உலகின் பொருளாதாரப் பிரச்சினை இலங்கையை பெருமளவில் பாதிக்காது – அமைச்சர் சரத் அமுனுகம நம்பிக்கை

pr-con-02042009.jpgஇலங்கையில் விவசாயம்,  சேவைகள், மற்றும் உற்பத்தி ஆகிய துறைகள் சிறப்பாக இயங்குவதால் உலகின் பொருளாதாரப் பிரச்சினை இலங்கையை பெருமளவில் பாதிக்காதென பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,  நாட்டின் விவசாயத்துறை முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிக நெல் அறுவடை கிடைத்துள்ளது.

கடந்த வருடம் உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோதும் அதன் தாக்கம் இலங்கையில் உணரப்படவில்லை. எமக்குத் தேவையான பால் 20 சதவீதமும் சீனி 16 சத வீதமுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த உற்பத்திகள் அதிகரிக்கப்படவேண்டும். எமது நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவனியை அதிகரிக்க புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    Neither Zimbabwe nor North Korea will be affect by the economic downturn. We are glad to have gone below the potential threshold of impact. Yey!

    Reply