02

02

2009ற்கு பின்னர் தமிழ்தேசியம் என்ற பெயரில் உலா வரும் போலி ஆசாமிகள் – முல்லை மதி காட்டம் !

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயற்பட்டுக்கொண்டு திலீபனுக்கு பேரணியும் செய்கிறார் கஜேந்திரகுமார் – தமிழ்தேசிய அரசியலை 2009இன் பின்னர் எவரும் உண்மையாக மேற்கொள்ளவில்லை – புலிகளை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தமிழரசுக்கட்சியினர் – அர்ச்சுனாஇயக்கப்படுகிறார் – இலங்கை தமிழரசுக்கட்சியின் பின்னால் இலங்கை உளவுத்துறை ‘ –

 

புலிகளின் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளருடன் ஒர் உரையாடல்

40 ஆயிரம் ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு – சாவகச்சேரியில் அநுர தெரிவிப்பு

40 ஆயிரம் ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு – சாவகச்சேரியில் அநுர தெரிவிப்பு

வட மாகாணத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு வரவு ,செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
வட மாகாணம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது.2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் ஆண்டாக பதிவாகும்.சுற்றுலா பயணிகள் வட மாகாணத்துக்கு வருகை தர வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காகும். வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்குவோம்.புதிய திட்டங்களை அமைப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம்.

இனி மக்களுக்கு இனவாதம் தேவையில்லை. எந்தவொரு இனவாதத்துக்கும் இலங்கையில் இதன் பின்னர் சந்தர்ப்பம் இல்லை. இந்த நாட்டில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்களுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். மக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாத அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்போம். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.

 

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு, காணி இழந்தோருக்கு நட்டஈடு – அர்ச்சுனாவுடைய கருத்தால் ஆடிப்போன தமிழ்த்தேசியவாதிகள்

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு, காணி இழந்தோருக்கு நட்டஈடு – அர்ச்சுனாவுடைய கருத்தால் ஆடிப்போன தமிழ்த்தேசியவாதிகள்

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவித்தமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

காணாமலாக்கப்பட்டோருக்கான உதவித்திட்டங்களை தொடர்ந்து வழங்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, என்னுடைய அப்பா இலங்கை பொலிஸில் வேலைசெய்து தமிழீழ காவல்துறையில் சேவையாற்றி 2009இல் காணாமலாக்கப்பட்டார். காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு பெருமளவான நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. காணாமலாக்கப்பட்டோர் உண்மையில் இருக்கின்றார்களா இல்லையா என்பதை சொல்லவேண்டும். காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் வேலைசெய்த பெண்மணி சுவிஸில் அரசியல் தஞ்சம் தஞ்சம் கோரியுள்ளார். இவ்வாறான விடயங்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் எங்களுடைய சகோதரங்கள், அப்பா, அம்மா இருக்கின்றார்களா இல்லையா என்பதை தெரிவித்துக்கொண்டு அவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.

இதேவேளை தையிட்டி விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது அதற்குரிய நட்ட ஈட்டை வழங்கி விகாரைக்குரிய காணி பாதிக்கபட்டோருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அர்ச்சுனா முன்வைத்திருந்தார்.

தற்போது இவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன. காணாமலாக்கபட்டோருக்கு நீதிகோரியும், பௌத்தமயமாக்கல் காணிஅபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த்தேசியவாதிகள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசியப்பரப்பில் இவற்றைவைத்தே பெரும்பாலானோர் அரசியல் நடத்துகின்றனர். இந்தநிலையில் அர்ச்சுனாவின் கருத்து அவர்களுடைய அரசியல் இருப்பை பாதிக்கும் என்பதால் அர்சுனாவை சமூக ஊடகங்களில் வசைபாடுகின்றனர். அதேவேளை அர்ச்சுனாவுடைய கருத்து யதார்த்தத்திற்கு ஏற்புடையது என்று அவரது கருத்தைப் பலர் ஆமோதித்து வருகின்றனர்.