18

18

இலங்கைக்கு மேலும் ரூ. 500 கோடி: ப.சிதம்பரம்

18-pc-karuna.jpgஇலங் கையில் முகாம்களி்ல் உள்ள தமிழர்களை மீள் குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசன நடத்தினார்.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அண்மையில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று, முகாம் தமிழர்களை சந்தித்து நிலவரங்களை அறிந்து வந்துள்ளது. அவர்கள் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்துப் பேசினோம்.

முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.

எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை சுமார் 5,000 தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  இது தொடக்கம் தான் என்பதால் இந்தப் பணி மெதுவாக உள்ளது. போக போக அனைவரும் வேகமாக குடியமர்த்தப்படுவார்கள் இதுபற்றி இலங்கைக்கு போதிய அறிவுரை வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ.500 கோடி மத்திய அரசு  வழங்கி உள்ளது. மீண்டும், இன்னும் ரூ.500 கோடி வழங்கவும் தயாராக உள்ளது.

இதுகுறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு தேவைப்பட்டால் நிதி ஒதுக்குவோம் என்றார் சிதம்பரம்.

குடாநாட்டு வங்கி சேவைகளை பலப்படுத்த நடவடிக்கை – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் நாளை யாழ்; விஜயம்

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குடாநாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக நிலைகுலைந்து போய்க் கிடக்கும் வங்கிச் சேவைகளைப் பலப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும்.

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஆளுநர் கப்ரால் தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) கிளையொன்றைத் திறந்து வைப்பார். இந்த வங்கியின் கிளை திறக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.

அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குதல், வர்த்தக வங்கிகளை அமைத்தல்,  கட்டுப்பணம் வழங்குதல், வீடமைப்பு நிதி,  நிதி முகாமைத்துவம்,  சொத்துக்களை அபிவிருத்தி செய்தல், காப்புறுதி ஆகிய வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்குடனேயே வங்கிகள் குடாநாட்டில் பலப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

குடாநாடு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் அமைதி ஏற்பட்டுள்ளதால் குடாநாட்டில் வங்கிகளின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அச்செழுபகுதிக்குச் செல்லும் ஆளுநர் அபிவிருத்திக்கான கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார். இதற்காக மத்திய வங்கி 1.5 பில்லியன் ஷரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதற்காக 1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதற்கு மேலதிகமாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஆளுநர் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் இரு கிளைகளைத் திறந்து வைக்கவுள்ளார். அங்கு விவசாய உபகரணங்கள் மற்றும் படகுகளை வழங்குவார்.

அதே நேரம்ää குடாநாட்டில் செயற்படும் வங்கிகளின் உயர் அதிகாரிகளையும் ஆளுநர் கப்ரால் சந்தித்துப் பேசவுள்ளார். சுமார் 200 வர்த்தகப் பிரமுகர்களை நாளை யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் அவர்ää அவர்கள் மத்தியில் உரையாற்றுவதோடுää அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யூ. எம். கருணாரத்னää வங்கிச் செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மத்திய வங்கியின் கிளையொன்று நிறுவப்படுமெனக் கூறினார்.

அனுராதபுரம்,  மாத்தளை, மாத்தறை ஆகிய இடங்களில் மாத்திரமே மத்திய வங்கியின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் வர்த்தக நடவடிக்கைகள் விருத்தியடைந்து வரும் போது மத்திய வங்கியின் கிளைகள் அமைப்பது அவசியமென தெரிவித்த கருணாரத்னää முதலீட்டுச் சபை அதிகாரிகளுடன் திராட்சை தோட்டங்களைப் பார்வையிடவுள்ளதாகக் கூறினார். 

தலிபானுக்கு எதிராக முழு நேர தாக்குதல்

181009taliban.jpg பாகிஸ்தான் – ஆப்கான் எல்லைப்பகுதியில் சுமார் 30,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் தலிபான், அல் கய்டா தீவிரவாதிகளுக்கு எதிராக முழு நேர தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர்.

தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாத நடவடிக்கைக்கு சுமார் 175 பேர் கடந்த வாரங்களில் பலியானதால், இந்த ஒட்டுமொத்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளுப்பட்டு வருகிறது.

தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில்தான் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ துருப்புகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்லாது, பிற பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டுவதால் இந்த பகுதியில் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு வாஜிரிஸ்தானில் இந்த தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தாலும், தீவிரவாதிகள் தப்பித்து ஆப்கானிற்கும் பிற பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்புகள் கணித்துள்ளன.

அம்னெஸ்டி இன்டெர்னேஷனல் அமைப்பு, இந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடங்கியது முதல் சுமார் 1 லட்சம் முதல் 1,50,000 வரை பொது மக்கள் பலர் தங்கள் இடங்களை காலி செய்து விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் மேலும் கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்திற்கு ஹேமால் குணசேகர நியமிக்கப்படவுள்ளார்

181009hemal_gunasekara.jpgஎதிர்வரும் 20ம் திகதி பசில் ராஜபக்ஷ தமது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவரது வெற்றிடத்திற்கு ஹேமால் குணசேகர தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியில் வெற்றியீட்டிய ஹேமால் குணசேகர அமைச்சரவை சாரா பெருந்தெருக்கள் அமைச்சராக நியமிக்கப்படக் கூடுமெனவும்  எதிர்வரும் 21ம் அல்லது 22ம் திகதிகளில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வழிநடத்தும் நோக்கில் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா செய்யவுள்ளார்.

ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாடு தன்னிறைவு – அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவிப்பு

181009cbrathnayakesss.jpgஎதிர்வரும் ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச்செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க நம்பிக்கை தெரிவித்தார். கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

நாட்டின் கரும்புச் செய்கையின் மேம்பாட்டுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரும்புச் செய்கையில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொக்கும் திட்டம் ஒன்றை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

தற்போது நாட்டில் 15000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கூடுதலான உற்பத்தி மொனராகலை மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றது. கரும்பு உற்பத்தியை மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வியாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக பயிர்ச்செய்கை தொடர்பான அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

அதன்படி அம்பாறை,  பதுளை, அநுராதபுரம்,  குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் கரும்புச் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களில் 5 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. கரம்புச்செய்கைக்கு ஏற்ற மண்வளம்கொண்ட வடக்கின் கிளிநொச்சி பகுதியையும் தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கரும்புச் செய்கையின் இடைக்கால உற்பத்திகளான எத்தனோல் எரிபொருள்,  உரம் மற்றும் விலங்கின உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்பு உற்பத்திக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் நவீன உபகரணங்களையும்; வெளிநாட்டு உயிரி நோய் தடுப்பு நடவடிக்கையையும் அறிமுகம் செய்துள்ளது.

இவ்வாறான திட்டத்தின் மூலம் இன்னும் 6 வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யலாம் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 

புத்தளம் மாவட்ட குளங்கள் புனரமைப்பு!

sri-lanka.jpgபுத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவெலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தூர்ந்து போயுள்ள சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.  தேசத்தை கட்டியெழுப்பும்  தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் எதாவெட்டுறுவௌ, கோண்கஸ்வௌ,  கொலம்பகஸ்வௌ,  கோன்வௌ, பளுகஸ்வௌ போன்ற குளங்களே புனரமைக்கப்படவுள்ளன.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமிய மதரஸாக்களில் ஆங்கில மொழிக் கல்வி

000181009.jpgஇந்தியா வின் மேற்கு வங்க மாநிலத்தின் இஸ்லாமிய மதப் பள்ளிக்கூடங்களான மதரசாக்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கு ஆங்கிலத்தை முக்கிய மொழியாக பயன்படுத்த ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 மதரசாக்கள் இந்த முயற்சியை இந்தக் கல்வியாண்டின் தற்போதை தவணையில் ஆரம்பிக்கும் என்று சிறுபான்மையின விவகார அமைச்சர் அப்துஸ் சத்தார் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 566 மதரசாக்களும் இந்தத் திட்டத்தை இன்னும் சில வருடங்களில் ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆங்கிலத்தின் பயன்பாடு இல்லாமல் மாணவர்கள் மிகத் தரமான கல்வியைப் பெற முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் மதம் சார பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றது.

யாழ்- பருத்தித்துறை வீதி புனரமைப்புக்கு ரூ. 169 மில். நிதி

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதி யில் புத்தூர் சந்தியிலிருந்து வல்லைப் பிரதேசம் வரையான 5 ண கிலோ மீற்றர் நீளமான வீதி ஆசிய அபிவிரு த்தி வங்கியின் 169.5 மில்லியன் ரூபா நிதி உதவியினால் அகலமாக்கி புனர மைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீதியின் இரு மருங்கிலும் 7 மீற்றர் தூரம் அகலமாக் கப்படுகின்றது.

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் : மாலைதீவு அரசு தீர்மானம்

2222maldives.jpgகடலுக்கு அடியில் முதல் தடவையாக அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகம் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்த விசித்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து ஆறு மீற்றர் ஆழத்தில் நீச்சல் உபகரணங்களுடன் மாலைத்தீவு அமைச்சரவை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். உலக காபனீரொட்சைட் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்தக் கோரி விசேட ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

கடலுக்கு அடியில் மாநாடு நடத்துவது தொடர்பில் மாலைதீவு அமைச்சர்களுக்கு விசேட பயற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

14 பேரைக் கொண்ட மாலைதீவு அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் மட்டும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. குறித்த மூன்று அமைச்சர்களும் நீருக்கு அடியில் மாநாடு நடத்தக் கூடிய அளவுக்கு மருத்துவ ரீதியில் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி நசீட் கடலுக்கு அடியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார். அனைத்து அமைச்சர்களுக்கும் விசேட பயற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அடுத்த இலக்கு இந்தியாதான்: தலிபான்கள் மிரட்டல்

taliban_gther.jpgபாகிஸ் தானில் தாக்குதல் நடத்திய தலி பான்கள் தங்களின் அடுத்த இலக்கு இந் தியா தான் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தலிபான் களின் தலைவர் மசூத் தெரிவித்துள்ளான்.

தலிபான் இயக்கத்தின் புதிய தளபதி ஹக்கீமுல்லா மசூத் பேசும் காட்சியை இங்கிலாந்தில் உள்ள ஒரு செய்தி சேனல் ஒளிபரப்பியது. அதில் அவன் கூறியதாவது,

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிசாருடன் நாங்கள் (தலிபான் தீவிர வாதிகள்) போரிட்டு வருகிறோம். ஏனெ னில், அமெரிக்க உத்தரவுக்கு ஏற்ப அவர் கள் செயல்படுகின்றனர். அமெரிக்க உத்தரவுகளை பின்பற்றுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

அப்படி நிறுத்தினால், நாங்களும் எங்களுடைய தாக்குதல்களை நிறுத்துவோம். பாகிஸ்தானுக்குள் ஒரு இஸ்லாமிய நாடு உருவாக்குவதே எங்களுடைய லட்சியம். அப்படி ஒரு நாட்டை பெற்றதும், எல்லை வழியாக இந்தியாவுக்குள் நாங்கள் செல்வோம் அங்கு, இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு (தீவிரவாத செயல்களுக்கு) நாங்கள் உதவி செய்வோம் என்று ஹக்கிமுல்லா மசூத் கூறினான்.