இன, மதங்களுக்கிடையிலான நட்புறவை அடித்தளமாகக் கொண்டு நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தமது பாராட்டையும், ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளது.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் அங்கத்தவர்கள் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண் டகையின் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.