March

March

ஜெயலலிதாவினால் இலங்கைத் தமிழரின் நிவாரண நிதிக்கு 2 கோடி 11 இலட்சம் ரூபா சேகரிப்பு

jayalalitha.jpgஇலங் கைத் தமிழரின் நிவாரண நிதிக்கு செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 2 கோடியே 11 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாவினைச் சேகரித்துள்ளது. இந்த நிதியினை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்டலக் குழுத் தலைவர் பிரான்சுவா ஸ்டாமிடம் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 9 ஆம் திகதி தமிழ் நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத மேடையில் ஈழத்தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட உண்டியல் வைக்கப்பட்டது. ஜெயலலிதா தன் சொந்த பணத்தில் இருந்து 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அத்தோடு அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்தார். வெளி மாவட்டங்களில் உண்டியல்களில் வசூலான தொகை சென்னை கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து வங்கி அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இந்த உண்டியல்கள் மூலம் 1 கோடியோ 11 இலட்சத்து 89 ஆயிரத்து 391 ரூபாய் 50 சதம் வசூலாகி இருந்தது.

கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ. 1 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ. 2 கோடியே 11 இலட்சத்து 89 ஆயிரத்து 391.50 ரூபாவுக்கு வங்கியில் டி.டி. எடுக்கப்பட்டது. இந்த நிதியை சங்கத்தின் மண்டல குழுத் தலைவர் பிரான் சுவா ஸ்டாமிடம் நிதியை ஜெயலலிதா வழங்கினார்.

யுத்தம் இடம்பெறும் பகுதியில் பிரபாகரன் படைத்தரப்பு தெரிவிப்பு

army-s-l.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போதும் வன்னியில் யுத்தம் நடைபெறும் பகுதியில் இருப்பதாகவும் அவர் நாட்டைவிட்டு வெளியேறவில்லையெனத் தாங்கள் கருதுவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிவிட்ட நிலையில், புலிகளின் தலைவர் இருக்கும் இடம்குறித்தும் அரசும் படைத்தரப்பும் பல்வேறு ஊகங்களையும் தெரிவித்துவந்தன.

தற்போது கூட அவர் தென்னாபிரிக்காவில் அல்லது மலேசியாவில் இருப்பதாகக் கூட ஊகங்கள் தெரிவிக்கும் நிலையிலேயே அவர் வன்னியில் யுத்த முனைப் பகுதியில் இருப்பதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  பிரபாகரன் தற்போதும் அங்கிருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிரபாகரன் அங்கிருப்பதாலேயே புலிகள் அங்கு கடும் எதிர்ப்பைக் காட்டி வருவதாகத் தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பைச் சுற்றிக் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. எனினும் படையினர் எப்போது புதுக்குடியிருப்பு நகரைக் கைப்பற்றுவார்களெனக் கூற முடியாதுள்ளதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார். எனினும், படையினர் தொடர்ந்தும் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

தோல்வியின் விளிம்பிலுள்ள புலிகள் இனக்கலவரத்தை தூண்ட முயற்சி – அமைச்சர் அமீர் அலி

parliament.jpgதோல்வி யின் விளிம்பில் உள்ள புலிகள் குண்டுத் தாக்குதல்கள் மூலம் மற்றுமொரு இனக்கலவரத்தைத் தூண்டிவிடலாம் என தப்புக் கணக்குப் போடுவதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அக்குரஸ்ஸ- கொடப்பிட்டி குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர்: இத்தகைய தாக்குதல்களின் பின்னரும் நாட்டில் பெரும்பான்மையினர் அமைதியும் பொறுமையும் காத்து வருகின்றமை பெருமைக்குரியது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றவென்று போராடப் புறப்பட்டவர்கள் எவரையும் புலிகள் உயிரோடு வாழவிட்டதில்லை. இத்தகைய படுகொலைகளால் அகதி முகாம்கள் அப்பாவி மக்களால் நிரம்பியதைத் தவிர வேறு என்ன விளைந்தது?

புலிகள் தமது எதேச்சதிகாரச் செயற்பாடுகளால் தம்மை தமிழ் மக்களின் மீட்பாளர்கள் எனவும் தம்மை வெல்ல யாருமில்லை என்றும் இறுமாப்போடு ஏற்படுத்திக் கொண்டமாயை கள் கலைந்து தற்போது 37 சதுர கிலோ மீற்றருக்குள் சுருங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு திருப்பத்திலும் புறக்கணிப்பையும் அகங்காரத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மொத்தக்குத்தகைக்காரர்களாகத் தங்களைக் கட்டமைத்துக் கொள்வதில் காட்டிய அக்கறையை தமிழ் மக்களின் நலனில் காட்டியிருந்தால் இன்று ஏதோவொரு எல்லையை அடைந்திருக்க முடியும். ஒரு இணக்கப்பாட்டோடு செயற்பட்டிருந்தால் அப்பாவி மக்களின் வாழ்க்கை சிதைந்து போயிருக்காது.

