கடந்த வாரம் நாடுபூராவும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
இதன் படி மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இந்தக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.