October

October

ஏ(எச்1என்1): இன்புளுவென்ஸா வைரஸ் பாடசாலைகளில் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) வைரஸ் நோய் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது.

கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலை மாணவரொருவர் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பது உறுதியாகியுள்ளதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் தலைதூக்கி இருப்பதாகவும் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு குறிப்பிட்டிருக்கின்றது.

புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) நோய் இவ்வருடம் ஜூன் மாதம் இங்கு பதிவாகிய போதிலும் உள்நாட்டு பாடசாலை மாணவரொருவர் இந் நோய்க்கு உள்ளாகி இருப்பது முதற் தடவையாக உறுதிப்படுத்தப்பட்டி ருக்கின்றது.

ஊழியர் சேமலாப நிதிக்கு 29 மாடி அலுவலக கட்டிடம்!

151009athaudasenevirathna.jpgஊழியர் களுக்கு சேமலாப நிதி வழங்குவதற்காக சுரகும் பியஸ  என்ற பெயரில் 29 மாடிகளைக் கொண்ட பாரிய கட்டிடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை தெழிலாளர் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரட்ன முன்வைத்திருந்தார்.

இதன்படி தொழில் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் இந்தப் பாரிய கட்டிடம் அமைக்கப்படும். ஊழியர் சேமலாப நிதியுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களும் இக்கட்டடத்தில் இயங்கும். இதன்மூலம் பொது மக்களின் சிரமும் வீண் தாமதங்களும் குறைய வழியேற்படும்.

இத்திட்டத்துக்கு மொத்தம் 7.585 பில்லியன் ரூபா செலவிடப்படும்.

மின்துண்டிப்பு விசாரணை மூவரடங்கிய குழு நியமனம்

கடந்த வாரம் நாடுபூராவும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதன் படி மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இந்தக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

தேசிய போக்குவரத்துக் கொள்கை

15dallas_alahapperumasss.jpgஇலங்கையில் தேசிய போக்குவரத்துக் கொள்கையை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்வைத்திருந்தார்.

உள்ளுரில் பயணிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் சேவையில் பாதுகாப்பு,  வருமானம் என்பவற்றை உறுதிப்படுத்தல்  மற்றும் சூழலுக்கும் நாட்டின் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை முடிந்தவரைக் குறைத்தல் என்பன இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஏறாவூர் – மீராகேணி பிரதேசத்தில் மீண்டும் பதற்றம்: பரபரப்பு – 15 மாணவர்கள் நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

ஏறாவூர் – மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் போஷாக்கு மாத்திரை உட்கொண்டதால் சுகவீனமடைந்த மேலும் 15 மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மீராகேணி பிரதேசத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. போஷாக்கு மாத்திரைகள் உட்கொண்டதையடுத்து சுகவீனம் அடைந்ததால் இப்பாடசாலையைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் புதன் கிழமை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டிருந்தனர். சிகிச்சையின் பின்னர் இவர்கள் அனைவரும் வீடு திரும்பியிருந்தனர்.

எனினும் சிகிச்சை பெற்றுத் திரும் பிய 09 மாணவர்கள் புதன்கிழமை இரவு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பாடசாலை ஆரம்பிக்கப் பட்டபோது மேலும் 06 மாணவர்கள் மயக்கமுற்றதையடுத்து ஏறாவூர் மாவ ட்ட வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக இவர்கள் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் பாடசாலையில் மீண்டும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதேவேளை, போஷாக்கு மாத்திரை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விளக்கமளிப்பதற்காக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக், ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல். இஸட். ஆப்தீன், அதிபர் கே. காலிதீன் உட்பட பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எனினும் கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது மாணவியொருவர் திடீ ரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

இதனால் இப்பாட சாலையில் நேற்று இரண்டாவது நாளா கவும் கல்வி நடவடிக்கைகள் பாதிக் கப்பட்டன. பிரதேசத்தில் பதற்றநிலை நீடித்தது. பாடசாலை வளாகத்தில் பொலி ஸாரும், இராணுவத்தினரும் கூட்டாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர். இதேவேளை, சுகவீன மடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட மாணவர்களை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அ

மீர்அலி, வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஜெயினுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வீ. அமீர்தீன் ஆகியோர் வைத்தியசா லைக்குச் சென்று பார்வையிட்டனர்.

மக்கள் வழங்கிய ஆதரவே எமது நாட்டின் வெற்றிக்குக் காரணம்! எட்டாவது ஆசிய ஒத்துழைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

290909mahinda.jpg பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும் சிறந்ததொரு முன்னுதாரணமென நாம் நம்புகின்றோம். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் எமக்கு உலகின் நட்புநாடுகளின் ஆதரவு கிடைத்ததைப் போன்று மிகப் பிரதானமாக எமது வெற்றிக்கு எமது மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் தான் காரணம்.

