30

30

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 40 பேர் பலி !

பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று (30) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த குண்டு தாக்குதல் பாகிஸ்தானின் பஜௌர் நகரில் அரசியல் கூட்டத்தை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொது மக்களிடமிருந்து சுமார் 11,000 முறைப்பாடுகள் !

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதனூடாக ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான இயலுமை தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் மூன்றாவது நாள் நடைபவனி மன்னாரில் !

மலையக எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை   பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான நடைபவனி மன்னாரை வந்தடைந்தது.

இந்த நடைப்பயணம் இன்று காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது.

அப்போது மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பேரணி காணப்பட்ட இடத்துக்கு சென்று, நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆசி வழங்கியதோடு தொடங்கிய நடைபவனி, முற்பகல் 11 மணியளவில் மன்னார் நகரை அடைந்தது.

அதனையடுத்து, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தை சென்றடைந்த பேரணியினரை மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.

இந்த நடைபவனியின் 4ஆம் நாளான நாளை திங்கட்கிழமை (31) காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து முருங்கன் நோக்கி பேரணியினர் பயணிக்கவுள்ளனர்.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளில், ‘மலையக எழுச்சிப் பயணம்’ என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடை பயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த  வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், காலை 11  மணியளவில் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்தது.

மலையக மக்கள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்களின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை அந்த தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதோடு வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், நடைபயணம் மூன்றாம் நாளான இன்றைய தினம் (30) காலையில் மீண்டும் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகி, மன்னார் நகரை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.