வவுனியா மெனிக்பாமில் மழை காலத்தில் அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உரிய வடிகால் திட்டங்களை நடைமுறைப்படு;த்த ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை அனர்த்த முகாமைத்துவை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்வைத்திருந்தர்.
இத்திட்டத்துக்கு 52.9 மில்லியன் ரூபாவை வழங்க ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி மெனிக்பாம் 1, 3, மற்று 4 ஆகிய பிரிவுகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய கால்வாய்கள் மற்றும் மதகுகள் அமைக்கப்படவுள்ளன.