இதன் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டைப் பற்றி நன்கு தெரிந்த பிரிவினர்களால் மட்டுமே அதாவது அந்த நாட்டு மக்களால் தான் தீர்க்க முடியும் என்பது தெளிவாகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) காலை கொழும்பில் நடைபெற்ற 8ஆவது ஆசிய ஒத்துழைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றும்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி  இங்கு மேலும் தெரிவித்ததாவது:-

உங்கள் எல்லோரையும் எமது இலங்கை நாட்டுக்கு நான் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இம்முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆசிய பிராந்திய நாடுகளின் நண்பர்கள் இங்கு ஒன்றுகூடியிருப்பதையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். எம் எல்லோருக்கும் சொந்தமான இந்த ஆசியப் பிராந்தியத்திற்கு பல்லினத் தன்மை கொண்ட மிகச் சிறந்ததொரு வரலாற்றுப் பாரம்பரியம் உள்ளது. உலகின் பிரதான சமயங்களான பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயங்களும் ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. பல்வேறு நாகரீகங்கள் செளித்துவளர்ந்த பூமியும் இதுவே.

கடந்த பல நூற்றாண்டுகளாக எமக்கிடையே மிக நெருங்கிய தொடர்புகள் இருந்துவருகின்றது. பட்டுப் பாதை எம்மை ஐரோப்பாவுடன் இணைத்தது. இப்பாதையூடாகவே இலங்கையின் வாசனைத்திரவியங்களது மனம் ஐரோப்பா வரைச் சென்றடைந்தது.

தூர கிழக்கு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள்; வியாபார நோக்கத்தில் எமது நாட்டிற்கு வருகை தந்தனர். எனவே ஆசிய கூட்டுறவு என்ற எண்ணக்கரு ஏற்கெனவே ஆசிய நாடுகள் மத்தியில் இருந்துவந்த கூட்டுறவை மீள கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமானதொரு பொறிமுறையாகும். மேலும் இந்த எட்டாவது ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் அமைச்சரவை கூட்டம் ஆசியாவின் எழுச்சி – உலகளாவிய பொருளாதார மீற்சியும் அபிவிருத்தி வளவாய்ப்புக்களும் என்ற தொனிப்பொருளில் நடைபெறுவது மிகவும் பொருத்தமாகும்.

உலக சனத்தொகையில் ஆசியா 60 சதவீதத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. துரிதமாக வளர்ந்துவரும் மத்தியதர வர்க்கத்தின் காரணமாக அது உலகின் மிகப்பெரும்பாலன சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது. நேரடி சர்வதேச முதலீடுகள் பல ஆசியாவுக்கு உரித்தானதாகும். உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்களிப்பு 30 சதவீதமாகும். மேலும் இப்பிரதேசம் அதிகளவான இயற்கை வளங்களையும் கொண்டுள்ளது. இவை எமது வெற்றியினதும் புதிய பலத்தினதும் எதிர்பார்ப்பாகும்.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் நாம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளையும் மறந்துவிட முடியாது. குறிப்பாக உலக பொருளாதாரம் கடந்த சில தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு மிகப்பாரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல.

இது ஆசியப் பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியாகும். அவர்கள் ஏற்படுத்திய பிரச்சினை என்பதால் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவர்கள் எமக்கு உதவவேண்டும். மேற்கின் பிரதான நாடுகளின் பலவீனமான சட்டநடைமுறைகளாலும் பேராசையினாலும் ஆசிய நாடுகளும் உலகின் ஏனைய நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றன. எனவே இச் சவாலுக்கு புதிய பரிகாரங்களைத் தேட வேண்டும்.

இச்சவாலை நாம் எமது பிராந்தியத்திற்கிடையே வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கும் எமது நிதிச்சந்தைகளில் செல்வாக்குச் செலுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக மாற்றியமைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உலக பொருளாதாரத்தை நல்லநிலைக்குக் கொண்டுவருவதற்கு எமது போட்டித்தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நாம் ஏனைய பிராந்தியங்களோடு பெறுமதியான கூட்டு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கும் உதவும்.

எமது பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் மற்றுமொரு பிரச்சினைதான் வறுமை. எமது மக்களின் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாழ்;ந்த நிலையில் உள்ளனர். ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடலின் நோக்கங்களில் ஒன்று வறுமை ஒழிப்பும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமாகும் என்றவகையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது எமது பொறுப்பாகும்.

