23

23

“என்னை நம்பியதால் தான் வடக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை அளித்தார்கள்.” – பொன்சேகா பெருமிதம் !

இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை வடபகுதி மக்கள் நம்பவில்லை அதனால்தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை விட அதிக வாக்குகளை அளித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்கள் 2010 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகளை வழங்கினார்கள் இது இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை நம்பவில்லை என்பதை காண்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் இருவர் செய்த குற்றங்களிற்காக முழு பாதுகாப்பு படையினரும் துன்பத்தில் சிக்க முடியாது என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்காக குரல்கொடுக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.