16

16

மெனிக்பாம் வடிகால் திட்டத்துக்கு ஐ.நா. உதவி!

mahinda-samarasinha.jpgவவுனியா மெனிக்பாமில் மழை காலத்தில் அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உரிய வடிகால் திட்டங்களை நடைமுறைப்படு;த்த ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை அனர்த்த முகாமைத்துவை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்வைத்திருந்தர்.

இத்திட்டத்துக்கு 52.9 மில்லியன் ரூபாவை வழங்க ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி மெனிக்பாம் 1, 3, மற்று 4 ஆகிய பிரிவுகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய கால்வாய்கள் மற்றும் மதகுகள் அமைக்கப்படவுள்ளன.

கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதிக்கு பாராட்டு

இன, மதங்களுக்கிடையிலான நட்புறவை அடித்தளமாகக் கொண்டு நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தமது பாராட்டையும், ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளது.

கத்தோலிக்க ஆயர் பேரவையின் அங்கத்தவர்கள் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண் டகையின் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

முதல் காலாண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கை

290909mahinda.jpgஅடுத்த வருட முதல் காலாண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்தர ராஜபக்ஷ முன்வைத்ததிருந்தார். இதன்படி,  மீண்டுவரும் செலவினம் 197,478,109,000 ரூபாவாகும் மூலதனச் செலவு 158,987,398,000 ரூபாவாகும்.

ஏ(எச்1என்1): இன்புளுவென்ஸா வைரஸ் பாடசாலைகளில் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) வைரஸ் நோய் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது.

கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலை மாணவரொருவர் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பது உறுதியாகியுள்ளதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் தலைதூக்கி இருப்பதாகவும் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு குறிப்பிட்டிருக்கின்றது.

புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) நோய் இவ்வருடம் ஜூன் மாதம் இங்கு பதிவாகிய போதிலும் உள்நாட்டு பாடசாலை மாணவரொருவர் இந் நோய்க்கு உள்ளாகி இருப்பது முதற் தடவையாக உறுதிப்படுத்தப்பட்டி ருக்கின்றது.

ஊழியர் சேமலாப நிதிக்கு 29 மாடி அலுவலக கட்டிடம்!

151009athaudasenevirathna.jpgஊழியர் களுக்கு சேமலாப நிதி வழங்குவதற்காக சுரகும் பியஸ  என்ற பெயரில் 29 மாடிகளைக் கொண்ட பாரிய கட்டிடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை தெழிலாளர் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரட்ன முன்வைத்திருந்தார்.

இதன்படி தொழில் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் இந்தப் பாரிய கட்டிடம் அமைக்கப்படும். ஊழியர் சேமலாப நிதியுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களும் இக்கட்டடத்தில் இயங்கும். இதன்மூலம் பொது மக்களின் சிரமும் வீண் தாமதங்களும் குறைய வழியேற்படும்.

இத்திட்டத்துக்கு மொத்தம் 7.585 பில்லியன் ரூபா செலவிடப்படும்.

மின்துண்டிப்பு விசாரணை மூவரடங்கிய குழு நியமனம்

கடந்த வாரம் நாடுபூராவும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதன் படி மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இந்தக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

தேசிய போக்குவரத்துக் கொள்கை

15dallas_alahapperumasss.jpgஇலங்கையில் தேசிய போக்குவரத்துக் கொள்கையை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்வைத்திருந்தார்.

உள்ளுரில் பயணிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் சேவையில் பாதுகாப்பு,  வருமானம் என்பவற்றை உறுதிப்படுத்தல்  மற்றும் சூழலுக்கும் நாட்டின் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை முடிந்தவரைக் குறைத்தல் என்பன இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஏறாவூர் – மீராகேணி பிரதேசத்தில் மீண்டும் பதற்றம்: பரபரப்பு – 15 மாணவர்கள் நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

ஏறாவூர் – மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் போஷாக்கு மாத்திரை உட்கொண்டதால் சுகவீனமடைந்த மேலும் 15 மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மீராகேணி பிரதேசத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. போஷாக்கு மாத்திரைகள் உட்கொண்டதையடுத்து சுகவீனம் அடைந்ததால் இப்பாடசாலையைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் புதன் கிழமை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டிருந்தனர். சிகிச்சையின் பின்னர் இவர்கள் அனைவரும் வீடு திரும்பியிருந்தனர்.

எனினும் சிகிச்சை பெற்றுத் திரும் பிய 09 மாணவர்கள் புதன்கிழமை இரவு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பாடசாலை ஆரம்பிக்கப் பட்டபோது மேலும் 06 மாணவர்கள் மயக்கமுற்றதையடுத்து ஏறாவூர் மாவ ட்ட வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக இவர்கள் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் பாடசாலையில் மீண்டும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதேவேளை, போஷாக்கு மாத்திரை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விளக்கமளிப்பதற்காக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக், ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல். இஸட். ஆப்தீன், அதிபர் கே. காலிதீன் உட்பட பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எனினும் கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது மாணவியொருவர் திடீ ரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

இதனால் இப்பாட சாலையில் நேற்று இரண்டாவது நாளா கவும் கல்வி நடவடிக்கைகள் பாதிக் கப்பட்டன. பிரதேசத்தில் பதற்றநிலை நீடித்தது. பாடசாலை வளாகத்தில் பொலி ஸாரும், இராணுவத்தினரும் கூட்டாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர். இதேவேளை, சுகவீன மடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட மாணவர்களை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அ

மீர்அலி, வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஜெயினுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வீ. அமீர்தீன் ஆகியோர் வைத்தியசா லைக்குச் சென்று பார்வையிட்டனர்.