16

16

ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் நிலை குறித்து நாளை இந்தியா அறிவிக்கும்?

tna_.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையால் எழுந்துள்ள நிலை குறித்து விவாதிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்பிக்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அழைப்பு விடுத்திருந்தார்.  இந்த அழைப்பை ஏற்று இலங்கை தமிழ் எம்பிக்கள் சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா.சம்பந்தன் ஆகியோர் நேற்று (15.04.09) விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார்கள். இன்று (16.04.09) அவர்கள் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்துப் பேசினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தமிழ் எம்.பி.க்கள், ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் நிலை குறித்து நாளை இந்தியா அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்கள்.

போர் இடைநிறுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் மீதான பிடியை புலிகள் மேலும் இறுக்கமாக்கியுள்ளனர் – ஐ.நா. சபையில் ஜோன் ஹோம்ஸ் விளக்கம்

sirjohnholmes.jpgபுது வருடத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் இடைநிறுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் வெளியேறுவது முன்னரை விட மிகவும் குறைவடைந்துள்ளது. புலிகள் பொதுமக்கள் மீதான தடையை மேலும் இறுக்கமாக்கியுள்ளதையே இது காட்டுகின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும் என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்; இலங்கை நிலவரங்கள் குறித்து ஐ.நா சபையில் விளக்கிக்கூறியுள்ளார்.

பொதுமக்கள் இந்தவிதத்தில் பிணை வைக்கப்படவோ அல்லது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படவோ கூடாது. எனவே புலிகள் தமது இந்த மனப்பாங்கை மாற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என மிகவும் வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வெளியேற விருப்பமாகவுள்ளனர் என்பது எந்தஅடிப்படையில் கூறப்படுகின்றது? என ஊடகங்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த திரு ஹோம்ஸ், ஐ நா முகவர் நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்,  எமது பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் புலிகளது பிடியிலிருந்து தப்பிவருகின்றபோது அவர்கள் தங்களது விருப்பத்தி;ற்கு மாறாகத் தடுத்துவைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு தப்பித்துவர முயற்சிப்போர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் மிக கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டு போரிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அல்லது கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசியல் காரணங்களுக்கெல்லாமம் அப்பால் மிகப் பெரும்பாலனவர்கள் தமது பாதுகாப்புக்கருதி வெளியேறி வரவே விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஐ. நா  யுத்தநிறுத்தமொன்றை கோருகின்றதா? என கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த அவர் யுத்தநிறுத்தத்தைப் பொறுத்தவரை பணயமாக வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகளுக்கு முறையானதும் அமைதியானதுமான ஒரு முடிவைக் கண்டதன்பின்னர் ஒரு மனிதாபிமான யுத்தநிறுத்தத்தைக் கோரி அதனையே ஒரு நிரந்தர நடைமுறையாக மாற்ற முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு

அத்தகையதொரு போர்நிறுத்தம் தற்போதைய சூழ்நிலையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையில   நாம் யதார்த்தமானதொன்றையே செய்ய முயறசிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

பிரபாகரன் பயன்படுத்திய வீட்டில் ஜனாதிபதி மஹிந்த

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிளிநொச்சிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இன்று காலை 6.00 மணிக்கு முதலில் கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு சிகிச்சை பெற்று வரும் படை வீரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

படையினரின் சேமநலன்கள் பற்றிக் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பின்னர் கிளிநொச்சியிலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிளிநொச்சியின் தற்போதைய நிலைமைகள் மற்றும் படை வீரர்களின் முன்னேற்ற விபரங்கள் என்பன தொடர்பாகவும் அறிந்துகொண்டார். எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகனைகள் மற்றும் யுத்த தாங்கிகள் உட்பட ஏனைய ஆயுதங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வீடு,  அலுவலகம் மற்றும் புலிகளின் சமாதான செயலகம் ஆகியவற்றையும் ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கட்டிடங்கள் மற்றும் மாநாட்டு மண்டபங்கள் என்பவற்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

பின்னர் படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,  பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகட்டும் எனப் பாராட்டுத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் புலிகளிடம் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இங்கு கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்குள்ளான இலங்கைத் தூதரகத்தின் சேதங்களுக்கு நட்டஈடு வழங்கத் தயார்: நோர்வே அரசாங்கம்

norwy-slhc.jpgஅண் மையில் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கத் தயார் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவருடன் அமைச்சா; ரிஷாட் சந்திப்பு.

rishad__usambassador.jpgஇலங் கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் பிளேக்,  மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இன்று காலை சந்தித்து உரையாடினார். வடக்கில் நலன்புரி நிலையங்களில் உள்ள பொது மக்களின் தேவைகள் குறித்தும் அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள் பற்றியும் இங்கு கலந்துரையர்டப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். 

வன்முறையுடன் முடிந்தது முதல் கட்ட தேர்தல்- 17 பேர் பலி

india-election.jpgஜார்க் கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் பெரும் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் முதல் கட்ட தேர்தல் வன்முறையுடன் முடிந்தது. 124 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நக்சலைட்கள் தங்களது கைவரிசையை சற்று பலமாகவே இன்று காட்டி விட்டனர்.

சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 17 பேர் உயிரிழந்தனர்.

கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தேர்தல் அமைதியாக நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பீகாரிலும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. இங்கு குறைந்த அளவிலான வாக்குப் பதிவே இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. இரு்பினும் கேரளாவில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

நக்சலைட்டுகள் ஆதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் 3 மணியளவிலேயே வாக்குப் பதிவு முடிந்து விட்டது. பிற தொகுதிகளில் 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது. முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடரும் செருப்பு கலாசாரம் – அத்வானி மீதும் செருப்பு வீச்சு

advanil000.jpgபாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார். கத்னி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால்,  அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை. பிடிக்காதவர்கள் மீது ஷூ,  செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி விட்டது. ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசப்பட்டது போல இப்போது இந்தியத் தலைவர்கள் மீதும் ஷூக்கள் வீச்சு தொடர் கதையாகியுள்ளது.

முதலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஷூ வீசினார், இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் நவீன் ஜிந்தால் மீது ஒரு முதியவர் செருப்பை வீசினார். இப்போது அத்வானி மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ப.சிதம்பரம் மீது காரைக்குடியில் உருட்டுக்கட்டை வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து புலிகளுக்கு மனவுறுத்தல்கள் கிடையாது -ஹிந்து பத்திரிகை கருத்து

the_hindu.jpgதாம் அழிவை நோக்கிச் செல்வதை அறிந்தும் மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் கனரக ஆயுதங்களுடன் நடமாடி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது தொடர்பில் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு மனவுறுத்தல்கள் எதுவும் கிடையாது என இந்தியாவின் ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதென இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தைப் பாராட்டும் வகையில் தீட்டப்பட்டிருந்த ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மனிதநேயத்துக்கான மோதல் தவிர்ப்பு வலயம் எனும் கருதுகோலையாவது அங்கீகரிக்க மறுப்பது,  அவர்கள் தங்களை எந்த மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்கின்றார்களோ அம்மக்களின் உயிர்கள் மற்றும் நலன்கள் என்பன தமது இந்தப் போலி விடுதலைப் போராட்டத்தில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

புலிகளின் பிடியிலிருந்து கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்த தமிழ் மக்களின் தொகை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இப்புள்ளி விபரம் தமிழ் மக்கள் அவர்களின் சுய விருப்பத்தின்பேரில் தம்மோடு இருப்பதாக புலிகள் கூறிவரும் பொய்ப் பிரச்சாரத்தின் யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேற விரும்பும் சிவிலியன்களை எந்தவித தடைகளுமின்றி தப்பிவர அனுமதிக்குமாறு புலிகளை நிர்ப்பந்திப்பதுமே தற்போதுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குரிய ஒரே தீர்வாகும் என்றும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாநகர சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

16042009.jpgகிழக்கு மாகாணசபை நாளை கொண்டு வரவுள்ள உள்ளூராட்சி சபை விசேட சட்ட மூலத்திற்கெதிராக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து வெளிநடப்புச் செய்ததுடன் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.

குருநகர் மீன் சந்தை 20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பம்!

f-m.jpgயாழ்ப்பாணம் குருநகர் மீன் சந்தை 20 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 வருட காலமாக இந்த சந்தை மூடப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் இதனை தங்களின் முகாமாகப் பயன்படுத்தி வந்தனர்.

பொதுமக்கள் பாவனைக்காக இந்தச் சந்தை நேற்று உத்தியோக பூர்வமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டதாக யாழ் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் மீன்பிடி அமைச்சு மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மீன்பிடி சங்கப் பிரதிநிதிகள்ää அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ் கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.