April

April

யாழில் எறும்புக்கடியால் சிசு பலி !

யாழில் எறும்புக்கடியால் சிசு பலி !

பிறந்த 21 நாளேயான பெண் சிசுவொன்றை எறும்புகள் கடித்துள்ளன. பெற்றோர் எறும்புக்கடி தொடர்பில் அசமந்தமாக இருந்துள்ளனர். நான்கு நாட்கள் கழித்து பால் குடித்த சிசு மரணமடைந்துள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின்படி எறும்புக் கடியால் கிருமித் தொற்று ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. எறும்பு, மட்டத்தேள் மற்றும் பூரான் போன்ற பூச்சிகள் கடிக்கும் போது விரைவாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 க்குப் பின் !

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 க்குப் பின் !

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பெறுபேறுகள் வெளியானவுடன் , பின்வரும் முறைகளில் நீங்கள் அவற்றை சரி பார்கலாம் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளமான https://www.doenets.lk இலும், அல்லது https://www.results.exams.gov.lk இலும் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !

கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சனிக்கிழமை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையுடன் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.

மேலும், கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகள் மக்கள் முன்னிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மக்களே மாற்றத்திற்கான முடிவை எடுக்க வேண்டிய நேரமிது என்று சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலற்ற வினைத்திறனான நிர்வாகம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் முசலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனநிலையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக மேலும் மேலும் வழக்குப் பதிவுகள் முறைப்பாடுகள் அதகரித்துச் செல்கின்றது. சகட்டு மேனிக்கு மற்றவர்களைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது என பா உ அர்ச்சுனாவை சட்டங்கள் இறுக்குகின்றன. ரிக் ரொக் சாளினியைச் சொன்னதை சுவஸ்திகா பற்றிச் சொன்னதாக பாராளுமன்றப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சட்டக்குழு தேடுகின்றது.

மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என சக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய இடத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ களை கத்தரித் தோட்டத்து வெருளிகள் என அர்ச்சுனா தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது நான் அவர்களை பெயர் சொல்லிச் சொல்லவில்லை என்கிறார். அர்ச்சுனா தற்போது சட்டத்தின் ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கின்றார்.

அர்ச்சுனாவுடைய போக்குகள் தொடர்பில் அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். ஆனால் பா உ அர்ச்சுனா இந்த விடயங்களில் திருந்த வேண்டும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

பா உ அர்ச்சுனா போல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் பா உ இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் பீமல் ரத்நாயக்கா காட்டமான பதிலை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். சாணக்கியனின் அரசியல் வரலாற்றைப் புரட்டிய அமைச்சர் பீமல் ரத்நாயக்கா மோசமான மோசடியாளர்களான ராஜபக்சக்களுடன் அரசியலுக்கு வந்து அவர்களை நியாயப்படுத்தியவர், பாதகமான செய்களில் ஈடுபட்ட பிள்ளையானோடு அரசியல் செய்தவர் என்றெல்லாம் சாணக்கியனை கிழித்துத் தொங்கவிட்டார் அமைச்சர் பீமல் ரத்நாயக்கா. சாணக்கியன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு தங்களுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பண்பாடான நடத்தையை தான் மதிப்பதாகவும் பீமல் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா உ சிறிதரனின் பாடசாலையாக அறியப்பட்ட கனிஸ்ட்டா மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர் அலன் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பரபரப்புக்குள்ளான இச்செய்தி கிளிநொச்சி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வரையான சிறார்களை அங்கிருந்த மலசலகூடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் அலன் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தன்மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக தற்சமயம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரெஜிவொல்க் என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

எங்கள் பொருளாதாரத்தை சீரழிப்பது – ஜீஎஸ்பி + வரிச்சலுகையைத் தடுப்பது தீர்வல்ல ! – நாங்கள் ஒரே தாயின் பிள்ளைகள் !

எங்கள் பொருளாதாரத்தை சீரழிப்பது – ஜீஎஸ்பி + வரிச்சலுகையைத் தடுப்பது தீர்வல்ல ! – நாங்கள் ஒரே தாயின் பிள்ளைகள் ! – எங்கள் பிரச்சினையை எங்களுக்குள் தீர்க்க வேண்டும் !

