அரச வாகனத்தை சுற்றுலாவுக்கு பயன்படுத்திய பதவி விலகினார் அவுஸ்ரேலிய அமைச்சர்
அவுஸ்ரெலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோ ஹெய்லன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் நிதியளிக்கும் ஓட்டுநரையும் அமைச்சுக்கு சொந்தமான காரையும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளையடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பதவி விலகலை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் குறித்த பயணத்திற்குரிய 750 டொலரையும் திருப்பி செலுத்துவதாக அறிவித்துள்ளார்.
இதேபோன்ற அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன, ஆனால் பதவி விலகல் அல்லது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது அரிதாகவே காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி இவ்வாறான மாற்ங்களை அரசியல் கலாசாரத்தில் கொண்டுவருவதை நோக்காக கொண்டே கிளீன் சிறீலங்கா திட்டத்தை முன்னெடுக்கின்றது என ஜனாதிபதி தொடர்ந்தும் வலிறுத்தி வருகின்றார்.