March

March

வணங்கா மண்!!! : ஈழமாறன்

Vanni_Missionகப்பல் ஓட்டிய தமிழன்
பின் ஒருநாள்
ஓமந்தைச் சாவடியில்
கப்பம் புடுங்கிய தமிழன்
தொப்புள் கொடி உறவின் பெயரால்
பத்துப் பதினைஞ்சு
வீடு வாங்கிய தமிழன்

முன் ஒருநாள்
புரட்சியின் பெயரால்
கோயிலெல்லாம்
நகை எடுத்தவன்
தண்டவாளம் ஈறாக
கிண்டி எடுத்தவன்
கதிகால் தொடங்கி
கக்கூஸ் கதவுவரை
களவும் எடுத்தவன்

கவி படைத்தவன்
அண்ணையின் பெயரில்
அர்ச்சனை செய்தவன்
பிறிதொரு பொழுதில்
களவாய் கடவுச்சீட்டுச் செய்து
கென்யா ஊடாக
ஜரோப்பா சென்று
ஆமி அடிக்கிறான்
புலி பச்ச மட்டை வெட்டி
பளார் என்றடிக்குது
வீடு எரிஞ்சு போச்சு
கிடந்த தோடும் களவு போச்சு
நாடு திரும்பிப் போனால்
என்னை நாயைப் போல் சுடுவார் என்று
பொய்யாய் சொன்னவன்
அதன் பேரில் அடைக்கலமும் கேட்டவன்.
தங்கையை கூப்பிட்டான்
தம்பியை கூப்பிட்டான்
மாமா மாமி மச்சாள் என்று பின்
வரிசையாய் அழைத்தபின்

மாவீரர் விழாச்சென்று
போர்வீரம் கதைத்தவன்
சந்திரிகாவுடன் கலவி வைக்க
அண்ணைக்கும் ஆசை
இந்த கிளட்டு சிங்கத்திற்கும்
ஆசையென்று அரங்கிலை முழங்க
விசிலடித்தவன்
அன்றிரவே விஸ்கியும் அடித்தவன்.

ஜஞ்சாறு வருசம் கழிச்சு
தெருவில் நின்ற காருடன்
கோட்டுச் சூட்டையும் போட்டு
போட்டோ எடுத்தவன்
எடுத்த கையோடு
எக்கச் சக்கமா புரட்டும் சேர்த்து
கடிதமும் போட்டவன்
வடிவான பொம்பிளை ஒன்று
அனுப்பவும் சொன்னவன்.
வன்னிலை வேண்டாம்
கொஞ்சம் நகரமாய் பாருங்கோ
இங்கிலிசு தெரிஞ்சிருந்தா
இன்னும் கொஞ்சம் நல்லது
சாதி கவனம்
சமயத்தையும் விசாரியுங்கோ
வாற செலவு அவளோடை
வந்த பிறகுமிகுதி என்று
வரிசையாய் சொன்னவன்

வந்திறங்கிய கையோடு
கலியாணம் ஒருநாள்
பின் வேறு ரிசப்சன் மறுநாள்
பிறந்த நாள் ஒருநாள்
31ம் சடங்கெண்டு ஒருநாள்
படுத்தது தவிர்த்து
பிள்ளை குடுத்தது தவிர்த்து
மற்றன எல்லா நாளுக்கும்
விழா எடுத்தவன்
கொஞ்சம் விலாசம்
காட்டினவன்

கொலிடே போனவன்
குடிச்சுத் தினம்
கும்மாளம் போட்டவன்
அரைகுறைப் பயிற்சியில்
அரங்கேற்றம் செய்தவன்
அப்பப்ப வன்னி சென்று
அண்ணைக்கருகில் நின்று
போஸ் கொடுத்தவன்
கொடுத்தெடுத்த படம்
காட்டி அண்ணையோட
குளோஸ் என்று சொன்னவன்
வெள்ளைப் புறாக் கட்டினவன்
கட்டி வந்ததில் வீட்டைக் கொஞ்சம்
நீட்டியும் கட்டினவன்

வருகிற வழியிலை
துடைக்கப் பேப்பரும் கேட்டவன்
வள்ளியும் கந்தனும்
சுப்பனும் பேத்தியும்
பங்கரில் இருக்கையில்
லண்டனில் பிள்ளையும் பெத்தவன்
புரச்சியின் பெயரிலை
கொள்ளையும் அடித்தவன்
கொள்கையின் பெயரிலை
இன்னும் நாலைஞ்சு வீடும்
வாங்கினவன்

