June

June

இலங்கையில் மட்டக்களப்பில் தங்கியிருந்த சம்பூர் அகதிகள் மூதூர் கிளிவெட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

இலங்கையின் கிழக்கே மூதூரில் சம்பூர் பிரதேச உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இருப்பிடங்களை இழந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களில் முதற்கட்டமாக ஒரு தொகுதியினர் மூதூர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி அகதி முகாமுக்கு அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 750 குடும்பங்களைச் சேர்ந்த 2700க்கும் மேற்பட்டவர்கள் 11 அகதி முகாம்களில் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாகத் தங்கிவருகிறார்கள்.

மூன்று முகாம்களை மூடிவிட்டு அங்கிருந்தவர்களை கிளிவெட்டிக்கு அனுப்பிவைக்க அதிகாரிகள் முன்னர் செய்திருந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை.

சில குடும்பங்கள் சுய விருப்பத்தின் பேரில் சென்றிருந்தாலும் பல குடும்பங்கள் கட்டாயத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியேற்றப்பட்ட பலரும் கூறுகின்றனர்.

எனினும் மக்கள் பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட்டதாக சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீள் குடியேற்றப் பிரிவு இணைப்பு அதிகாரியான அருணாசலம் செல்வேந்திரன் மறுத்துள்ளார்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம் World Day to Combat Desertification and Drought – புன்னியாமீன்

2009-world-day-to-combat-desertification.png1994ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜுன் 17ஆம் திகதி முதல் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1995ஆம்ஆண்டு ஜனவரி இலக்கம் A/RES/49/115 பிரகடனப்படி (January 30, 1995 by the United Nations General Assembly resolution A/RES/49/115) பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் ( PARTIES)  அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன்  செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் 11ஆவது வருடாந்தக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு,  பொருளாதார உதவி மற்றும் இம்மிலேனியத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.வரட்சி நிலத்தில் நிலச் சிதைவுகள் ஏற்படும் பிரச்சினையைப்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட  சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும். இதில் தற்போது 191 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பாலைவனமாதலை உதாரணப்படுத்தக்கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இருக்கும். அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலைநில பகுதியில் சில நீரூற்றுகள் காணப்பட்டதாக தெரிய வருகின்றது.தற்போது அந்நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது.இது மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தின் போது,  பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும் உணர்வூட்டுவதற்கானதுமான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும்.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும். பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன்,  நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது. இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம்,  மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு,  காடுகளை அழித்தல்,  அதிக அளவில் வாகனங்கள்,  பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல்,  குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல்,  வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.மக்கள்தொகைப் பெருக்கம்,  தொழில் வளர்ச்சி,  காடுகளை அழித்தல்,  அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம்,  சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே,  இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம்,  தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும்,  அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.டஇத்தகைய நிலைகளையும் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெண்களுக்கு சிறப்பான முறையில் இதற்கெதிராகப் பாங்காற்ற முடியும் எனக்கூறப்படுகின்றது. குறிப்பாக வளர்முக நாடுகளின் கிராமப்புறப் பெண்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே இதற்கெதிரான நடைமுறைகள் பற்றிய நிகழ்வுகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள பல அமைப்புக்கள் முனைகின்றது.

‘நிலம் சிதைவடைவதற்கெதிரான செயற்திட்டம் ஒன்று பத்து வருடம் மெற்றிக் நகரில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலைவனமாவதற்கும்,  வரட்சிக்கும் எதிரான தினம்  பற்றி நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்”என ஐ.நா.சபை செயளாலர் நாயகம் “பாங்கி-மூன் தமது செய்தியில் தெரிவித்தார்.இத்தினத்தின் வரட்சி நிலப்பிரச்சனையை சர்வதேச சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளடக்க முனைகின்றனர். தனிப்பட்டவர்களும்,  அமைப்புக்களும் அவுஸ்திரேலியா, அல்ஜீரியா, கனடா,  சீனா,  கானா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் சமீபகாலத்தில் இதுசம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தினத்தில் மாத்திரம் பாலைவனமாதல் பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுவது போதுமானதல்ல.அல்ஜீரியா போன்ற நாடுகள் பாலைவனமாதலை எதித்துப்போராடவும்,  விவசாய நிலங்களைப்பாதுகாக்கவும் பிரேசில் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் ஒரு தேசிய திட்டத்ததை செயற்ப்படுத்தியுள்ளது.லெபனானில்; விவசாய பாதிப்புக்கெதிரான பல முக்கிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாலைவனமாதல் மற்றும் வரடசிக்கெதிரான போராட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுகின்றன.

