சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. பல உயிர்கள் பலியாகின்றன. எனவே, ஜல்லிக் கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்தது. விரைவில் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வர இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.