பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட புதிய மாணவன் ஒருவன் பகிடிவதைக்குட் படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேக நபர்களான 13 மாணவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். இந்த நிலையையடுத்து புதிய மாணவர்களுக்கு விரிவுரைகளை நடத்துவது கூட பல சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.