04

04

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22,006 ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35,000 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. அந்த வகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச்செய்தால்> எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது? என்றார்.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மக்களின் காணி தொடர்பான உரிமைகள் மீறப்பட கூடாது என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது ஏற்க முடியாது – பா உ அடைக்கலநாதன் !

அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது ஏற்க முடியாது – பா உ அடைக்கலநாதன் !

 

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் செல்வம். மேலும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு பற்றியும் கருத்து தெரிவித்த அவர்> இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முன்னதாக இலங்கை கடற்படை, “வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் தென்னிந்திய மீனவர்களின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் எமது நிலை மாறப்போவதில்லை, தமிழக மீனவர்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதேவேளை நேற்று முன்தினமும் மன்னார் தெற்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களும் அவர்களது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

ஈஸ்டர் தாக்குதலின் ‘மஹ மொலகரு’ கோட்டாபய ராஜபக்சவா ? – விரைவில் கைது ?

ஈஸ்டர் தாக்குதலின் ‘மஹ மொலகரு’ கோட்டாபய ராஜபக்சவா ? – விரைவில் கைது ?

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் புதிய “மஹ மொலகரு ” – முக்கிய காரணகர்த்தா – ஒருவரை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அசாத் மௌலானாவின் சனல் 4 வீடியோ பற்றி பேசிய உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று சனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாதம் முதல் ‘GovPay’ – டிஜிட்டல் மயமாகும் இலங்கை அரசாங்க சேவைகள் !

இம்மாதம் முதல் ‘GovPay’ – டிஜிட்டல் மயமாகும் இலங்கை அரசாங்க சேவைகள் !

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமான ‘GovPay’ 2025 பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

“இந்த புதிய முயற்சியானது, பாதுகாப்பான மற்றும் திறனான டிஜிட்டல் தளம் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும், அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தும் விதத்தை நெறிப்படுத்தி நவீனப்படுத்தும்” என்று ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கௌரவம் என்பதொன்று இருந்தால் மரியாதையாக வெளியேறுங்கள் மஹிந்தவுக்கு அரசு எச்சரிக்கை !

கௌரவம் என்பதொன்று இருந்தால் மரியாதையாக வெளியேறுங்கள் மஹிந்தவுக்கு அரசு எச்சரிக்கை !

கௌரவம் என்பதொன்று இருக்குமாயின் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். இல்லையேல் நாங்கள் கழுத்தைப் பிடித்து தள்ளி வெளியேற்றுவோம் என்ற பாணியில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மேலும் தெரிவித்ததாவது, நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவுகள் இயலுமான வகையில் குறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் நாகரீகமான முறையில் அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்றும் அரச இல்லங்களில் தான் உள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்தார் என்பதற்காக அவரை தோளில் சுமந்துக்கொண்டு திரிய முடியாது. அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். தமது பெற்றோரை பிள்ளைகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை பார்த்துக் கொள்வதற்கு அவரது மூன்று பிள்ளைகளுக்கும் முடியாவிடின் அவருக்கும் அவரது பாரியாருக்கும் வீடு வழங்கலாம். ஆனால் அவரது மூன்று பிள்ளைகளையும் அரசாங்கத்தால் பராமரிக்க முடியாது என்றார்.

இதேவேளை, அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆண்கள் பெண்கள் இருவரிடமும் போதைப்பொருள் பாவனை மலிந்து போயுள்ளதை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார தலைமையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பா.உ இளங்குமரன் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் யாழ்ப்பாண பொலிஸார் அசமந்தமாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 2022ஆம் ஆண்டின் பின்னர் ஊசி போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதுடன் சுமார் இருபதுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அடிமைசாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களாக இருக்கின்ற தேசிய கீதம், தேசிய கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து தெரிவித்த விடுதலை புலிகள் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வேர்கள் புலனாய்வு அமைப்பின் புலனாய்வாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராகவுள்ள கஜேந்திரகுமார் தமிழ்தேசியம் – தனிநாடு என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது வெளிநாட்டு படிப்பு, சுகபோக வாழ்க்கை என இருந்த கஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இப்போது திலீபனுக்கு பேரணி வேறு செய்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது முதல் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் உறுதிப்பிரமாணத்தில் இந்த நாட்டிற்குள் இன்னுமொரு நாட்டையோ பிரிவையோ உருவாக்க மாட்டேன் என கையெழுத்திட்டு பாராளுமன்ற அமர்வில் இணையும் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு தமிழ் மக்களிடம் தனிநாடு பெற்றுத் தருவோம் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஊடகங்களிலும் தேசியக்கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்த போதும் அதற்குக் கட்டுப்பட்டே பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றுமொரு சட்டத்தரணி சுகாஸ் தாங்கள் தேசியக் கொடிக்கு அருகிலேயே செல்வதில்லை என்று ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதனால் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பி சங்கடப்படுத்த வேண்டாம் என அவருக்கும் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வாக்களிக்கவில்லை.

கஜாவின் பாணியில் கரி நாளாக்குவதா ? தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவதா? இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் !

கஜாவின் பாணியில் கரி நாளாக்குவதா ? தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவதா? இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் !

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றைய சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்திருந்தாலும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் வழமைக்கு மாறாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் 77வது சுதந்திர தினத்தின விழா சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றிருந்தது. பொதுமக்கள் உள்ளீர்க்கப்பட்டு எளிமையாகவும் – கடந்த கால செலவுகள் முழுமையாக குறைக்கப்பட்டும் குறித்த விழா முன்னெடுக்கப்பட்டது.

மிக நீண்டகாலமாக தென்னிலங்கை மக்களை மட்டுமே மையப்படுத்திய வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இலங்கை சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகள் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வுகளின் ஆரம்பத்திலேயே தமிழில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்ந்திருந்தது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவலின்படி, இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகளுக்கான செலவுகள் 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகியிருந்தது என மதிப்பிடப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை தேசம் நெட் ஊடகக் குழும இயக்குநர் தேசம் ஜெயபாலன் தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில், இனவாதம் மதவாதம் அற்ற ஆரோக்கியமான இலங்கை ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த கால சுயநல அரசியல் என்ற மாய வலையில் இருந்து விடுபட்டு இலங்கை வாழ் தமிழர்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆக்கபூர்வமான வகையில், அரசின் பிரதிநிதிகளுடன் பேசி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இனவாத கருத்துக்களை விதைக்காது அபிவிருத்தி சார்ந்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் ஆளுமையான சுயநலமற்ற தலைவர்களை ஜனநாயக தேர்தல்களில் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் தேசிய பொருளாதாரத்தில் தமிழர்கள் தங்களை இணைத்து அபிவிருத்தி சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இலங்கையர்களாக இணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை – USAID நிதி முடக்கம்: நெருக்கடியில் அரச சார்பற்ற அமைப்புகள்

வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை – USAID நிதி முடக்கம்: நெருக்கடியில் அரச சார்பற்ற அமைப்புகள்

யு.எஸ்.எய்ட் (United States Agency for International Development) வழங்கும் நிதியை முடக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் அறிவிப்பால், இலங்கையின் சமூக மற்றும் மனித உரிமை சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் 1,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

யு.எஸ்.எய்ட் ஆதரவில் செயற்படும், மக்களாட்சி, மனித உரிமைகள், நல்லாட்சி, பெண்கள் உரிமைகள், LGBTQ உரிமைகள் போன்ற சமூக நீதியை முன்வைக்கும் பல்வேறு அமைப்புகள் தற்போது இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல அமைப்புகள் பணியாளர்களை நீக்கி, திட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய சூழ்நிலையை சந்திக்கவுள்ளன. அரசு சார்பற்ற நிறுவன செயலகத்தின் மதிப்பீடுகளின்படி, இலங்கையில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பெற்ற மொத்த நிதியில் கிட்டத்தட்ட அரைவாசி யு.எஸ்.எய்ட் வழங்கிவந்துள்ளது. இது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 15 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணாங்களிலும் பல்வேறு செயற்திட்டங்கள் கருத்தரங்குகள் யு.எஸ்.எய்ட்டின் உதவியால் இடம்பெற்றுவருகின்றன.

டொனால்ட் ரம்பின் “America First” கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முடக்கம் கருதப்படுகிறது. ட்ரம்ப் சர்வதேச உதவிகளை வெகுவாகக் குறைத்து, அமெரிக்காவின் உள்நாட்டு செலவுகளை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றார்.

இதனிடையே, USAID நிறுவனத்திற்குள் எலோன் மஸ்கின் குழுவினருக்கு அணுகல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் USAIDஐ “குற்றவியல் அமைப்பு” என விமர்சித்து, “இதை அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என தெரிவித்திருந்தார். இதையடுத்தே இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யு.எஸ்.எய்ட், 2023ஆம் ஆண்டு மட்டும் 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 72 பில்லியன் டொலர் உதவி வழங்கியது. இந்த நிதி நிறுத்தம், இலங்கையில் இயங்கும் பல்வேறு சமூக அமைப்புகளை பொருளாதார ரீதியாக கடும் பாதிக்கக்கூடும். முன்னணி அமைப்புகள், மாற்று நிதி ஆதாரங்களை தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன என தெரியவருகின்றது.

புதிய ஜனாதிபதி டொனால் ட்ரமின் மற்றுமொரு அநீதியான கொள்கையான குடிவரவாளர்களைத் திருப்பி அனுப்பும் நடைமுறையால் 3,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் திருப்பி அனுப்பப்படும் நிலை அங்கு தோண்றியுள்ளது.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரி அரசானது தற்போது உலக ஒழுங்கில் பாரிய மாற்றங்களையும் தவறான முன்ணுதாரணங்களையும் ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் கேளீர் ஊடகத்திற்கு தேசம் ஜெயபாலன் வழங்கிய நேர்காணலில் டொனால் ட்ரம் பற்றி வருமாறு தெரிவிக்கின்றார்:

 “நான் கடைப்பாறையுடன் ரெடி ! நீங்கள் அலவாங்கோடு ரெடியா ? தையிட்டி விகாரை உடைக்கலாம்” கஜா அணிக்கு சவாலாக மாறும் பா உ அர்ச்சுனாவின் குசும்பு

“நான் கடைப்பாறையுடன் ரெடி ! நீங்கள் அலவாங்கோடு ரெடியா ? தையிட்டி விகாரை உடைக்கலாம்” கஜா அணிக்கு சவாலாக மாறும் பா உ அர்ச்சுனாவின் குசும்பு

 

“தையிட்டி விகாரையை நாங்களே போய் இடிப்பம். மக்களைக் கூப்பிட்டு பலி ஆடுகள் ஆக்க வேண்டாம். நான் கடைப்பாறையுடன் ரெடி, நீங்கள் சட்டத்தரணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சட்டத்தரணி சுகாஸ், செல்வராஜா கஜேந்திரன் அலவாங்கோடு ரெடியா?” என குசும்பு விட்டு, தையிட்டி விகாரைப் பிரச்சினையின் சூட்சுமத்தை உடைத்தார், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா. கட்டி முடிக்கப்பட்ட எந்த மத வழிபாட்டுத் தலத்தையும் கோவிலையும் இடிப்பது முறையில்லை என்பதைத் தெளிவாக சனிக்கிழமை இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முன்வைத்து, தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பா உ இராமநாதன் அர்ச்சுனா எச்சரித்திருந்தமை தெரிந்ததே.

யாருக்கும் புரியாத புதிராக தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் 100வது நாள் நெருங்கும் வரையில் தன்னை நோக்கி ஊடகங்களை திசை திருப்பியவாறே அர்ச்சுனா தனது அரசியலை முன்னெடுக்கின்றார். தமிழ் தேசியவாதிகள் பேசுகின்ற அதே மொழியைப் பேசி அவர்களை பந்தாடிவரும் அர்ச்சுனா பா உ சிறிதரன் போன்றவர்களை கத்தரித்தோட்டத்து வெருளிகள் என விமர்சிக்கின்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் இருந்து வந்த முறுகல் நிலை, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அர்ச்சுனா தையிட்டி விகாரை தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொதிப்படைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணி சுகாஸ் வருமாறு எதிர்வினையாற்றியுள்ளார்:

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், முன்னான் பா உ செல்வராஜா கஜேந்திரன், மற்றும் பா உ சட்டத்தணி பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ‘மொக்கு சாம்பிராணிகள்’ என்றும் பா உ அர்ச்சுனா சொல்லம்புகளால் தாக்கியுள்ளார்.

அயோத்தியில் பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டுவேன் என்று சொல்லி பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு பிஜேபி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்ததும் இடிக்கப்பட்ட பள்ளிவாசலில் ராமர் கோயில் கட்டப்பட்டது.

அதேபோல் தையிட்டியில் கட்டி முடிக்கப்பட்ட விகாரையை இடித்து இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை தன்பக்கம் ஈர்க்க முடியும் என மனப்பால் குடிக்கின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான். கஜேந்திரகுமார் போன்று இனவாதத்தைத் தூண்டிவிடும் சக்திகள் தெற்கிலும் பரவாலாக உள்ளனர். இங்கு விகாரை உடைத்தால் அங்கு கோயில்கள் உடைக்கப்படும். தெற்கில் மீண்டும் கஜேந்திரகுமார் பரம்பரையின் கூட்டாளிகளான இனவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள். இவர்களுடைய அரசியல் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் என்கிறார் சோலையூரான்.

தனக்கு அருகில் இருந்து கொண்டு அமைச்சர் ஹர்ச நாணயக்கரவிடம் ‘மச்சான்’ உறவு கொண்டாடி தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை கேட்டு தீர்த்துக்கொள்ளும் பொன்னம்பலம் பரம்பரையில் வந்தவர்கள் அன்றும் இன்றும் தங்களுடைய பிரச்சினைகளை ஆளுபவர்களுடன் ‘மச்சான் உறவுகொண்டாடித் தீர்த்துக்கொள்கின்றனர்’ என்று சுட்டிக்காட்டுகின்றார் பா உ அர்ச்சுனா. ஆனால் இவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் தையிட்டி விகாரையை உடைப்பம் என்று மக்களைத் தூண்டி விடுகின்றனர்.

இந்தப் பரம்பரைப் புத்தியை இவர்கள் இன்னமும் கைவிடவில்லை. இப்படித்தான் கஜேந்திரகுமாருடைய பாட்டன் ஐக்கியதேசியக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமையைப் பறித்தார். இவர்கள் இப்போது பா உ அர்ச்சுனாவுக்கு துரோகிப் பட்டம் கட்டுகின்றனர்.

இராமநாதன் அர்ச்சுனா தங்களுடைய வாக்கு வங்கியை தட்டிப் பறித்துவிட்டார் என்ற கோபம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது. வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்ச்சுனாவின் அணியும் தேர்தலில் குதிக்கும் மீண்டும் மக்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.