இலங்கையில் வாழும் இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை வெல்லக் கூடிய எதனையும் புலிகள் செய்ததில்லை. பள்ளிவாசல்களில் மத நிகழ்வுகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கொலைகளை வழிமுறையாகக் கொண்ட எந்தக் கொம்பனும் வெற்றிபெற்றதில்லை. எல்லாம் ஒரு கட்டத்தில் முடிவுற்றுவிடும். நீதியும் நியாயமும் நிலைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

போர்க்குற்றங்களுக்கு புலிகளே பொறுப்பு என்கிறது அரசாங்கம்

pakistan-daily-times.jpgஇலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா.வை ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ள விடுதலைப் புலிகள், தமது அமைப்பும் போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை என்று பாகிஸ்தானின் “டெய்லி ரைம்ஸ்’ பத்திரிகை திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான விடுதலைப் புலிகளின் அழைப்பை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிராகரித்திருப்பதுடன், பிரிவினைவாதிகள் (புலிகள்) தொடர்பாகவே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மீள பலத்தை அதிகரிக்கவே விரக்தி நிலையில் யுத்தநிறுத்தத்தை புலிகள் கோருவதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போது 35 சதுர கி.மீ.பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகளை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருதரப்பும் மேற்கொண்டுவரும் யுத்தமானது போர்க்குற்றத்தை ஒத்ததெனவும் மோதல் பகுதியில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக இரு தரப்பும் மோதல்களை இடைநிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இலங்கைப் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலியுறுத்தியதாக ஞாயிற்றுக்கிழமை இணையத்தள செய்திகள் தெரிவித்திருந்தன.

“பொதுமக்கள், அதிகாரிகள், உள்ளூர் நிவாரணப் பணியாளர்கள் மத்தியிலிருந்து ஆயிரக்கணக்கான சாட்சியங்கள் உள்ளன. பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.சி.ஆர்.சி.யே சாட்சியாகும்’ என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போர் வலயத்தில் நிரந்தரமான பிரசன்னத்தை மேற்கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரேயொரு உதவி வழங்கும் அமைப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமாகும். அரசு அமைத்திருக்கும் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் வெளியேற முயற்சிக்கையில் புலிகள் சுடுவதாகவும் சிறுவர்கள் உட்பட ஆட்களை பலவந்தமாக படைக்குத் திரட்டுவதாகவும் நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் மீதான நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடேசன் எதனையும் குறிப்பிடவில்லை. இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் பாலித கோஹண ராய்ட்டருக்கு தெரிவிக்கையில், போர்க்குற்றங்களுக்கு புலிகளே பொறுப்பு என்று கூறியிருக்கிறார்.சிறிய நிலப்பரப்புக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருக்கையில் அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவர்கள் வெளியே நகர அனுமதிக்காமல் இருப்பதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடுமையாக மீறும் நடவடிக்கையென நான் நினைக்கிறேன் என்று கோஹண கூறியிருக்கிறார்.

ஐ.தே.க.வை அழித்தொழிக்க உள்ளேயும் வெளியேயும் சதி :மக்கள் சக்தி மூலம் முறியடிப்பேன் – ரணில்

ranil.jpgஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிப்பதற்கு கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் சதி நடப்பதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சதிக்காரர்களிடமிருந்து கட்சியைப் பாதுகாப்பதற்காக மக்கள் சக்தியை அணிதிரட்டி பலப்படுத்தப் போவதாகவும் சவால்களை எதிர்கொண்டு முறியடிக்கும் சக்தி தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ள சக்திகளே இந்தச் சதித்திட்டத்தை மேற்கொண்டுவருவதாகவும் அதற்கு கட்சிக்குள்ளும் சிலர் துணைபோக முனைவதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் நிதியத்தை திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இந்த வைபவம் இடம்பெற்றது.கட்சியின் அமைப்பாளர்களும் உயர்மட்டத்தினரும் மேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; தேர்தல்களில் ஏற்படக்கூடிய வெற்றி, தோல்விகளை வைத்துக்கொண்டு அரசியல் கட்சியொன்றின் வளர்ச்சியையும் பின்னடைவையும் எடைபோடமுடியாது. மிகப்பழைமையான ஜனநாயக அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பலம் குன்றப்போவதில்லை. ஜனநாயக அரசியலில் வெற்றி தோல்வியென்பது சகஜமானது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எமது கட்சி 48 இலட்சம் மக்களின் ஆதரவைப்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளால் பிரதி நிதித்துவம் பெற்றவர்கள் சுயநலத்துக்காக கட்சியை காட்டிக்கொடுத்துப் பதவிகளை பெற்றுக்கொண்டனர். அவர்கள் வெளியேறினாலும் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கட்சியை விட்டும் வெளியேறவில்லை. மக்கள் சக்தி ஐக்கிய தேசியக்கட்சியிடம் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இந்த ஆண்டும் எதிர்வரக்கூடிய ஆண்டும் தேர்தல்களுக்கான ஆண்டாக காணப்படுவதால் கட்சியைப்பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம். கட்சிக்கு மேலும் ஆதரவாளர்களை அணிதிரட்ட வேண்டும்.இதன் பொருட்டே தேர்தல் நிதியை ஆரம்பித்துள்ளோம்.

