கல்வியியல் கல்லூரிகளில் 2006/2008 கல்வி ஆண்டுகளில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து கற்பித்தல் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளவர்களை மாகாண அரச சேவைத் திட்டத்தின் கீழ் ஆசிரியராக வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகஷ்ட மற்றும் கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஜூன் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணியிலிருந்து வவுனியா மேலதிக மாகாணக் கல்விப் பணிமனையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் புகைப்படப் பிரதிகளுடன் தெரிபட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய ஆவணம், பிறப்புச் சான்றிதழ், க.பொ.த.சா/த., க.பொ.த.உ/த சான்றிதழ்கள், இறுதியாகக் கற்ற பாடசாலை அதிபர், கிராம சேவையாளர் மற்றும் ஒருவரின் சான்றிதழ்கள், பிரதேச செயலாளர், கிராம சேவையாளரின் குடியியல் நிலையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் விசேட தகைமைகள் இருப்பின் அவற்றை நிரூபிக்கும் சான்றிதழ் ஆகியவற்றை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் தேசியக் கல்வியியல் கல்லூரியில் அனுமதி பெறுவதற்குச் சமர்ப்பிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் மாவட்ட ரீதியாக வருமாறு:
வவுனியா மாவட்டம் ஆங்கில மொழி மூலம்
1.ஜானகி அருணாசலம், 2.ஷோபா தெய்வேந்திரராசா,3.மேரி ஜெனிஸ்ரா ஆரோக்கியநாதன், 4.நிருபா தியாகராஜா.
முல்லைத்தீவு மாவட்டம் தமிழ்மொழி மூலம்
1.சிவசிதம்பரம் மாதீசன், 2.சந்திரகலா ஞான சுந்தரலிங்கம், 3.சிவகௌரி சிவசுப்பிரமணியம், 4.ராஜயந்தினி தர்மலிங்கம், 5.சுகன்யா மகேந்திரன், 6.ராதிகா சிவசுப்பிரமணியம், 7.சலமன் நியூட்டன்.
மன்னார் மாவட்டம் தமிழ்மொழி மூலம்
1.பிரான்ஸிஸ் அருள்ஜெயந்தன், 2.செல்வி புரூனே ஜீவன்தாஸ் பெர்னாண்டோ, 3.சூசைப்பிள்ளை சுதாகரன், 4.குமுதினி வேலாயுதம்
5.செல்வநாயகி முத்துசாமி, 6.தோமஸ் செரின் இவோன்ஸியா, 7.வினோதினி ஆதிரையம்பிள்ளை, 8.கனகரட்னம் குமரன்
9.செல்வி ஆகஸ்டின் அருள்ரூபன், 10.டனிஸ் வசந்தகுமார் பிரான்ஸிஸ், 11.அந்தோனி சந்தியோகு மேரி டயனா குரூஸ்.
கிளிநொச்சி மாவட்டம் தமிழ்மொழி மூலம்
1.பொன்னுத்துரை பிரகலாதன், 2.விஜயலட்சுமி விநாயகமூர்த்தி, 3.சந்திராதேவி ஸ்ரீலட்சுமிரஞ்சன், 4.குமணரஞ்சனி வல்லிபுரம், 5.சுஜந்தினி சுகுமாரன், 6.வீரசிங்கம் மயூரதன்.
வவுனியா மாவட்டம் தமிழ்மொழி மூலம்
1. பாலதர்சினி பாலசுந்தரம், 2.தர்ஷிகா பரமேஸ்வரன், 3.இளையதம்பி சுமித்ரா, 4.இராஜேந்திரன் இளங்கீரன், 5.சண்முகநாதன் செந்தூர்செல்வன், 6.பாத்திமா சித்தாரா, 7.இளையதம்பி ரவிச்செல்வன், 8.ஜசிந்தா குமாரகுலசிங்கம், 9.மீரா கந்தையா, 10.சுபனிக்கா சந்திரசேகரம், 11.பரராசசிங்கம் சுதர்சன்
12.தவயோகினி தவராசன், 13.யசிந்தா வேலுப்பிள்ளை, 14.ராமஞ்ஞனா ராமலிங்கம்
15.இராஜரட்ணம் காண்டீபன், 16.யாழினி குணபாலசிங்கம், 17.தட்சாயினி சுப்பிரமணியம், 18.செல்வரட்ணம் ஸ்ரீதேவகரன், 19.திலகராஜன் சுசந்தன், 20.மார்க்கண்டு கேசவன், 21.மரியராமசூரியர் திசரூபன், 22.செல்வி இடா வில்ஸன், 23.ஸ்ரீதரன் கீர்த்தனா, 24.ஆர் ரேனிதா, 25.விமலராணி இமானுவேல், 26.ரெஜீபா
27.சியாமளா டேவிட், 28.மேரி ஜெனிற்றா விசுவாசம்.