நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

 

நீரிழிவு நோய் தொடர்பான இன்சுலின் உட்பட்ட மருந்துகளுக்கு கடந்த ஆண்டு 7.3பில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவப் பிரிவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீரிழிவுநோய்கான மருத்துவ செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகரித்து செல்வதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தொடர்ச்சியா மருந்துகளுக்கான செலவீனங்களுக்கு அரச கருவூலத்தை நம்பியிருக்காமல் நீரிழிவுநோயைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுத்தினார்.

சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் பங்கை வலியுறுத்தும் வகையில், மருந்துகளுக்கு அப்பால் சுகாதாரப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *