வடக்கு – கிழக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தென்பகுதிக்கு வந்துள்ள தமிழர்களை இணையத்தளத்தின் மூலமாகப் பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் இன்று ஆரம்பிக்கவுள்ளனர். அவசரகாலச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கான இணையத்தளம் இன்று வியாழக்கிழமை தொடங்கப்படும். அதேவேளை, இதற்கான நடமாடும் சேவைப் பிரிவு ஒன்றும் இன்று செயற்படத் தொடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தை தொடங்கும் நிகழ்வு வெலிக்கடையில் உள்ள மகிந்தராம விகாரையில் இன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறவிருக்கின்றது.