இத்தினம் ஒரு பொது விடுமுறைதினமல்ல. பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்டதினத்தில் மக்களில் பொது வாழ்வு பாதிக்கப்படுவதில்லை. இங்கு போராட்டம் எனும் போது விழிப்புணர்வு நடவடிக்கையே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இத்தினம் தொடர்பான கருப்பொருட்கள் வருமாறு:-

2009 – Conserving land and water = Securing our common future
2008 – Combating land degradation for sustainable agriculture
2007 – Desertificaton and Climate Change – One Global Challenge
2006 – The Beauty of Deserts – The Challenge of Desertification
2005 – Women and Desertification
2004 – Social Dimensions of Desertification: Migration and Poverty

2006 – International Year of Deserts and Desertification (IYDD)

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0617-world-day-to-combat-desertification.html

கொழும்பு மறை மாவட்ட பேராயராக மெல்கம் ரஞ்சித்

16062009.jpgகொழும்பு மறைமாவட்டப் புதிய பேராய ராக கலாநிதி மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார். கொழும்பு பேராயர் பேரரு ட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை ஓய்வுபெற்றதையடுத்தே புதிய பேராயராக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள வத்திக்கான் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்  இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என  தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் என உதவித் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில்; போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் அதன் கட்டுப்பணத்தை அந்தந்த மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி நன்பகல் 12.00 மணி வரை செலுத்த முடியும் எனவும் இது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த 3ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

சாவகச்சேரி, நெல்லியடியிலிருந்த அகதிகள் கொடிகாமத்துக்கு மாற்றப்பட்டனர்

சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த 2700 வன்னி அகதிகள் கொடிகாமம் இராமா புனர்வாழ்வு கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் 600 தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டிருப்பதால் இவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் பின்னர் இராமா கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

இப்புனர்வாழ்வுக் கிராமத்தில் கூட்டுறவுச்சங்க கிளைகள், சமூக மண்டபங்கள், படிப்பகம் , விளையாட்டு மைதானம், தொழில் பயிற்சி பெறுவதற்கான நிலையங்கள், தற்காலிக பாடசாலைகள் என்பன நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக தொலைபேசி, தபால், வங்கிச்சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இருந்தும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்தும் வெளியேறியதையடுத்து இப்பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டிடத்தில் இயங்கவுள்ளன. பாடசாலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரப்பகுதியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு – பாதுகாப்பு அமைச்சு தகவல்

gothabaya7777.jpgஇலங் கைக்கான அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகர் கெதிக்ளுக்மன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையிலான இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இடம் பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருதை தந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் பிரதி பிரதம அதிகாரி ரியட் அட்மிரல் டேவிட் தோமஸ்,  வடக்கு மற்றும் தெற்காசியாவுக்கான சர்வதேச திட்டப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கார்பிஸ் எவகியன் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு அதிகாரி கெப்டன் ஜொனதன் மீட் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.  