மன்னாரில் சாகையில்
மதுவிலை கிடந்தவன்
அண்ணை உள்ளுக்கை விட்டடிப்பார் என்று
மனிசியுடன் தினம் தோறும்
மயக்கத்திலும் கிடந்தவன்
மூதூரில் சனம் சாக
வைவுக்கு முத்தம் கொடுத்தவன்
பேசாலை ஈறாக
பெருவாரி சனம் சாக
பராரிக் கனவோடு
சொகுசாக வாழ்ந்தவன்

ஆனையிறவு போய்
அழிவார் கதைகேட்டு
வன்னிச் சனத்தின்ரை
ஆடுமாடு போய்
பால மோட்டை போய்
படுகாட்டுக் குளம் போய்
படுத்திருந்த பாய் கூடப் போய் துலைஞ்சு
நாசமறுப்பார் செய்த வேலையாலை
நாதியற்ற வன்னிச் சனம்
இருந்ததெல்லாம் இழந்து
மிருகமாய் அலைஞ்சு
கருங்காலி மரத்தின் கீழே
உறங்காமல் உண்பதற்கோ
ஒரு பருக்கை உணவில்லாமல்
திண்ணையும் போய்
பின்வளவு தென்னையும் போய்
புள்ளையும் போய்
புதுவிளாம் குளமும் போகையிலே
கட்டவுட் கட்டினவன்
அண்ணைக்கு பனையுயரக்
கட்டவுட் கட்டினவன்
சாவை நிறுத்துவோம்
வாருங்கள் ஊர்வலம் என்று
தெருவுக்கு கூட்டி வந்து
அண்ணையைக் காப்பாத்த
பதாகை சுமந்தவன்

ஊர்வலத்திலே உல்லாசம் கண்டவன்
பெல்ஜியம் சென்று
துள்ளிக் குதித்த பின்னே
பானம் அருந்தி
சான்ட்விச்சு சாப்பிட்டு
ஏப்பம் விட்டவன்
இளம் பெட்டையளை பார்த்து
மோப்பமும் விட்டவன்.
கோச்சிலை அப்பிடி இப்பிடி
சேட்டையும் விட்டவன்
இளசுகளுக்கு பிக்கினிக்
காட்டவும் செய்தவன்.

காரை முள்ளுக் குத்த
யங்கம் முள்ளு கீறிபாய்ந்த காயம்
உடல் கடுக்க
சிங்களம் ஏவிய செல்
சிங்கனைக் கொன்று
அவன் தங்கையைக் கொன்று
மங்கையின் உடல் தின்று
உடன் கிடந்த தங்கமாம்
ஆறுமாத சிறுமியை பிழிந்தெடுத்து
கோடியில் நின்ற
மாடாடு மரமெல்லாம்
முறித்தெடுத்து
கருப்பட்ட முறிப்பிலே வீழ்ந்து வெடிக்கையில்
நாயே நீ எங்கிருந்தாய்
கற்சிலை மடுவிலே
நெடுங்கேணித் தெருவிலே
புளியங் குளத்திலே
புதுவிளாங்குளத்திலே
அழிந்து சனம்
அழுது ஓலம் விட்டு
விடுங்கடா எங்களை
வே மக்களே என்று சொல்ல
பொல்லால் அடித்து
காலால் போட்டுதைத்து
மாத்தளனில் என் மகளை
மாடாய் அடித்தவனை
மாவீரன் என்று சொல்லி
மார்தட்டிக் கொண்டாடியவன்

கட்டினவள் கதறியழ
பால் மணம் மாறாத பச்சிழம் பாலகன்
கையில் கொண்டு
கரிப்பட்ட முறிப்பு போக
கனகராயன் குளம் போக
முறுகண்டி போக
முழங்காவில் போக
வற்றாப் பழை போக
தண்ணீர் ஊற்று விழ
தண்ணியிலை இருந்தவன்

