April

April

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

மினுவாங்கொட பன்சில்கொடயில் இயங்கிய வந்த தனியார் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான இளைஞன் சந்தேகத்திற்கிடமான வகையில் மருத்துவமனையில் இறந்துள்ளார். இறந்த இளைஞன் கைகளில் விலங்கும் கால்களில் இரும்புச் சங்கிலியும் அணிவித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கிலும் புனர்வாழ்வு மையங்களின் அவசியத்தை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி பவானந்தராஜா பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் ப்பாணத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் இந்த இல்லங்களை நடத்துகின்றனர். அவர்கள் இவ்விடயங்களில் பயற்சி பெற்றவர்களா என்பதும் கேள்விக்குறியே. மேலும் வடக்கில் போதைப்பொருள் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் பிரேரணையை யாழ் பா உ ரஜீவன் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கெதிராக இந்தியாவுடன் பாதுகாப்பு போர் ஒப்பந்தம் பகீர் கிளப்பும் – வசந்த முதலிகே

சீனாவிற்கெதிராக இந்தியாவுடன் பாதுகாப்பு போர் ஒப்பந்தம் பகீர் கிளப்பும் – வசந்த முதலிகே

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்பிரல் 4 ஆம் திகதி இலங்கை விஜயத்தின் போது 26 ஒப்பந்தங்கள் உட்பட சீனாவிற்கு எதிராகவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பம் இட இருப்பதாக இந்தியச் செய்திகளை மேற்கோள் காட்டி மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது ”இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டுள்ளது “ என இந்திய வலைத்தளமான எகனாமிக்ஸ் டைம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார். உலகம் தற்போதிருக்கின்ற போர்ப் பதட்டத்தில் இலங்கையையும் பொறியில் சிக்க வைக்க கூடாது என எச்சரிக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையின் நிலங்கள், மின் நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் தொட்டிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு தாரை வார்த்த மாதிரி செய்ய என்பிபி அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என எச்சரிக்கிறார். மோடியின் இலங்கை விஜயத்தின் போது சம்பூர் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார் எனக் கூறப்படுகிறது.

 

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை வழங்கப்பட விட மாட்டோம் ! தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ! பிரித்தானிய தொழிற்கட்சி சென் கந்தையா

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை வழங்கப்பட விட மாட்டோம் ! தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ! பிரித்தானிய தொழிற்கட்சி சென் கந்தையா

இம்மாதம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை பற்றிய மீளாய்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. “ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்க விடாமல் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அதற்கான அழுத்தங்களை வழங்குவோம்” என பிரித்தானியாவில் ஆளும் தொழிற்கட்சி அரசின் முக்கியஸ்தர் சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இலங்கையின் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான தடையுத்தரவை பிரித்தானிய அரசு கொண்டுவருவதற்கு பின்னிருந்து செயற்பட்டவர் சென் கந்தையா மற்றும் அருண் கனநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜிஎஸ்பி வரிச்சலுகை தடுக்கப்பட்டால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மட்டமல்ல வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்று கேட்ட போது, தமிழ் மக்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் கூட்டுச் சேரும் அதே நேரம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காகவும் கூட்டுச்சேர்ந்து ஒரே அணியில் செயற்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சியின் முக்கிய பிரமுகரான சென் கந்தையா தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நேர்மையுடன் இல்லாததாலேயே அவர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்திருப்பதாகத் தெரிவித்தார் சென் கந்தையா. தற்போது தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்துள்ளனர் எனத் தெரிவித்த சென் கந்தையா அடுத்த நான்கு ஆண்டுகள் தமிழ் மக்களின் அரசியலில் முக்கியமான காலகட்டம் எனத் தெரிவித்தார். இதனைக் கருத்தில் எடுத்து தமிழ் கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சென் கந்தையா கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய அரசு, இராணுவத் தளபதிகளுக்கு எதிராகவும் கருணா அம்மானுக்கு எதிராகவும் தடையுத்தரவைக் கொண்டு வரும் விடயம் இலங்கை அரசுக்கு ஜனவரியிலேயே அறிவிக்கப்பட்டு இருந்தாக சென கந்தையா தெரிவித்தார். என்பிபி அரசு ஆட்சிக்கு வந்தபோதும் கடந்த காலங்களில் இருந்து மாற்றங்கள் ஏது இல்லை. இந்தத் தடையுத்தரவு இதனோடு நின்று விடப் போவதில்லை, இன்னும் பலர் இத்தடையுத்தரவுக்கு உள்ளாவார்கள் என்றும் சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அத்தோடு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வை சர்வதேசத்தின் துணையோடு தாங்கள் கொண்டுவருவோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஐந்து மாதங்களில் என்பிபி என்னத்தைக் கிழித்தது ?

கடந்த ஐந்து மாதங்களில் என்பிபி என்னத்தைக் கிழித்தது ?

வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசணைக் குழு உறுப்பினர், மயில்வாகனம் சூரியசேகரம் உடன் ஒரு கலந்துரையாடல்