இதேவேளை,  அவுஸ்திரேலிய கடற்படையின் உயர் அதிகாரிகள் குழு பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவை கொழும்பிலுள்ள கூட்டு நடவடிக்கைத் தலைமையத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அகதிகளுக்கு போதிய மலசலகூட வசதி வழங்காததற்கு ஐ.நா.வே பொறுப்பு – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

வவுனியா முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு போதியளவுக்கு மலசலகூட வசதிகளை வழங்காததற்கான பொறுப்பை ஐ.நா.வே ஏற்கவேண்டும் என்று மீள்குடியேற்ற விவகார அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ளோரின் அரைவாசிப் பகுதியினருக்கே மலசலகூட வசதிகள் உள்ளதாகவும் குளிக்கும் வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் ஐ.நா.தெரிவித்திருந்தது.ஆனால், ஐ.நா.வுக்கு அரசாங்கத்தின் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக வசதிகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நிதியுதவி ஐ.நா.வுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான “சந்தேசிய’விற்கு கூறியுள்ளார். தாமதம் அவர்கள் தரப்பிலேயே(ஐ.நா.) உள்ளது. அதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல என்று ரிசாட் கூறியுள்ளார்.

இதேவேளை, முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது அசாதாரணமானதல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் முதியவர்களும் சிறுவர்களுமே என்று சமூகசேவைகள் பிரதியமைச்சர் லயனல் பிரேம சிறி பி.பி.சி.க்கு கூறியுள்ளார். “அதனால் முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது இயற்கையானதே’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

முதியவர்களை மீளக்குடியமர்த்தும் பொறுப்பை இராணுவத்திடமிருந்து பொலிஸார் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அதேசமயம், முகாம்களின் நிலைமை சிறப்பாக இல்லையென்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

சொந்த வீடுகள்,தோட்டங்கள் போன்று நிலைமை இல்லை. ஆயினும் நாம் அவர்களுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வயது முதிர்ந்தவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் விடயத்தில் அரசாங்கம் மிகக் கவனத்துடன் இருப்பதாகவும் ஏனெனில் உறவினர்களால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள கணிசமான அளவு மக்களுக்குப் பிராந்தியத்தில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களை வெளியேற அனுமதித்தால் அவர்கள் உறவினர்களுடன் தங்கியிருக்க முடியும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி 10-60 வயதுக்கு இடைப்பட்டவர்களை முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிப்பதை அரசு தடைசெய்துள்ளது.60 வயதுக்கு மேற்பட்டோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.

பன்றிக்காய்ச்சல்; 76 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

who_logo.jpgஉலகை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் நோய் 76 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.  மேலும் இந்த நோயால் 35, 928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் 163 பேர் பலியாகியுள்ளனர்.

இங்கிலாந்தில் 1,226 பேரும், அவுஸ்திரேலியாவில் 1,823 பேரும் சீனாவில் 318 பேரும் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் நோய் தற்போது மொராக்கோ, மேற்கு கரை மற்றும் காசா கரையோரப்  பகுதிகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
 

வடக்கே கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளில் 2006/2008 கல்வி ஆண்டுகளில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து கற்பித்தல் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளவர்களை மாகாண அரச சேவைத் திட்டத்தின் கீழ் ஆசிரியராக வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகஷ்ட மற்றும் கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஜூன் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணியிலிருந்து வவுனியா மேலதிக மாகாணக் கல்விப் பணிமனையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் புகைப்படப் பிரதிகளுடன் தெரிபட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய ஆவணம், பிறப்புச் சான்றிதழ், க.பொ.த.சா/த., க.பொ.த.உ/த சான்றிதழ்கள், இறுதியாகக் கற்ற பாடசாலை அதிபர், கிராம சேவையாளர் மற்றும் ஒருவரின் சான்றிதழ்கள், பிரதேச செயலாளர், கிராம சேவையாளரின் குடியியல் நிலையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் விசேட தகைமைகள் இருப்பின் அவற்றை நிரூபிக்கும் சான்றிதழ் ஆகியவற்றை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் தேசியக் கல்வியியல் கல்லூரியில் அனுமதி பெறுவதற்குச் சமர்ப்பிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் மாவட்ட ரீதியாக வருமாறு:

வவுனியா மாவட்டம் ஆங்கில மொழி மூலம்

1.ஜானகி அருணாசலம், 2.ஷோபா தெய்வேந்திரராசா,3.மேரி ஜெனிஸ்ரா ஆரோக்கியநாதன், 4.நிருபா தியாகராஜா.