தன்குறி விறைக்க
சந்தோசம் கொண்டவன்
புதுக்குடியிருப்பு மூலைக்கை
வன்னிச் சனம் சாகைக்கை
கால் சிதறக் கை முறிந்து
தண்ணிகூட இன்றிச் சனம் மாழேக்கை
ஆண்குறி விறைப்பேறி
அனுபசிச்சுக் கிடந்தவனுக்கு
அண்ணைக்கு அனுப்புவதற்கு
அள்ளிக் கொடுங்கள் என்று
வணங்கா மண்
பேர் போட்டு
வருவான் வாசலுக்கு

கேட்டு வையுங்கள்
மட்டக்களப்புச் சனத்தின் உயிர்
மசிரைவிடக் குறைவா
திருகோணமலைச் சனங்கள்
எருமையினப் பிறப்பா
மன்னாரில் செத்தவர்கள்
செல்லாத காசா
மிகுதி வன்னியிலை செத்ததெல்லாம்
மரமேறும் விலங்கா
இவரெல்லாம் சாகையிலை
இரவெல்லாம் கலவிசெய்தீர்
இப்ப அண்ணைக்கு
இருப்புக்கு இடம்வேண்டும்
வணங்கா மண் புலுடாவா
நாயே
வணங்கா மண் புலுடாவா என்று.

யாழ். ரயில் சேவை. பூர்வாங்கப் பணிகள் இன்று ஜனாதிபதியால் ஆரம்பம்

mahinda-rajapaksha.jpgயாழ்ப்பா ணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட்டை மக்களும் கிளிநொச்சி ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகளை மாத்தறை மக்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதேவேளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்தவன் மூலம் வடக்கு ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான நிதி திரட்டப்பட உள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு 400 ரூபா அறவிடப்படவுள்ளது.  யாழ் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட பின் இந்த அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி யாழ். செல்ல அனுமதி வழங்கப்படும். அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் ஜனாதிபதி இன்று (23) ஆரம்பித்து வைப்பார்.

இரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்

army-s-l.jpgபுலிகளின் முக்கிய தளமாக விளங்கிய புதுக்குடியிருப்பு இரணைப்பாலை முழுவதையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். இரணைப்பாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவரின் முக்கிய தளம், அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது இறுதி பிரதான நடவடிக்கைத் தலைமையகத்தையும் படையினர் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது அவர்களை 25 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு ஏ-35 வீதியின் ஒன்றரை கிலோ மீற்றருக்கு மேற்பட்ட பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது ஏ-35 பிரதான வீதியூடாகவும் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் உட்பட முக்கிய தலைவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த அதி சொகுசுகளைக் கொண்ட வீடுகள், உட்பட பாதுகாப்பு அரண்களையும் படையினர் இங்கு கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் புலிகள் தங்களது அதி உயர்பாதுகாப்பு வலயங்களில் நன்றாக பயன்படுத்திவந்துள்ளதற்கான சகல தடயங்களும் காணப்படுவதாக வன்னி கள முனையிலுள்ள படை வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து செய்மதி தொலைத்தொடர்பு கருவிகள், அதி நவீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் உட்பட பல முக்கிய பொருட் களும், அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ள படையினர் உழவு இயந்திரம், வான், கப் வண்டி உட்பட ஏழு வாகனங்களை படையினர் இந்த நடவடிக்கையின் போது நிர்மூழமாக்கியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் பலமுனைகளில் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா ஆகியோர் தலைமையிலான மூன்று படைப் பிரிவுகளும் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 17 பேர் பலி

tour.jpgஅமெரிக் காவின் மேற்கு மாகாணமான மான்டனாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சிறார்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேரிட்டது. இதுகுறித்து பெடரல் விமான நிர்வாக செய்தித் தொடர்பாளர் மைக் பெர்குஸ் கூறுகையில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜாலி டிரிப் ஆக குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது சோகத்தில் முடிந்துள்ளது. ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் கலிபோர்னியாவின் ஆரோவில் நகரிலிருந்து கிளம்பி, மான்டனாவின் போஸ்மன் நகருக்கு வந்து கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு முன்பு ஹோலி கிராஸ் கல்லறையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

போஸ்மன் நகருக்கு வரும் திட்டத்தை கடைசி நேரத்தில் விமானி மாற்றியிருக்கிறார். போஸ்மனுக்குப் பதிலாக பட் நகருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார் என்றார். விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. விமானம் தலைகுப்புற விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கல்லறை வளாகத்தில் உள்ள மரங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

பிக் பிரதர் புகழ் ஜேட் கூடி புற்றுநோய்க்கு பலி

_jadebigbro.jpgபிரிட்டிஷ் தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோ நட்சத்திரமான ஜேட் கூடி 27 வயதில் உயிரிழந்துள்ளார்.  அவரது வாழ்க்கையின் பிற விஷயங்களைப் போலவே அவர் புற்றுநோயுடன் போராடிவந்ததையும் ஊடகங்கள் உற்று அவதானித்துவந்துள்ளன.

ஜேட் கூடி ஒரு தைரியமான பெண் என்றும் அவரை அனைவரும் அன்பாக நினைவுகூறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியுள்ளார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.

2002ஆம் ஆண்டு பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பிரபலம் அடைந்திருந்தார். ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதே நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனத்துவேஷம் பாராட்டும் வகையில் நடந்துகொண்டார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது தொழில் வாழ்க்கை கிட்டத்தட்ட குலையும் நிலைக்கு சென்றிருந்தது.

ஆங்கிலம் தெரியாதா? பிரஜாவுரிமை இல்லை – கனடா அறிவிப்பு

flag_canadian.jpgபிரஜா வுரிமை பெறுவதற்கு மொழித்தேர்ச்சி அவசியமென்ற அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் கனடிய, குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னேய், குடியேற்றவாசிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சை கற்றிருக்க வேண்டும் அல்லது பிரஜாவுரிமை மறுக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கஸ்சாரியில் இடம்பெற்ற குடிவரவுத்துறை விவகாரம் சம்பந்தப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜாசன் கென்னேய், புதிய குடியேற்றவாசிகள் இரு மொழிகளில் (ஆங்கிலம், பிரெஞ்சு) ஒன்றை கற்பது அவசியம் என்றும் கனடிய சமூகத்துடன் ஒன்றிணைய அது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மொழிகளையும் கற்பதற்கு குடியேற்றவாசிகள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்பதற்கு உதாரணமொன்றை கூறிய அமைச்சர் கடந்த ஜனவரி இந்தியாவுக்கு தான் சென்றபோது புதுடில்லியில் குடியேற்றம் தொடர்பான சில நேர்முகப்பரீட்சைகளில் கலந்துகொண்டதாகவும் அச்சமயம் 12 வருடமாக கனடியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பெண் ஒருவர் ஆங்கில அறிவு சிறிதும் இல்லாமல் இருந்ததையிட்டு ஆச்சரியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப்பெண் தனது கணவன் கனடாவுக்கு வருவதற்கு “அனுசரணை’ வழங்கியுள்ளார். எனக்கு வியப்பாக இருந்தது கவலையாகவும் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடா பிரஜாவுரிமை பெற உத்தியோகபூர்வ மொழிகளை அறிந்திருப்பது அவசியமென்ற வகையில் குடிவரவுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் 2 1/2 இலட்சம் பேர் கனடாவுக்குப் புதிய குடியேற்ற வாசிகளாக வருகின்றனர். 66 ஆயிரம் பேர் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்துகொள்ள வருகை தருகின்றனர். குடும்பத்துடன் இணைந்து கொள்வோருக்கு மொழிப்புலமை அவசியமானதல்ல என்ற ஏற்பாடே இருந்து வருகிறது.

ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை: உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு கொழும்பு வருகை. இன்று மாத்தறை விஜயம்

vaccina.jpgருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து கண்டறி வதற்காக இருவர் கொண்ட உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு நேற்று மாலை கொழும்புக்கு வந்து சேர்ந்தது.

இவர்கள் இன்று (23) மாத்தறைக்குச் சென்று ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள தாக சுகாதார போசாக்கு அமைச்சு தெரிவித்தது.

ருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து ஒவ்வாமையினால் பாடசாலை மாணவி ஒருவர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு குழுவொன்றை அனுப்புமாறு சுகாதார அமைச்சு சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தை கோரியிருந்தது.

அமைச்சின் அழைப்பின் பேரில் உலக சுகாதார ஸ்தாபன குழு நேற்று இலங்கை வந்ததோடு இந்தக் குழு இன்று (23) காலை சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுடன் பேச்சு நடத்தவுள்ளது. அதன் பின்னர் மாத்தறைக்குச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளது.

விசாரணை முழுமையாக பூர்த்தி செய்யும் வரை உலக சுகாதார ஸ்தாபன குழு இலங்கையில் தங்கியிருக்கும். இதேவேளை சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு என்பனவும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனம் பரிசோதனை தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

இதேவேளை ருபெல்லா தடுப்பூசி மருந்து ஒவ்வாமையினால் மேலும்27 மாணவிகள் நோய்வாய்ப்பட்டு மாத்தறை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு தற்பொழுது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 7 மாணவிகள் வீடுகளுக்குத் திரும்ப அச்சம் தெரிவித்து வருவதாக மாத்தறை பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் அருண ஜெயசேகர கூறினார். இதேவேளை மற்றொரு சிறுமி நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் (21) ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக இறந்த மாணவி பேசளா ஹன்சனி (13) யின் இறுதிக் கிரியைகள் நேற்று மாத்தறையில் நடைபெற்றன. அவர் கல்வி பயிலும் மாத்தறை சென். தோமஸ் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஒருவரைத் தாக்கிய இரு பௌத்த பிக்குகளையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் அனுமதி

mihintale.jpgமிகிந்தலை புனித பிரதேசத்தில் வைத்து ஒரு நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு பௌத்த பிக்குமாரையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அநுராதபுரம் தலைமை நீதிவான் ருஸிரா வெலிவத்தை அனுமதித்தார். இரு சந்தேக நபர்களையும் மீண்டும் மே ஆறாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மிகிந்தலைக்கு அண்மையாகவுள்ள அம்பஸ்தல செய்த்தியா என்ற இடத்தைச் சேர்ந்த தான வீரரத்ன என்ற நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மிகிந்தலை ராஜமகா விகாராதிபதி வலக வெங்குணவேவ தம்மாரத்ன மற்றும் மிகிந்தலை சீலரத்ன தேரர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இரு பௌத்த பிக்குகளுக்காகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, சிரேஷ்ட சட்டத்தரணியான சந்தான வீரக்கோன், டாக்டர் ராஜா ஜோன் புள்ளேயின் வீட்டைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முறைப்பாட்டாளரான சந்தான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை சீலரத்ன தேரரின் சாட்சியத்திலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் ‘சுற்றாடல் நட்பு’ சேவை ஆரம்பம்

sri-lanka-air-lanka.jpgஸ்ரீலங்கன் விமான சேவையின் ‘சுற்றாடல் நட்பு’ விமான சேவை முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (21) பிற்பகல் 12.35 மணியளவில் பிரெங்பொட் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ. எல். 557 என்ற விமானத்தின் மூலம் முதலாவது பயணிகள் குழு புறப்பட்டது.

சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் ‘சுற்றாடல் நட்பு’ என்ற விமான சேவையை தெற்காசிய வலயத்தில் ஆரம்பித்த முதலாவது நாடு இலங்கையாகும் என்று ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் குணவர்தன தெரிவித்தார்.

அமெரிக்கா நிஜமாக மாறினால் இரானும் மாறும் என்கிறார் கமெனி

_khamenei.jpgஇரானுடனான உறவில் ஒரு புதிய துவக்கத்தை அமெரிக்கா விரும்புகிறது என்று அதிபர் ஒபாமா கூறியிருந்தமைக்கு பதில் தரும் விதமாக கருத்து வெளியிட்டுள்ள இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இரான் தொடர்பில் அமெரிக்கா தனது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நிஜமாகவே மாற்றிக்கொண்டால், இரானும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.

வெறும் வாய் வார்த்தைகள் என்று குறிப்பிட்டு அவை மட்டும் போதாது என்றார் அவர். இரான் மீதான பொருளாதாரத் தடைகளை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிபந்தனைகளற்ற ஆதரவு என்று குறிப்பிட்டு அவ்விவகாரம் போன்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நிஜமான மாற்றங்கள் எதனையும் தான் இதுவரைக் கண்டிருக்கவில்லை என்றும் கமேனி கூறியுள்ளார்.

அமெரிக்க இரான் உறவில் முப்பது ஆண்டு காலமாக நீடித்துவரும் பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக அதிபர் ஒபாமா வீடியோ உரையில் பேசியிருந்தற்கு அடுத்த நாள் அயதுல்லாவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.