05

05

தமிழ் மக்கள் மத்தியில் தேசியக் கொடியும் கறுப்புக் கொடியும் – யாழில் சுதந்திர தின ஊர்வலமும் ! எதிர்ப்பு ஊர்வலமும் !

தமிழ் மக்கள் மத்தியில் தேசியக் கொடியும் கறுப்புக் கொடியும் – யாழில் சுதந்திர தின ஊர்வலமும் ! எதிர்ப்பு ஊர்வலமும் !

யாழில் நேற்று சுதந்திர தினம் எதிரும் புதிருமாக கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி நூற்றுக்கணக்கானவர்கள் தேசியக் கொடியைத் தாங்கியவாறு ஊர்வவலம் சென்றனர். கிளிநொச்சியில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து அதற்கு எதிரான ஊர்வலம் நடைபெற்றது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடாத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருமையுடன் ஊர்வலத்தில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றிருந்தனர்.

ஐக்கிய இளைஞர் இயக்கத்தினால் இந்தப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் பேரணி பண்ணையிலிருந்து யாழ் நகரத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரியும், சுயநிர்ணய உரிமை கோரியும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்புக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி வீதிகளில் இறங்கினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது. இந்தப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கரிநாள் ஊர்வலத்தில் கலந்தகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவாக தன்னை வெளிப்படுத்தும் ஒரு தாயார் பா உ அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.

 

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கொம்மாதுறை பிள்ளையார் ஆலய முன்றலைச் சென்றடைந்து, அங்கு போராட்டம் தொடர்ந்தது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் பறந்த இலங்கைத் தேசியக் கொடி பல்கலைக்கழ மாணவர்களால் இறக்கப்பட்டு பின்னர் கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் பிரதான வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேவேளை, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட இளையோர் பங்கேற்றிருந்தனர்.

காலம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா சம்பந்தன் யாழில் வைத்து தேசியக் கொடியை ஏந்திய போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன் ஆகியோர் துரோகிககளாக்கப்பட்டனர். ஆனால் இன்று யாழ் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் சென்றுள்ளனர். தமிழ் தேசியத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை இது வெளிப்படுத்தி நிற்கின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக் கல்வியயில் கல்வி கற்று சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுகின்றனர். பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் அரசாங்க வேலை மட்டும் தான் செய்வோம் என்று போராடுகின்றனர் எனத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் நித்தியானந்தன் உங்கள் தோழன். இவர்கள் ஏன் கொள்கைக்காக அரச வேலை வேண்டாம் என்று சொல்லலாமே என அவர் தனது முகநூல் பதிவில் ஆலோசணை வழங்கியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுவது பற்றி கருத்து வெளியிட்ட பா உ இராமநாதன் அர்ச்சுனா இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக வாழ விரும்புவதையே வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அரச வாகனத்தை சுற்றுலாவுக்கு பயன்படுத்திய பதவி விலகினார் அவுஸ்ரேலிய அமைச்சர் 

அரச வாகனத்தை சுற்றுலாவுக்கு பயன்படுத்திய பதவி விலகினார் அவுஸ்ரேலிய அமைச்சர்

அவுஸ்ரெலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோ ஹெய்லன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் நிதியளிக்கும் ஓட்டுநரையும் அமைச்சுக்கு சொந்தமான காரையும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளையடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகலை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் குறித்த பயணத்திற்குரிய 750 டொலரையும் திருப்பி செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

இதேபோன்ற அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன, ஆனால் பதவி விலகல் அல்லது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது அரிதாகவே காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி இவ்வாறான மாற்ங்களை அரசியல் கலாசாரத்தில் கொண்டுவருவதை நோக்காக கொண்டே கிளீன் சிறீலங்கா திட்டத்தை முன்னெடுக்கின்றது என ஜனாதிபதி தொடர்ந்தும் வலிறுத்தி வருகின்றார்.

நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

 

நீரிழிவு நோய் தொடர்பான இன்சுலின் உட்பட்ட மருந்துகளுக்கு கடந்த ஆண்டு 7.3பில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவப் பிரிவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீரிழிவுநோய்கான மருத்துவ செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகரித்து செல்வதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தொடர்ச்சியா மருந்துகளுக்கான செலவீனங்களுக்கு அரச கருவூலத்தை நம்பியிருக்காமல் நீரிழிவுநோயைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுத்தினார்.

சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் பங்கை வலியுறுத்தும் வகையில், மருந்துகளுக்கு அப்பால் சுகாதாரப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த அழகான இலங்கையை மீட்டெடுக்க வாரீர் – ஜனாதிபதி அனுர அழைப்பு !

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த அழகான இலங்கையை மீட்டெடுக்க வாரீர் – ஜனாதிபதி அனுர அழைப்பு !

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில், நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகின்றோம். இலங்கையின் வரலாற்றை தற்போது மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் பிரவேசித்துள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் தற்போது ஒன்றாகப் போராடுகின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி அனுர.

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

 

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். யாழ். மக்கள் முதன்முறையாக தெற்கு அரசு மீது, தெற்குத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காணமுடிந்தது. இது மிக முக்கியமாகும். வடக்கில் உள்ள சில தலைவர்கள் தனிநாடு தருகின்றோம் எனக் கூறியபோதும், அப்படி கூறியவர்களின் அரசியல் பரம்பரையில் வந்தவர்கள் இருக்கின்றபோதிலும் மக்கள் எம்மை தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எம்மிடையே மீண்டும் பிரிவினைவாதம், போர், நம்பிக்கையீனம் என்பன இல்லாத, அனைவரும் ஒன்றியைணக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய ஆசிர்வாதம் வடக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.

30 வருடகால போர் மற்றும் அரசியல் காரணங்களால் வடக்கு பகுதிக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை. அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை வேகமாகத் தீர்க்க வேண்டும் என்றார்.

டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !

டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 18,000 வரையான இந்தியர்களில் 200 பேர் வரை நேற்று விமானத்தில் ஏற்றப்பட்டு செவ்வாய் இரவு இந்தியாவை வந்தடைந்தனர். சி -17 ரக இராணுவ விமானத்தில் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய டொனால் ட்ரம் ஜனவரி 20இல் பதவியேற்றதுமே தான் வழங்கிய வாக்குறுதிகளுக்காக செயலாக்கக் கட்டளைகளில் கையெழுத்திட்டார். அதன் படி அமெரிக்காவில் பிறந்து பிறப்புரிமையால் வழங்கப்படும் குடியுரிமையையும் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் 11 மில்லியன் பேர் வரை சட்டவிரோதமாக வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை வெளியேற்றிவிட்டு அமெரிக்காவால் இயங்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் பொருளாதாரப் போரையும் ஒரே சமயத்தில் டொனால் ட்ரம் ஆரம்பித்துள்ளார். அதன் விளைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரவுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவால் வரி மூலம் தண்டிக்கப்பட்ட நாடுகள் வர விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கனடா அமெரிக்க பொருட்களுக்கு 25 வீத வரியை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பொருட்களின் விலைக அதிகரிக்கும். அத்தோடு குறைந்த சம்பளத்துடன் பணியாற்றிய குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்டுகின்ற போது வேலைக்கான கேள்வி அதிகரிக்கும். உள்ளுரில் உள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டிவரும். அதனால் பொருட்கள் இன்னமும் விலையேறும்.
அமெரிக்க ஜனாதிபதியினதும் அவருடைய பணக்கார பசங்களதும் கூட்டு விளையாட்டு அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த தீவிர வலதுசாரிப் போக்கு ஏனைய மேற்குலக நாடுகளிலும் இதே போன்றதோரு வலதுசாரிப் போக்கைத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.
சட்டவிரோதமாகக் குடியேறிய 200 வரையான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, ஏனைய வலதுசாரி அரசியல்வாதிகளுக்கும் முனணுதாரணமாக அமைய உள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் என ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரித்துவம் மேலோங்கி வருகின்றது. ஓல்ற்ர நேற்றிவ் போர் டொச்லன்ட் என்ற ஏஎப்டி கட்சி வெளிநாட்டவர்களை அவர்கள் ஜேர்மனியில் பிறந்தவர்களாக இருந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக வாழ்கின்றனர். இவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றது.