ASATiC செயலாளர், முன்னாள் ஈரோஸ் உறுப்பினர், ஆய்வாளர் ரவி சுந்தரலிங்கம்

கிளி உடற்கல்விப் பயிற்றுவிப்பாளரின் பாலியல் துஸ்பிரயோகம் ! 16 மாணவர்கள் பாதிப்பு ! பொலிஸ் தேடுதல் ! பெற்றோர் பா உ சிறிதரன் மீது காட்டம் !

கிளி உடற்கல்விப் பயிற்றுவிப்பாளரின் பாலியல் துஸ்பிரயோகம் ! 16 மாணவர்கள் பாதிப்பு ! பொலிஸ் தேடுதல் ! பெற்றோர் பா உ சிறிதரன் மீது காட்டம் !

 

கிளி கனிஸ்டா விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அலன் என்பவர் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பா உ சிறிதரனுக்கு நெருக்கமான இவரது விடயம் பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும் அதனை மறைக்க பா உ சிறிதரன் முயற்சித்தாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது சந்தேக நபரான அலனைக் கைது செய்h பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

 

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமனற உறுப்பினர் ரஜீவன் காணொலி ஒன்றை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்க நம்பிக்கை அளித்துள்ளார்.

 

இந்த சிறுவர்கள் 10 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை விளையாட்டு பயிற்றுனர் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடவடிக்கைகளில் மாற்றமும் கல்வியில் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இதனை அடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசாருக்கு மேற்குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் சந்தேக நபரை கைது செய்யாத போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன் கிழமை ஏப்ரல் 9 பொலிஸார் சிறார்களை பாடசாலையில் தடுத்து வைத்து குற்றவாளிகள் போல் விசாரித்துள்ளனர். அதையடுத்தே பெற்றோர் கலவரம் அடைந்து காணொலிகளைப் பரப்பினர்.

கிளி கனிஸ்டா பாடசாலை பா உ சிறிதரன் அதிபராக இருந்த பாடசாலை. பா உ சிறிதரனுக்குத் தெரியாமல் அங்கு ஓரணுவும் அசையாது. அப்படியிருக்கையில் இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் வெளிவந்ததும் அதனை மறைக்க அவர் முயற்சித்தார் எனக் குற்றம்சாட்டப்படுகின்றது. சந்தேகநபரான அலன் பா உ சிறிதரனது அரசியல் நடவடிக்கைகளுக்கு துணைநிற்பவர் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதனால் பா சிறிதரன் குற்றம்சாட்டப்பட்ட அலனை காப்பாற்ற முற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான வேளமாலிதனின் பாலியல் லீலைகள் அம்பலமானதுடன் தமிழரசுக் கட்சியின் அலுவலகமும் வேளமாலிதனின் சிற்றின்ப தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமை தெரியவந்தது. கிளிநொச்சியின் மண் மாபியாக்கள், வட்டி மாபியாக்கள், சாராய மாபியாக்களுடன் தற்போது பாலியல் மாபியாக்களும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாகவும் பா உ சிறிதரனின் நிதி வழங்குநர்களாகவும் இருப்பதாக பெருமளவு குற்றச்சாட்டுகள் வெள வருகின்றது.

 

சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டு பயிற்சியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று சனிக்கிழமை உறுதியளித்திருந்தார்.

 

இதேபோல் வன்னி முல்லைத்தீவில் கணித ஆசிரியர் தச்சுதன் 20 வயது வரையானமாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்திருந்தமை தெரிந்ததே. தன்னுடைய மாணவர்களுக்கு போதை வழங்கி மாணவிகளை அவர்களின் வலையில் விழ வைத்து காணொலிகளை பதிவு செய்து சிற்றின்பம் கண்டவர். இவர் குறுகிய கால தண்டனையோடு தற்போது வெளிவந்துவிட்டார். அவர் தற்போதும் முல்லைத்தீவில் கணக்கு கற்பிக்கின்றார். பெற்றோர்கள் மீண்டும் மாணவிகளை அவரிடம் அனுப்புகின்றனர்

அர்ச்சுனா திருந்த வேண்டும் ! சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் ! தையிடிக்கு வழக்குப் போட்டால் அரசியல் செய்ய முடியாது ! பா உ கஜேந்திரகுமார்