“ஆயிரம் ரூபா நிதி’ என்ற நிதித்திட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றோம். இரண்டு வாரங்களுக்கு தலைநகரிலும், நகர்ப்புறங்களிலும் இத்திட்டத்தை அமுல்படுத்திவிட்டு அடுத்த கட்டமாக கிராமப்புறங்களுக்குச் செல்லவிருக்கின்றோம். மக்களிடமிருந்து பெறப்படும் நிதியல்ல முக்கியம். அதனூடாக இணைத்துக் கொள்ளப்படும் மக்கள் சக்தியே முக்கியமானதாகும். கட்சி மீதான நம்பிக்கையை முழு நாட்டிலும் கட்டியெழுப்புவதுதான் மிக முக்கியமான நோக்கமாகும்.

அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிப்பதற்கு சதிகள் இடம்பெற்றுவருகின்றன. அது கட்சிக்குள்ளிருந்தும் வெளியே இருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. பலவீனப்பட்டுப் போய்க் கொண்டிருக்கும் வங்குரோத்து நிலைக்குத்தள்ளப்படும் சில சக்திகளே இந்தச் சதியின் பின்னாள் காணப்படுகின்றன.

இக்கட்சியை அழிப்பதற்கு எந்தச் சக்திக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை. இந்த விடயத்தில் எத்தகைய நெருக்கடியையும் சவாலையும் எதிர்கொள்ளத் நான் தயாராகி இருக்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட சகலரையும் ஒன்றுதிரட்டி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து விரைவில் இந்த மண்ணில் நல்லாட்சியொன்றை மலரச் செய்வதற்காக நாமனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க இங்கு அழைப்பு விடுத்தார்.

ஏழு விண்வெளி வீரர்களுடன் “டிஸ்கவரி’ விண்ணுக்குப் பயணம்!

discovery.jpgஅமெரிக் காவின் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவின் “டிஸ்கவரி’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.

ஏழு விண்வெளி வீரர்கள் சகிதம் 14 நாள் பயணத்தை மேற்கொண்டு சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு செல்லும் இந்த விண்கலமானது அவ்விண்வெளி நிலையத்துக்கான நான்காவது இறுதித் தொகுதி சு10ரியசக்தி பிறப்பாக்கி அலகுகளை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளிவீரர்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கி பணியாற்றும் முதலாவது ஜப்பானிய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ள கொய்சி வகாடாவும் உள்ளடங்குகிறார்.

இந்த விண்கலத்தை கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பிற்போடப்பட்டது. இதனையடுத்து ஒரு மாத கால தாமதத்தின் பின் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய சக்திப் பிறப்பாக்க அலகுகளானது,  அந்நிலையத்துக்கு கிடைப்பனவாகும் மின் சக்தியின் அளவை அதிகரிப்பதுடன் அந்நிலையத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடங்களை பொருத்துவதற்கு தேவையான சக்தியையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பவர்களின் தொகையை மூவரிலிருந்து அறுவராக அதிகரிக்க இந்த மேலதிக சக்தி விநியோகம் உதவும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்குள்ள சிறுநீரை குடிநீராக மாற்றும் உபகரணமொன்று பழுதடைந்துள்ள நிலையில்,  அதற்கு பதிலாக புதிய உபகரணமொன்றை பொருத்தும் நடவடிக்கையிலும் விண்வெளிவீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதுவரை விண்வெளிக்கு 36 பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்கலத்துக்கு பயணம் மேற்கொள்வது இது 28 ஆவது தடவையாகும்.

