போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

மினுவாங்கொட பன்சில்கொடயில் இயங்கிய வந்த தனியார் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான இளைஞன் சந்தேகத்திற்கிடமான வகையில் மருத்துவமனையில் இறந்துள்ளார். இறந்த இளைஞன் கைகளில் விலங்கும் கால்களில் இரும்புச் சங்கிலியும் அணிவித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கிலும் புனர்வாழ்வு மையங்களின் அவசியத்தை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி பவானந்தராஜா பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் ப்பாணத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் இந்த இல்லங்களை நடத்துகின்றனர். அவர்கள் இவ்விடயங்களில் பயற்சி பெற்றவர்களா என்பதும் கேள்விக்குறியே. மேலும் வடக்கில் போதைப்பொருள் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் பிரேரணையை யாழ் பா உ ரஜீவன் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *