ஸ்ரீலங்கன் விமான சேவையின் ‘சுற்றாடல் நட்பு’ விமான சேவை முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (21) பிற்பகல் 12.35 மணியளவில் பிரெங்பொட் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ. எல். 557 என்ற விமானத்தின் மூலம் முதலாவது பயணிகள் குழு புறப்பட்டது.
சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் ‘சுற்றாடல் நட்பு’ என்ற விமான சேவையை தெற்காசிய வலயத்தில் ஆரம்பித்த முதலாவது நாடு இலங்கையாகும் என்று ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் குணவர்தன தெரிவித்தார்.