இந்நிலையில் இந்த விண்வெளி நிலையம் சு10ரியன் மறைந்த பின் பிரகாசமான நட்சத்திரம்போன்று விண்ணில் ஒளிரவுள்ளது. மேற்படி சு10ரிய சக்தி பிறப்பாக்க அலகுகள் அனைத்தும் இணைந்து 120 கிலோ வோட்ஸ் மின் சக்தியை பிறப்பிக்கும் என நாசா தெரிவிக்கிறது. 

பேராதனை மருத்துவபீட மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரிப்பு

university-of-peradeniya.jpgசிகிச்சைக் கான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, பேராதனை பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞான பிரிவு இளநிலைப் பட்டதாரிகள் ,விரிவுரைகளை பகிஷ்கரிப்பதற்கான போராட்டத்தை திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர்.  வைத்திய சபையில் நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வந்த மருத்துவப் பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் திகதி முதல், மாணவர்களின் சிகிச்சை வகுப்புகளுக்காக மூடப்பட்டிருந்த சுகாதார விஞ்ஞான பீடம், கடந்தவாரம் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

மருத்துவ பயிற்சிகளை மீண்டும் வழங்குவதற்கும் சுகாதார விஞ்ஞான பீடத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால ஆகியோர் வாக்குறுதிகளை வழங்கிய போதும் அவர் கூறியது போன்று பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என மாணவர் கவுன்சிலின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்த விஞ்ஞான பீடத்தில் 460 மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று பிரிவுகளாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இப்பிரிவு, விசேடமாக, தாதியர், மருத்துவ ஆய்வு கூட சேவை, கதிரியக்க சிகிச்சை, மருந்தகம், உடற்பரிசோதனை போன்றவற்றுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மாணவர்களை பயிற்சி நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பதை, வைத்தியசாலை பணிப்பாளர்கள் நிராகரித்துள்ளதாக சுகாதார விஞ்ஞான பீடாதிபதி, டாக்டர் சுலா குணசேகர தெரிவித்தார். அதேசமயம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பலசுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்திருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக, சுகாதார அதிகாரிகளுக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பிரச்சினை தொடர்பில், நீதிமன்றத்தின் முடிவைதான் எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமர நாயக்க தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை : ரசிகர்கள் மொட்டையடித்து நூதனப்போராட்டம்

jallikattu.jpgசுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. பல உயிர்கள் பலியாகின்றன. எனவே, ஜல்லிக் கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்தது. விரைவில் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வர இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐ.நா.வின் மிலேனியம் இலக்குகளை அடைய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் – போகொல்லாகம

rohitha_bogollagama.jpgபயங்கர வாதத்தை முற்றாக ஒழிப்பதன் மூலமே ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறைக்கான மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக மன்றத்தின் பிராந்திய அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு வரவேற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

சுகாதார பாதுகாப்புக்கான நிதி உபாயங்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பு, சினமன் ஹோட்டலில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கை இந்த மிலேனியம் இலக்குகளை 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அடைந்து விடும். சமூகநல அபிவிருத்திää சுகாதாரம் ஆகிய துறைகளில் நாடு நிலைநாட்டியுள்ள சாதனைகளினால் இந்த இலக்குகளை இலகுவாக அடைய முடியும்.
இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டதும் மக்களை வலுவடையச் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்க்கதரிசனம் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்யும் ஒன்றாக அமையும்.

பாதுகாப்பு உட்பட பாரிய செலவினங்களுக்கு மத்தியிலும் நாட்டின் சுகாதாரத்துறையில் அரசு முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கும் மருந்துப் பொருட்கள்ää வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அனுப்பி சிறந்த சுகாதார சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களுக்கென அரசினால் அனுப்பப்படும் மருந்துகளை புலிகள் அபகரித்து அவற்றை தமது சொந்தப் பாவனைக்காக பயன்படுத்தி வருவதை அறிந்தும் அங்குள்ள மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்த போதும் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கங்களினூடாக அப்பகுதிகளுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளின்போது பல்தேசிய நிதி நிறுவனங்கள்,  வர்த்தக சமூகங்கள், தனியார் மற்றும் சிவில் அமைப்புக்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருவதையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

58வது படையணி இரணைப்பாலை சந்தியை அடைந்தது

army-s-l.jpg58வது படையணி சேர்ந்த 20வது கஜபா படைப் பிரிவினரும் 7வது சிங்கப் படைப் பிரிவினரும் 11வது இலகு காலாற்படையினரும் இணைந்து புதுகுடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் புலிகளை மேலும் மிகச்சிறிய ஒரு நிலப்பகுதிக்குள் முடக்கியுள்ளனர்.