தமிமீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! இங்கு காட்டாற்று வெள்ளம் போல் கூடியிருக்கும் புலம் பெயர்ந்த என் அன்பார்ந்த தமிழீழ மாக்களே! கொள்ளையானந்தன் பேச வருகிறான் என்றதும் விசிலடிப்பதற்கு என்றே வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் சிரமத்தையும் பாராமல் பிரித்தானியா பாராளுமுன்றலில் கூடியிருக்கும் மாணவப் பெருந்தகைகளே! தேசியத் தலைவர் வழிகாட்டலில் வன்னியில் ஒரு சந்ததியே அழிந்தபின் ஆமிக்காரன் சரணடைய வைத்துச் சுட்டுக் கொன்றோ அன்றி சபாரத்தினம் பத்மநாபா ராஜினி திரணகம போன்றோரைக் கொன்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொன்றோ மரணித்துப் போன அண்ணையின்ரை இடத்தை நிரப்பி லண்டனில் இருந்தபடியே தமிழீழம் வாங்கித் தர வந்திருக்கும் எங்கள் தலைவி மேதகு ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதிலே நான் பெருமைப் படுகிறேன்.
இங்கு தேசியத் தலைவரைப் போல போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் தலைவி எப்படிப் பட்டவர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. சிங்கள வெறியர்களுக்கு நான் ஒன்றைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் தேசியத் தலைவி ஜனாவின் கோபத்துக்கு ஆளாகி விடாதீர்கள். ஜரோப்பிய பாராளுமன்றத்தில் தன்னம் தனியாக நின்று தமிழீழம் அமைக்கப் போகும் எங்கள் மேதகு தலைவி சொன்னால் வவ்வால் வரும். எப்படி வரும்……. (மாணவர்கள் விசிலடிக்கிறார்கள்.)
தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் தொடங்கியபோது யாழ் லோதிக்க மேட்டுக் குடி மக்களுக்கே உரிய பாணியில் எங்கள் தலைவி சிம்பாப்வேக்கும் பின்னர் நைஜீரியாவுக்கும் தனது பெற்றோருடன் சென்றது எதற்காக? 24 மணி நேரமும் தமிழீழம் எப்படி அமைக்கலாம் என்று சிந்திப்பதற்காகவே என்பது இங்கு நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க் கட்சியினர் சொல்வது போல 30 ஆண்டுகள் நடந்த போராட்த்தில் ஒரு சிறு பாதிப்புக் கூட படாமல் எங்கள் தலைவி தப்பியிருந்தது சொகுசாக வாழ்வதற்கல்ல. தமிழ் மக்களை அண்ணை அம்போ என்று கைவிடும் போது ஓடிவந்து காப்பாத்துவதற்காகவே.
துப்பாக்கிச் சூட்டுக்கும் குண்டு மழையிலும் சிறிலங்கா இராணுவத்தின் அட்டூழியத்திலும் தமிழ் மக்கள் 30 ஆண்டுகள் சீரழிந்த போது தலைவி தமிழீழம் கட்டுவதற்கான படிப்புக்கள் அத்தனையையும் படித்துக் கொண்டு இருந்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அவரின் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைப் பாருங்கள். அதிலே எழுத்துக்களை மாத்திப் போட்டு எம் பி ஏ என்றெல்லாம் படித்திருக்கிறார். அதன் அர்த்தம் பரியாதவர்கள் தலைவி ஏதோ தப்பி ஓடிப் போய் வெளிநாடுகளில் வாழ்ததாகவும் அவருக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதர் போலும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் இரண்டு சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வேட்பாளராவது இந்தத் தேர்தலில் தனது குவாலிவிக்கேசனைக் காட்டியிருக்கிறர்களா. தலைவியைத் தவிர வேறு யாராவது குவாலிவிக்கேசனைக் காட்டியிருந்தல் நான் இந்த மேடையிலேயே தீக்குளிக்கத் தயார்.
அடுத்தது தலைமை என்பது யாழ்ப்பாணத்திலிருந்து வரவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி ஆகையால் எங்கள் தானைத் தலைவி கரிகாலி சோழத்து வீராங்கனை தமிழீழ தேசியத் தலைவி ஏகத் தலைவி ஜன ஜநநாயகத்துக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இதுவே வன்னியா இருந்தா கேக்கிற விதமே வேறை. முல்லைத்தீவில பார்திருப்பீங்கள் எங்கட அண்ணைக்கு வன்னி மக்கள் மண்மூட்டையா நின்றவை. எங்கட விரோதிகள் சொல்லினம் நாங்கள் பலவந்தமா வைச்சிருந்தது என்று. அதில ஒரு துளியும் உண்மையில்லை. வன்னி மாக்கள் அடங்காப்பற்றுடையவர்கள். அவர்களை ஒரு கட்டு வைக்கோலோடு மேய்க்கலாம். தெரியும் தானே கடைசியா அந்தச் சனத்துக்கு தவிடு கரைச்சுக் குடுத்த நாங்கள். இது லண்டனா இருக்கிறபடியா உங்களை எல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து எங்கள் தலைவிக்கு வாக்களியுங்கள்.
ஜரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு விதி இருக்கிறது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. தனித்த வேட்பாளர் அதுவும் லண்டனில் நின்று ஜெயிக்கும் ஒரு வேட்பாளர் எழுந்து எங்களுக்கு தமிழ் ஈழம் வேணும் என்று பேசிவிட்டால் அதுவும் தீபம் ஜிரிவி போன்ற தெல்லைக் காட்சிகளில் அம்ணி பேசும் தங்கிலிஸ் தமிழில் பேசிவிட்டால் உடனே ஒரு பையினுள் போட்டு கையோடு தமிழீழத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. சிம்பாப்வே நைஜீரியா பிறகு லண்டன் அதுவும் டபுள் எம்மே படிச்ச ஒரு தலைவி கேட்கும் போது ஜரோப்பியப் பாராளுமன்றமே அதிரப் போகின்றது என்பதை நான் உங்கள் முன் செல்லிக் கொள்வதில் அடங்காத் தமிழன் என்ற முறையில் மார்தட்ச் சொல்லுவேன்.
தயவு செய்து ரத்தத்தில் பொட்டு வைக்க வருபவர்கள் வரிசையாக வந்து தலைவிக்கும் எனக்கும் வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மங்கையக்காவுக்குப் பிறகு ரத்தப் பொட்டு வைக்கிற வீர விளையாட்டுகள் அமந்து போச்சுது. இப்ப எங்கட தானைத் தலைவி வெளிக்கிட்டு இருக்கிறா அவவுக்கு உங்கட வீர விளையாட்டை நீங்கள் காட்டலாம். ஒரு சிறிய வேண்டுகோள். தலைவிக்கு பொட்டுவைப்பவர்கள் குறைந்த பட்சம் சவுத்பாங்க் பல்கலைக் கழகத்திலாவது குவாலிவிக்கேசன் எடுத்திருக்க வேண்டும். அம்மணி இம்பீரியல் எம்மே.
வணங்கா மண் புகழ் டாக்குத்தர் தமிழ் போறம் தலைவர் ஒரு பேப்பர் புகழ் அண்ணன் கோபி என்று எனக்குப் பின் நிறையப் பேர் உங்களுக்கு தமிழீழம் எப்படி எடுப்பது அதற்ககு நீங்கள் எப்படிக் காசு கொடுப்பது. பிறகு நாம் அதை எப்படிப் பிரிப்பது என்து பற்றியெல்லாம் விபரமாகப் பேச இருப்பதால் என் பேச்சை நான் சுருக்கிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.
அதில குறிப்பா வணங்கா மண் டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வன்னிப் பேரவலத்தை வைச்சு சேர்த்த காசு வாய்கால் வழியோடி மெற்றோவில விளம்பரம் நோட்டிசுகள் போஸ்ரருகள் என்று நிறையச் செலவாச்சு. இதெல்லாம் எதுக்கு வன்னி மக்களுக்காகத் தானே செய்கிறோம். அவர்களுக்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்காமல் எங்கள் தலைவி ஜனா ஓயமாட்டார் என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழீழம் தொடர்பாக பேசும் போது அப்பனை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்து பின்னர் தமிழீழ உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்தார் என் அப்பா என்று கதையளந்த மாபெரும் தத்துவப் பாடகி தற்போது பிச் கிச் என்று எதுகைமோனையுடன் தவைலிக்காக பாடி தனது தலைவிக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கும் மாயா செல்லத்துக்கு இந்தக் கூட்டத்திலே என் இதயத்தைத் தொட்டு நன்றி கூறிக் கொள்கிறேன்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஜனனிக்கு போடுங்கோ. புலம் பெயர் சூழலில் இருக்கும் லண்டன் வாழ் தமிழ் மக்களே தயவு செய்து எங்கள் தலைவி ஜன ஜநநாயயகத்திற்கு போடுங்கோ. வணங்கா மண்ணிலை சுருட்டினது போதாது. கண்ணிர்த் துளிகளில் சேர்ந்தது போதாது. இன்னும் வேணும். அதுக்ககாகவே தேசியத் தலைவர் செத்த செய்தியைக் கூட இன்னும் மறைத்துக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறோம். தமிழீழம் வாங்கித் தருவா எங்கடை அக்கா. தயவு செய்து குவாலிவிக்டீகசன் உள்ளவை 10 மணிக்கு முதலும் மற்றவை எல்லாம் 10 மணிக்கு பிறகும் அக்காவுக்கு நேரே பார்த்துப் போடுங்கோ. தமிழீழம் மலரும், ஒரு கேள்வி ஜரோப்பியப் பாராளுமன்றத்தில் கேட்டா போதும். மறு நாளே தமிழீழம் மலரும். மறக்காம நாளைக்கு அக்காவின்யைப் பாத்துப் போடுங்கோ.
மம்மி ஜெய தமிழீழம் வாங்கித் தாறம் என்று வெளிக்கிட இந்தியாக் காரங்கள் எங்கள் முதுகில் குத்திப் போட்டாங்கள். மம்மியை மண் கவ்வ வைச்சிட்டான்கள். மம்மி வருவா ஆசை முத்தம் தருவா என்று பார்திருந்த அண்ணனுக்கு விதி சதி செய்துவிட்டது. மம்மி ஜெயா போனால் என்ன அக்கா ஜனா இருக்கின்றா என்பதை மறந்துவிட வேண்டாம்.
இந்த அரசுகளை நம்ப முடியாது இந்த மாக்களையும் நம்ப முடியாது. போன வருசம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு லண்டனிலை ஒன்பது பேரைத் தெரிவு செய்தவை. ஆனா இந்த வருசம் 8 ஆக குறைச்சுப் போட்டான்கள். 9வது ஆக ஒரு தமிழன் ஏகபிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்று திட்டம் போட்டுச் செய்த சதி இது. இதுக்கு எதிராக நாங்கள் கிளர்ந்து எழ வேண்டும். ஒன்றை மறக்கக் கூடாது வோட்டு போடுற ஆக்களில் 8 வீதம் பேராவது வாக்களித்தால் தான் 8வது இடத்திற்கு வந்து கடைசிக் கதிரையையாவது பிடிக்கலாம். ஆனபடியா அக்காவை வடிவாப் பாத்து அக்காவுக்கு நேர உங்கள் புள்ளடியைப் போடுங்கள். குறைஞ்சது போடுற வோட்டில 2 வீதம் அதாவது 40,000 க்கும் கூடுதலாக அக்காவுக்கு புள்ளடி விழுந்தால் தான் கட்டுக்காசு 5000 பவுண் என்றாலும் கிடைக்கும். வன்னி மக்களுக்காகச் சேர்த்த காசு தயவு செய்து அதை நாசமாகப் போகவிடாதீர்கள். இன்று (யூன் 4) போடுங்கள் வோட்டு அக்காவைப் பாத்து. அக்காவா கொக்கா!!!
நன்றி வணக்கம்.