர்கள் கஞ்சா ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மைத்திரி தரப்பிலிருந்து அமைச்சுபதவிக்காக அந்தர் பல்டி அடித்தார் சுரேன் ராகவன் !

பதவியேற்றது புதிய அமைச்சரவை – யார் யார் புதிய அமைச்சர்கள் !

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி பதவியேற்ற புதிய அமைச்சரவை விபரம் வருமாறு,

  1. ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு
  2. ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
  3. அருந்திக பெர்னாண்டோ- பெருந்தோட்டம்
  4. லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
  5. தாரக பாலசூரிய – வெளிநாட்டு விவகாரங்கள்
  6. இந்திக்க அனுருத்த – வீடமைப்பு
  7. சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
  8. சிறிபால கம்லத் – மஹாவலி
  9. அனுராதா ஜயரத்ன – நீர்ப்பாசனம்
  10. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
  11. பிரசன்ன ரணவீர – தொழில்துறை
  12. டி.வி.சானக – சுற்றுலா, மீன்பிடி
  13. டிபி ஹேரத் – கால்நடை
  14. அரவிந்த் குமார் – பொருந்தோட்டத்துறை
  15. கீதா குமாரசிங்க – கலாச்சார, கலைநிகழ்ச்சிகள்
  16. குணபால ரத்னசேகர – கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு
  17. கபில நுவான் – சிறு பயிர்த் தோட்டம்
  18. கயாஷான் நவனந்த – சுகாதாரம்
  19. சுரேன் ராகவன் – கல்வி
  20. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி
  21. அசோக பிரியந்த – வர்த்தகம்

இலங்கையில் முகக்கவசங்கள் அவசியமில்லை – சுகாதார அமைச்சு அறிவிப்பு !

இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை  தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.