கீழ் மட்டங்களில் வெற்றியளித்த முறைமைகளை மிகவும் கவனமாக ஆய்வு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். நாம் எமது பிராந்தியத்திற்குள் எமது சொந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவுள்ளன. அந்தவகையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

சர்வதேச நிதி நிறுவனங்களின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது என்பதனைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள வறுமைநிலை, ஒவ்வொரு நாட்டுக்குமான தேவைப்பாடுகள், குறிகாட்டிகள் சமனான வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரேவகையான தீர்வைக் கொடுக்க முடியாது.

எமக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும். சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது பிராந்தியத்தில் மிகக்கூடிய செல்வாக்கைக் கொண்டுள்ளன. உதவி வழங்குவதற்காக அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் மூலம் ஏற்படும் சுமைகள் பற்றி அவர்கள் மிகுந்த கரிசணை செலுத்த வேண்டும்.

வறுமை ஒழிப்பு அத்தகைய நிபந்தனைகளுக்கான கைமாறாக இடம்பெறக்கூடாது. அபிவிருத்திப் பொருளாதாரத்தினூடாக அவர்களுக்கு வழங்கும் உதவிகளின் மூலம் ஏற்படும் நிலைமைகளை இந்த நிறுவனங்கள் விலங்கிக் கொள்ள வேண்டும். அதேபோன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்போது பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் முகங்கொடுக்கும் சவால்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று இலங்கையின் சொந்த அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்வதானால் எனது அரசாங்கத்தின் அபிவிருத்திச் சட்டகம் நான் 2005 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது முன்வைத்த ‘மஹிந்த சிந்தனை’ என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தியும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான உதவியும் எமது கொள்கையின் பிரதான அம்சங்களாகும். இதில் சமநிலைத்தன்மையும் நவீன முறைமைகளை ஏற்படுத்துவதனூடாகவும் நாட்டின் தேசிய திட்டங்களுக்கு உதவிசெய்யும் அதேநேரம் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் இது முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த இரண்டரைத் தசாப்தகாலமாக இலங்கைக்கு மிகவும் சவாலாக அமைந்த பிரச்சினை பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதன் இறைமை மற்றும் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதாகும். எமது நாட்டையும் எமது மக்களையும் பாதுகாப்பதில் நாம் பெரும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

1948 ஆம் ஆண்டு எமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் பயங்கரவாதப் பிரச்சினையின் காரணமாக பின்நோக்கிச் செல்லலானது. இலங்கைக்கு அதன் கீர்த்தியை வெற்றி கொள்வதற்காக பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. எனவே எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த மிகமுக்கியமான தீர்மானம் இதுவாகும். என்றாலும் அதனைச் செய்யுமுன்னர் நாம் சமாதானமாக இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எல்லா வழிகளையும் தேடினோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சர்வதேச சமூகத்தில் சில பிரிவினர் ஒருபோதும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டபோதும் நாம் பயங்கரவாதத்தை வெற்றி கொண்டோம். என்றாலும் இவ்வெற்றி எல்லா விடயங்களையும் கருத்திற்கொள்ளாது பெற்ற வெற்றியல்ல. பயங்கரவாதிகள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களது நலன்களிலும் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் என்ற ரீதியில் பொதுமக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்க வேண்டிய மிக முக்கியமானதொரு பொறுப்பு எமக்கிருந்தது. இதற்கு பொறுமையோடு நீண்டகால யுத்த நடவடிக்கையொன்று அவசியமானது. இது நான் நன்கு சிந்தித்து எடுத்த முடிவாகும். எல்லா இலங்கையர்களையும் இன, மத, மொழி, பேதங்களை மறந்து ஒரே வகையில் கவனிப்பதற்கு எனது அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணத்தோடு செயற்பட்டது. இதனால் தான் பயங்கரவாதம் மிக மோசமாக இருந்தபோதும் இராணுவத்தினரது மானசீக நடவடிக்கைகளின்போது பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நாட்டின் சில பிரதேசங்களில் செல்வாக்குச் செலுத்திய மோதல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை தாய் நாட்டின் எழுச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளது. எனது அரசாங்கம் தற்போது பயங்கரவாதிகளால் சேதமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பாடுபட்டுவருகின்றது. மேலும் நாம் மனித உரிமைகள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளை எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தவருகிறோம்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும் சிறந்ததொரு முன்னுதாரணமென நாம் நம்புகின்றோம். எமக்கு உலகின் நட்புநாடுகளின் ஆதரவு கிடைத்ததைப்போன்று மிகப் பிரதானமாக எமது வெற்றிக்கு எமது மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் தான் காரணம். இதன் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டைப் பற்றி நன்கு தெரிந்த பிரிவினர்களால் மட்டுமே அதாவது அந்த நாட்டு மக்களால் தான் தீர்க்க முடியும் என்பது தெளிவாகின்றது.