அர்ச்சுனா திருந்த வேண்டும் ! சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் ! தையிடிக்கு வழக்குப் போட்டால் அரசியல் செய்ய முடியாது ! பா உ கஜேந்திரகுமார்

 

“பா உ அர்ச்சுனா தையிட்டி விவகாரத்தில் தவறான முடிவை எடுத்திருக்கின்றார். அது சட்டவிரோதமான விகாரை. உடைக்கப்பட வேண்டும். எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். பா உ அர்ச்சுனா இந்த விடயங்கள் பற்றி பேசிய விடயங்கள் திருத்தப்பட வேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

 

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழரசுக் கட்சி மீதும் அதன் பொதுச்செயலாளர் மீதும் காட்டமான விமர்சனத்தையும் அங்கு வெளியிட்டு இருந்தார். எம் ஏ சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருப்பதாகவும் எம் ஏ சுமந்திரனுக்குப் பயந்து மற்றவர்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அரசயலமைப்புப் பற்றி அரசாங்கம் அறிவிக்கும்வரை தமிழ் கட்சிகள் தங்களுக்குள் உரையாடி அவசியமில்லை என்பது அடி முட்டாள்தனம் என அவர் அதனை வர்ணித்தார். இலங்கைத் தமிழரவுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை சூழ்ச்சிக்காரன் எனறும் கஜேந்திரகுமார் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார்.

 

மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள தையிட்டி விவகாரத்தில் இதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பௌர்ணமிப் போராட்டங்களை நடத்துவதில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார் தற்போது யாழில் வாழ்கின்ற சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன். இவர் டான் தொலைக்காட்சியின் ‘எது சரி எது பிழை’ நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற போதே அங்கு மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

 

சட்டத்தரணி ரெங்கன் அங்கு மேலும் தெரிவிக்கையில், அந்த விகாரைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அது மட்டுமே இப்பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழியென்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் தமிழ் தேசியக் கட்சிகளில் சட்டத்தரணிகளுக்குப் பஞ:சமில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் ஏன் இதுவரை தையிட்டி காணி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டார்.

இதனை மறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டிபன் அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை நகர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வலிகாமம் உப தவிசாளர் சுகிர்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விகாரை தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

 

டான் தொலைக்காட்சியில் முன்வைக்கப்பட்ட இதே கேள்வி ஜப்னா கலரியில் கேட்கப்பட்ட போது அதற்குப் பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், இதற்கு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் விசாரணையிலிருக்கும் விடயத்திற்கு போராட முடியாது. அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளும் செய்ய முடியாது போகும் என்பதை ஜப்னாகலரியில் ஒத்துக்கொண்டார்

புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே !

புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே ! உள்ளுராட்சித் தேர்தலில் கிராமங்களும் சுத்தமாக்கப்பட வேண்டும் !

அரசியல் சமூக செயற்பாட்டாளர், ஆய்வாளர் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம்

 

யாழ் டிப்பர் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு !

யாழ் டிப்பர் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் தின்னவேலிப் பகுதியில் டிப்பர் சாரதியின் கவனயீனத்தால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியோரத்தில் டிப்பர் வாகனத்துக்கு அருகாக நடந்து சென்ற மூதாட்டியை அவதானிக்கமால் சாரதி டிப்பரை எடுத்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல் ஏற்றிவந்த ரிப்பர் வாகனமொன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ரிப்பர் மீது மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.

கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் வடக்கில் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. ஆனாலும் செலுத்துனர்களோ, பொதுமக்களோ இவை தொடர்பில் அவதானமற்று அசமந்தமாக செயற்படுவதால் தொடர்ந்தும் இழப்புகள் பதிவாகி வருகின்றன. இதேவேளை போக்குவரத்துப் பொலிஸார் கனரக வாகனங்கள் தொடர்பில் சட்டங்களை உரியமுறையில் நடைமுறைப்படுத்த தவறுவதே இவற்றுக்கான அடிப்படைக்காரணம் என மக்கள் குற்றஞ்சாடுகின்றனர்.

நாட்டில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்து மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் 10,000 முதல் 12,000 பேர் வரை வருடாந்தம் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.