மனோ கணேசனின் கூற்று விந்தையானது! அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

இலங்கை நிவாரணக் கிராமங்களிலுள்ள குறைபாடுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்குப் புரியாது ஏனெனில் அவர்களும் இலங்கையர்களைப் போன்றவர்களே. இது பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கே நன்கு புரியும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை விந்தைக்குரிய விடயம் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அயராத முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதற்கு பலர் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்காலத்தில் உயர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அகதிகளை கௌரவமான முறையில் கவனிப்பதற்கே அரசாங்கம் விரும்புகின்றுது. அத்துடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நான்கு மாத காலத்தில் மூன்றரை இலட்ச மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பது மிகவும் சிரமமான காரியமாகும். எனினும் அரசு இயன்றளவில் அந்த சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *