April

April

அத்தியாவசியப் பொருட்களுடன் ‘சிட்டி ஒப் டுப்லின்’ முல்லைத்தீவை அடைந்தது

1029 தொன் பொருட்கள் அடங்கிய ‘சிட்டி ஒப் டுப்லின்’ என்ற கப்பல் முல்லைத்தீவைச் சென்றடைந்துள்ளதாகக் கடற்படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இக்கப்பலில் மருத்துவ மற்றும் அவசர சுகாதார உடைகள் , கூடாரங்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட. – கிழக்கு தமிழர்கள் இணையத்தளத்தில் பதியும் நடமாடும் சேவைப் பிரிவு இன்று ஆரம்பம்

வடக்கு – கிழக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தென்பகுதிக்கு வந்துள்ள தமிழர்களை இணையத்தளத்தின் மூலமாகப் பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் இன்று ஆரம்பிக்கவுள்ளனர்.  அவசரகாலச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கான இணையத்தளம் இன்று வியாழக்கிழமை தொடங்கப்படும். அதேவேளை, இதற்கான நடமாடும் சேவைப் பிரிவு ஒன்றும் இன்று செயற்படத் தொடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இணையத்தளத்தை தொடங்கும் நிகழ்வு வெலிக்கடையில் உள்ள மகிந்தராம விகாரையில் இன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறவிருக்கின்றது.

உலகின் பொருளாதாரப் பிரச்சினை இலங்கையை பெருமளவில் பாதிக்காது – அமைச்சர் சரத் அமுனுகம நம்பிக்கை

pr-con-02042009.jpgஇலங்கையில் விவசாயம்,  சேவைகள், மற்றும் உற்பத்தி ஆகிய துறைகள் சிறப்பாக இயங்குவதால் உலகின் பொருளாதாரப் பிரச்சினை இலங்கையை பெருமளவில் பாதிக்காதென பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,  நாட்டின் விவசாயத்துறை முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிக நெல் அறுவடை கிடைத்துள்ளது.

கடந்த வருடம் உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோதும் அதன் தாக்கம் இலங்கையில் உணரப்படவில்லை. எமக்குத் தேவையான பால் 20 சதவீதமும் சீனி 16 சத வீதமுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த உற்பத்திகள் அதிகரிக்கப்படவேண்டும். எமது நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவனியை அதிகரிக்க புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

பார்வையற்றவர்களுக்கு வாக்களிப்பு வசதி

duglas_devanandass.jpg
பார்வையற்றவர்கள் தேர்தல்களின்போது வாக்களிப்பதற்காக நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரைத் தம்முடன் அழைத்துச் செல்லும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக  அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் பலி

g-20-landon.jpgலண்டனில் இன்று ஆரம்பமான ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது லண்டன் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் கலந்துகொண்ட 63 ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு மட்டக்களப்பில் “வார உரைகல்” பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்

vaarauraika.jpgகாத்தான்குடி பிரதேசத்தில் டீன் வீதியில் இருந்து வெளிவரும் ‘வார உரைகல்’ வார இதழின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லா இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று புதன்கிழமை இரவு 10.30மணியளவில் இவரது வீட்டுக்கு முகத்தை மூடியநிலையில் வந்த ஆயுதக்குழுவினர் இவர் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வீட்டுடன் இணைந்ததாகவுள்ள அலுவலகத்துக்குள்ளும் நுழைந்த ஆயுதக்குழுவினர் அங்கிருந்த கணணி உட்பட அலுவலக ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை அமைப்புச் செயலாளரின் பிரதிநிதி இன்று இலங்கை வருகிறார்.

walter_kaelin_.jpgஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் இடம்பெயர்ந்தோருக்கான மனித உரிமை அமைப்புச் செயலாளரின் பிரதிநிதியான வோல்டர் கீலின் இன்று இலங்கை வரவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.  இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வரும் ஐ.நா. பிரதிநிதி இடம்பெயர்ந்தோர் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் இங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதோடு இடம்பெயர்ந்தோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் பல்கலைக் கழக சட்ட பீடத்தின் யாப்பு மற்றும் சர்வதேச பொதுச் சட்டத்துறை பேராசிரியரான வோல்டர் கீலின்,  கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான மனித உரிமை அமைப்பு செயலாளரின் பிரதிநிதியாகக் கடமையாற்றுவதோடு இவ்வமைப்பின் உறுப்பினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புதுக்குடியிருப்பு பச்சப்புல்மூடை படையினரின் கட்டுப்பாட்டில் – பாதுகாப்பு அமைச்சு தகவல்

armyvictory.gifபுதுக் குடியிருப்புக்கு கிழக்காக அமைந்துள்ள பச்சப்புல்மூடை பிரதேசத்தை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினர் பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்றுப் பிற்பகல் பச்சப்புல்மூடையை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத புலிகள் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டுவிட்டு இங்கிருந்து தப்பிச்சென்றதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின்போது 19 எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்களையும் 19 ரி-56 ரக துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில் – படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு

wanni-operations.jpgஉயிர் நீத்த மற்றும் வலது குறைந்த நிலைக்குள்ளாக்கப்பட்ட படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில்களை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து இந்த புலமைப் பரிசில்களை கையளித்தது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்களை ஒன்றிணைத்து இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், இலங்கையில் படை வீரர்கள் அடைந்துவரும் வெற்றிகளைப் பாராட்டும் நோக்கில் சகல முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த அன்பளிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

யுத்த நிறுத்தத்துக்கு அரசு தயாரில்லை; மோதல் தவிர்ப்புகளே சாத்தியம்

krambukkela.bmp

புலிகள் அமைப்புடன் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற் கொள்ள அரசாங்கம் தயார் இல்லை என்றும், பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அவ்வப்போது மோதல் தவிர்ப்புக்களே மேற் கொள்ளப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. இந்தச் சொற்பிரயோகங்ளின் வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளாத சில வெளிநாட்டு ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆயுதங்களைக் கீழே வைத்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைதல், அல்லது தங்களின் பிடியிலுள்ள பொதுமக்களை விடுவித்தல் ஆகிய இரு மாற்று வழிகள் மாத்திரம் தற்பொழுது புலிகளுக்கு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட் டினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடை பெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:- புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வர சர்வதேச ரீதியில் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இராணுவ ரீதியில் புலிகள் 99 சத வீதம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதனை தற்பொழுது முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தற்பொழுது நாம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் பிடியில் சிக்கி அவதிப்படும் அப்பாவி பொது மக்களை வெளியேற அனுமதித்தாலே போதும். ஆயுதங்களை கீழே வைக்கும் விடயத்தையும், சரணடைய வைப்பதையும் எமது பாதுகாப்பு படையினர் கவனித்துக் கொள்வார்கள்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவது தொடர்பாக தகவல்கள் எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் படையினர் உடனடியாக அந்தப் பிரதேசத்தில் மேற் கொள்ளும் தாக்குதல் நடவடிக்கையை தற்காலிகமாக தவிர்த்துவிட்டு, வரும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கடந்த சில மாதங்களாக இதுபோன்ற தற்காலிக மோதல் தவிர்ப்புக்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற் கொண்டு முப்படைகளின் தளபதியான, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 48 மணிநேர மோதல் தவிர்ப்பு ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

நாங்கள் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள் வதன் காரணமாக இதுவரை 62157 பொது மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட் டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகி யோர் கலந்து கொண்டனர்.