எமது நாட்டின் மோதலுக்குப் பிந்திய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். எல்லோரதும் அபிலாஷைகளைப் போன்று ஆசிய நாட்டவர்கள் என்றவகையில் எமது நோக்கமும் கூட்டு ஒத்துழைப்பின் மூலம் எதிர்கால சமாதானத்தையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதாகும்.

கடைசியாக ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு மிக விரிந்த அரசியல் பார்வையொன்று அவசியமாகும் என்பதை நான் இந்த இடத்தில் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இதற்காக அரச மட்டத்தில் அல்லது அரச தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டுமென நான் முன்மொழிகின்றேன்.

நடப்பு வருடத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கைக்கு வழங்குவதற்கு இலங்கை மீது கொண்ட விசுவாசத்திற்காக நான் ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல் மூலம் ஒருமித்து முடிவுகளை மேற்கொண்டு எமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நாம் எம்மாலான முயற்சிகளை எடுப்போம் என்றும் ஜனாதிபதி கூறினார்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் – அரசாங்கம் தீர்மானம்

091009puttirasigamani.jpgதடுத்து வைக்கப்படடுள்ள தமிழ்க் கைதிகளை விசாரிக்க விசேட நீதிமன்றமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ்க் கைதிகளுக்கு இதன் மூலம் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்;.

கைதிகளின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களின் விடுதலைக்கு விரைவில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இந்த நீதிமன்றம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு ஏற்ப 10 சட்டத்தரணிகளை நியமித்து கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட இருப்பதாகவும் இதன் மூலம் சிறைகளில் உள்ள தமிழ் கைதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாம்களை விட்டும் 58 ஆயிரம் பேர் வெளியேற்றப்படுவது பற்றி எனக்குத் தெரியாது! அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

anura_priyadarshana_yapa.jpgஇரு வார காலத்துக்குள் 58 ஆயிரம் பேர் முகாம்களை விட்டு வெளியேற்றப்படுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளமை பற்றி தனக்கு எதுவும் கூறமுடியாதென அமைச்சசவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே  அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

தமிழக எம்.பிக்கள் குழுவினர் முதல்முறையாக இலங்கை வந்துள்ளனர். வடக்கிலுள்ள அகதி முகாம்களைப் பார்வையிடவும் அம்மக்களோடு கதைக்கவும் நாம் அக்குழுவினருக்கு பூரண சுதந்திரம் வழங்கினோம்.

சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு ஆரோக்கியமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதென்பதை நாம் அக்குழுவினருக்கு எடுத்துரைத்தோம்.

எனினும் இக்குழுவினரின் வருகை சிலருக்கு பெரும் மனவேதனையை அளித்துள்ளதென்பதை நாம் அறிகிறோம். இதனால்தான் அவர்கள் இக்குழுக்களின் வருகையை கொச்சைப்படுத்தும் வகையில் பொய்த்தகவல்களை வெளியிட்டுவருகின்றர் என்றும் அமைச்சர் கூறினார். 

மனோ கணேசனின் கூற்று விந்தையானது! அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

இலங்கை நிவாரணக் கிராமங்களிலுள்ள குறைபாடுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்குப் புரியாது ஏனெனில் அவர்களும் இலங்கையர்களைப் போன்றவர்களே. இது பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கே நன்கு புரியும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை விந்தைக்குரிய விடயம் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அயராத முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதற்கு பலர் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்காலத்தில் உயர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அகதிகளை கௌரவமான முறையில் கவனிப்பதற்கே அரசாங்கம் விரும்புகின்றுது. அத்துடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நான்கு மாத காலத்தில் மூன்றரை இலட்ச மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பது மிகவும் சிரமமான காரியமாகும். எனினும் அரசு இயன்றளவில் அந்த சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

தீபாவளி கொண்டாடினார் ஜனாதிபதி ஒபாமா!

obama.jpgஜனாதிபதி பரக் ஒபாமா அமெரிக்காவில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடி வரலாறு படைத்துள்ளார். நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) உலக நாடுகளில் தீபாவளியைக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் என்றும் இல்லாதவாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இங்குள்ள ஈஸ்ட் ரூம் என்னும் பாரம்பரிய அறையில் விழா நடந்தது.
 
வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றினார். ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை படித்தார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 
இவ்விழாவில் இந்திய அதிகாரிகள்,  இந்திய சமூக பிரதிநிதிகள் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.