சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த 2700 வன்னி அகதிகள் கொடிகாமம் இராமா புனர்வாழ்வு கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் 600 தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டிருப்பதால் இவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் பின்னர் இராமா கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
இப்புனர்வாழ்வுக் கிராமத்தில் கூட்டுறவுச்சங்க கிளைகள், சமூக மண்டபங்கள், படிப்பகம் , விளையாட்டு மைதானம், தொழில் பயிற்சி பெறுவதற்கான நிலையங்கள், தற்காலிக பாடசாலைகள் என்பன நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக தொலைபேசி, தபால், வங்கிச்சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அகதிகள் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இருந்தும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்தும் வெளியேறியதையடுத்து இப்பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டிடத்தில் இயங்கவுள்ளன. பாடசாலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரப்பகுதியினர் மேற்கொண்டு வருகின்றனர்.