சீனாவிற்கெதிராக இந்தியாவுடன் பாதுகாப்பு போர் ஒப்பந்தம் பகீர் கிளப்பும் – வசந்த முதலிகே

சீனாவிற்கெதிராக இந்தியாவுடன் பாதுகாப்பு போர் ஒப்பந்தம் பகீர் கிளப்பும் – வசந்த முதலிகே

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்பிரல் 4 ஆம் திகதி இலங்கை விஜயத்தின் போது 26 ஒப்பந்தங்கள் உட்பட சீனாவிற்கு எதிராகவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பம் இட இருப்பதாக இந்தியச் செய்திகளை மேற்கோள் காட்டி மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது ”இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டுள்ளது “ என இந்திய வலைத்தளமான எகனாமிக்ஸ் டைம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார். உலகம் தற்போதிருக்கின்ற போர்ப் பதட்டத்தில் இலங்கையையும் பொறியில் சிக்க வைக்க கூடாது என எச்சரிக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையின் நிலங்கள், மின் நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் தொட்டிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு தாரை வார்த்த மாதிரி செய்ய என்பிபி அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என எச்சரிக்கிறார். மோடியின் இலங்கை விஜயத்தின் போது சம்பூர் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார் எனக் கூறப்படுகிறது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *