டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !

டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 18,000 வரையான இந்தியர்களில் 200 பேர் வரை நேற்று விமானத்தில் ஏற்றப்பட்டு செவ்வாய் இரவு இந்தியாவை வந்தடைந்தனர். சி -17 ரக இராணுவ விமானத்தில் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய டொனால் ட்ரம் ஜனவரி 20இல் பதவியேற்றதுமே தான் வழங்கிய வாக்குறுதிகளுக்காக செயலாக்கக் கட்டளைகளில் கையெழுத்திட்டார். அதன் படி அமெரிக்காவில் பிறந்து பிறப்புரிமையால் வழங்கப்படும் குடியுரிமையையும் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் 11 மில்லியன் பேர் வரை சட்டவிரோதமாக வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை வெளியேற்றிவிட்டு அமெரிக்காவால் இயங்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் பொருளாதாரப் போரையும் ஒரே சமயத்தில் டொனால் ட்ரம் ஆரம்பித்துள்ளார். அதன் விளைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரவுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவால் வரி மூலம் தண்டிக்கப்பட்ட நாடுகள் வர விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கனடா அமெரிக்க பொருட்களுக்கு 25 வீத வரியை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பொருட்களின் விலைக அதிகரிக்கும். அத்தோடு குறைந்த சம்பளத்துடன் பணியாற்றிய குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்டுகின்ற போது வேலைக்கான கேள்வி அதிகரிக்கும். உள்ளுரில் உள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டிவரும். அதனால் பொருட்கள் இன்னமும் விலையேறும்.
அமெரிக்க ஜனாதிபதியினதும் அவருடைய பணக்கார பசங்களதும் கூட்டு விளையாட்டு அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த தீவிர வலதுசாரிப் போக்கு ஏனைய மேற்குலக நாடுகளிலும் இதே போன்றதோரு வலதுசாரிப் போக்கைத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.
சட்டவிரோதமாகக் குடியேறிய 200 வரையான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, ஏனைய வலதுசாரி அரசியல்வாதிகளுக்கும் முனணுதாரணமாக அமைய உள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் என ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரித்துவம் மேலோங்கி வருகின்றது. ஓல்ற்ர நேற்றிவ் போர் டொச்லன்ட் என்ற ஏஎப்டி கட்சி வெளிநாட்டவர்களை அவர்கள் ஜேர்மனியில் பிறந்தவர்களாக இருந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக வாழ்கின்றனர். இவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *