இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையால் எழுந்துள்ள நிலை குறித்து விவாதிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்பிக்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை தமிழ் எம்பிக்கள் சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா.சம்பந்தன் ஆகியோர் நேற்று (15.04.09) விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார்கள். இன்று (16.04.09) அவர்கள் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்துப் பேசினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தமிழ் எம்.பி.க்கள், ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் நிலை குறித்து நாளை இந்தியா அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்கள்.