02

02

கனடாவில் மீட்கப்பட்ட 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – மன்னிப்பு கோரினார் போப் ஆண்டவர் பிரான்சிஸ் !

கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

‘நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்’ என அவர் கூறினார்.

மேலும், கனடா பேராயர்களுடன் இணைந்து தான் மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

கனடாவில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் பாடசாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனர்.

பழங்குடியினரிடையே மதத்தையும், அந்தக் காலத்து அரசுகள் மிக உயர்வாகக் கருதிய தங்களது கலாசாரத்தையும் திணிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அத்துடன், கனடாவில் தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின.

இதற்கு, தற்பேதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், வத்திகானில் நேற்று ஃ(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கனடா பூர்வகுடியினரிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.

“உலகம் முழுதும் பொருட்களின் விலை உயர்வுக்கு புடின் தான் காரணம்.” – என்கிறார் ஜோபைடன் !

உக்ரைன்- ரஷ்யா இடையே இன்று 38வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்தான் காரணம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜோ பைடன் கூறியதாவது:-

உக்ரைனில் புடினின் படையெடுப்பினால், உலகம் முழுவதும் எரிவாயு விலை மற்றும் உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.  அதை சமாளிக்க உதவுவதற்காக எங்களின் பெட்ரோலிய இருப்புகளில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களை அனுப்புவதற்கு அங்கீகரித்துள்ளேன்.

தனது நடவடிக்கையின் மூலம் பெட்ரோல் விலை எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒரு கேலன் 10 சென்ட் முதல் 35 காசுகள் வரை ஏதேனும் இருக்கலாம்.

எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்றால் அதிக எண்ணெய் விநியோகம் இருக்க வேண்டும். இது உலகத்திற்கான விளைவு மட்டுமல்ல ஆபத்தின் தருணம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.