முல்லைத்தீவு மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1.சிவசிதம்பரம் மாதீசன், 2.சந்திரகலா ஞான சுந்தரலிங்கம், 3.சிவகௌரி சிவசுப்பிரமணியம், 4.ராஜயந்தினி தர்மலிங்கம், 5.சுகன்யா மகேந்திரன், 6.ராதிகா சிவசுப்பிரமணியம், 7.சலமன் நியூட்டன்.

மன்னார் மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1.பிரான்ஸிஸ் அருள்ஜெயந்தன், 2.செல்வி புரூனே ஜீவன்தாஸ் பெர்னாண்டோ, 3.சூசைப்பிள்ளை சுதாகரன், 4.குமுதினி வேலாயுதம்

5.செல்வநாயகி முத்துசாமி, 6.தோமஸ் செரின் இவோன்ஸியா, 7.வினோதினி ஆதிரையம்பிள்ளை, 8.கனகரட்னம் குமரன்

9.செல்வி ஆகஸ்டின் அருள்ரூபன், 10.டனிஸ் வசந்தகுமார் பிரான்ஸிஸ், 11.அந்தோனி சந்தியோகு மேரி டயனா குரூஸ்.

கிளிநொச்சி மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1.பொன்னுத்துரை பிரகலாதன், 2.விஜயலட்சுமி விநாயகமூர்த்தி, 3.சந்திராதேவி ஸ்ரீலட்சுமிரஞ்சன், 4.குமணரஞ்சனி வல்லிபுரம், 5.சுஜந்தினி சுகுமாரன், 6.வீரசிங்கம் மயூரதன்.

வவுனியா மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1. பாலதர்சினி பாலசுந்தரம், 2.தர்ஷிகா பரமேஸ்வரன், 3.இளையதம்பி சுமித்ரா, 4.இராஜேந்திரன் இளங்கீரன், 5.சண்முகநாதன் செந்தூர்செல்வன், 6.பாத்திமா சித்தாரா, 7.இளையதம்பி ரவிச்செல்வன், 8.ஜசிந்தா குமாரகுலசிங்கம், 9.மீரா கந்தையா, 10.சுபனிக்கா சந்திரசேகரம், 11.பரராசசிங்கம் சுதர்சன்

12.தவயோகினி தவராசன், 13.யசிந்தா வேலுப்பிள்ளை, 14.ராமஞ்ஞனா ராமலிங்கம்

15.இராஜரட்ணம் காண்டீபன், 16.யாழினி குணபாலசிங்கம், 17.தட்சாயினி சுப்பிரமணியம், 18.செல்வரட்ணம் ஸ்ரீதேவகரன், 19.திலகராஜன் சுசந்தன், 20.மார்க்கண்டு கேசவன், 21.மரியராமசூரியர் திசரூபன், 22.செல்வி இடா வில்ஸன், 23.ஸ்ரீதரன் கீர்த்தனா, 24.ஆர் ரேனிதா, 25.விமலராணி இமானுவேல், 26.ரெஜீபா

27.சியாமளா டேவிட், 28.மேரி ஜெனிற்றா விசுவாசம்.

இடம்பெயர்ந்தோருக்கு புளத்சிங்கள மக்கள் ரூ.15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

rizad_baduradeen1.jpgவடக்கி லிருந்து இடம்பெயர்ந்த தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக புளத்சிங்கள பிரதேச சபைப் பிரிவு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டன.

இந்த உணவுப் பொருட்களை புளத்சிங்கள பிரதேச சபைத் தலைவர் தேசபந்து துசித்த குலரத்ன தலைமையிலான குழுவினர் அண்மையில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் வைத்து அமைச்சர் றிஷாத்திடம் கையளித்தனர்.

இப்பொருட்களில் அரிசி, தேங்காய், பால்மா, சவர்க்காரம், புதிய உடைகள், குடிநீர், மருந்துப் பொருட்கள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியிருந்ததாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.