03

03

சமூகவலைத்தள பாவனையால் பாலியல் நோய்கள் !

சமூகவலைத்தள பாவனையால் பாலியல் நோய்கள் !

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் இந்நிலைக்கு சமூக ஊடகங்களின் பயன்பாடும் ஒரு காரணம் எனத் தெரிவித்த அவர் தற்போது இளைஞர்கள் மத்தியில் டேட்டிங் பயன்பாடுகள் பரவலாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர்.

அது மட்டுமல்லாமல், சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர் என்றும், இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன’ எனவும் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

 

யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது விகாரை அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்பதற்குரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்ததுடன் விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் தெரியப்படுத்தினர்.

விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர்.

காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்திவருகின்றார். அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறித்த கூட்டத்தில், முழுமைப்படுத்தப்பட்ட விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது எனவும் தையிட்டி விகாரை விவகாரம் சைக்கிள் கட்சியினரின் அரசியலுக்காக பயன்படுகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஜனாதிபதி அனுரவும் யாழில், மக்களுக்குச் சொந்தமான காணிகள் மக்களுக்கானது, வட மாகாணத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், காணிகளை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தரும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடல் வவளத்தை பாதுகாக்க புதிய பொறிமுறை – அமைச்சர் சந்திரசேகர் !

கடல் வவளத்தை பாதுகாக்க புதிய பொறிமுறை – அமைச்சர் சந்திரசேகர் !

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம், தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை . உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை , ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் முறையிட்டனர் . இதற்கு பதிலளித்த அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடல் வளத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று, அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என்றார்.

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் ! 

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் !

 

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் தச்சங்காடு மயானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் இரா சம்பந்தனின் மரணமும், அதன் தலைவர் மாசையின் மரணமும் வடக்கு கிழக்கு மக்களால் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனாலும் அதனை வைத்து மேற்கொள்ளப்படும் அரசியலுக்கு குறைவிருக்கவில்லை.

 

இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவரும் போது, தச்சங்காடு மயானத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது பிரிவினரை இலக்கு வைத்து சர்ச்சைக்குரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள் என பெயரிடப்பட்ட பதாகை மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. சுமந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 18 நபர்களின் படங்கள் பெயர்களுடன் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அந்தப் பதாகை சமூக வலைத்தளங்களில் உலாவந்திருந்தது.

தமிழரசுக்கட்சிக்குள் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிலிருந்தே சுமந்திரன் ஆதரவு அணி – சிறிதரன் ஆதரவு அணி என்று இருகூராக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் மாவை சேனாதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அங்கேயே தரித்து நின்ற பா.உ சிறிதரன் மீது ஊடகங்களின் பார்வை குவிந்திருந்ததுடன் – வழமை போல் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை துரோகிகள் பட்டியலில் சேர்த்து மரணச்சடங்கிலும் தமிழ்தேசியம் என்ற பெயரில் மிகப்பெரிய ஓர் அரசியல் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என தமிழர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் – குப்பையில் கொட்டப்படும் 15 லட்சம் கிலோ இலவச உணவுப் பொருட்கள் ! 

அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் – குப்பையில் கொட்டப்படும் 15 லட்சம் கிலோ இலவச உணவுப் பொருட்கள் !

 

2023இல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்கள் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் காலாவதியாகிய நிலையில் குப்பையில் கொட்டப்படவுள்ளன.

வறிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொட களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களே இவ்வாறு நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர், பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு இவற்றைக் கண்டறிந்துள்ளது.

மூன்று களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தவறான முகாமைத்துவத்தால் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படாமல் வீணாக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமை இலங்கையின் அனைத்து அரசாங்க நிறுவனங்களில் நிகழ்வதுடன் அரச நிறுவனங்கள் ஊழல் மற்றும் பக்கச்சார்பு போன்றவற்றால் நிரம்பி வழிகின்றது. யாழில் ஜனாதிபதி அனுர குமார, வடக்கு மாகாண அரசாங்க திணைக்களங்கள் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் நிதியை மீண்டும் அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் கிட்டத்தட்ட 15 லட்சம் அரச அதிகாரிகள் காணப்படுவதுடன் 16 நபருக்கு ஓர் அரச அதிகாரி என்ற அடிப்படையில் இந்த தொகை அமைகிறது. இது மிக அதிகமான ஊழியர்கள் தொகை என அண்மையில் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்ததுடன் புதிய நியமனங்களை கட்டுப்படுத்துமாறும் அறிவுரை வழங்கியிருந்தது.

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் தங்களை முன்னிலைப்படுத்த பலரும் முயற்சி எடுத்தனர். அதில் முன்னிலைக்கு வந்தவர்களில் பா உ சிறிதரனும், பா உ கஜேந்திரகுமாரும் முக்கியமானவர்கள். இவர்கள் மாவீரர் தினங்களில் தங்களை அடையாளம் காட்டியும், தாங்களே ‘தேசியத் தலைவர்’ரின் கொள்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்புகின்றனர். முன்னாள் விடுதலைப் போராளியும் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளருமான முல்லை மதியின் வார்த்தைகளில் சொன்னால் அதித கற்பனாவதிகள்.

தற்போது ஈழத் தமிழர்களைத் தாண்டி பின்தளத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் “தேசியத் தலைவர்” போட்டியில் முன்னணியில் ஓடிக்கொண்டுள்ளார். அவருடைய அணிக்கு மதிவதனி பிரபாகரனின் சகோதரி அருணா முக்கிய தூணாக உள்ளார். தலைவரின் குடும்பத்தை தான் நேரில் சந்தித்ததாக சீமானுக்கான அன்று ஒரு புரட்டையும் அவர் வெளியிட்டு இருந்தார். சீமானுக்கு லண்டனில் நிதி வழங்குபவர்களில் முக்கியமானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக நன்கு அறியப்பட்ட பிரித்தானிய அரசியல் செயற்பாட்டாளர் ஜனனி ஜனநாயகத்தின் தந்தை, நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி சீவரத்தினத்தின் மகன் இவர்களை விடவும் பல குட்டிக் குட்டி சீமான் ஆதரவுக் கூறுகள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளனர்.

இனவாதியும் சாதியமானுமான சீமானுடன் உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக மான் சின்ன அரசியல்வாதி இராசையா உமாகரன் உள்ளார். அவர் சீமானை வெகுவிரையில் தேசியத் தலைவராகப் பிரகடனப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசிலடிச்சான் குஞ்சுகளும் பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகளும் சமூகவலைத்தள லைக் பிரியர்களுமே சீமானின் அணியல் பெரும்பாலும் உள்ளனர். அவர்களுடாக சீமான் கணிசமான வருமானத்தை ஈட்டுவதுடன் ஈழத்தமிழர்களுக்கு எதிராக முற்போக்குதன்மையோடு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை சீமான் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி சங்கிகளின் பிஜேபியை தமிழ்நாடுக்குக் கொண்டு வரப்படாதபாடு படுகின்றார்.

திராவிடம் தமிழகத்தில் ஆரியத்துவத் திணிப்புக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும் வீச்சுப்பெற்ற கருத்தியல் என்கிறார் அசோக் யோகன் கண்ணமுத்து. பெரியார் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியாரின் சீர்திருத்தங்களில் காணப்பட்ட முற்போக்குப் பாத்திரம் முக்கியமானது என்கிறார் அவர். சீமான் போன்றவர்களின் சுயநல விமர்சனங்களையும் அசோக் யோகன் கண்ணமுத்து கடுமையாக விமர்சித்தார்.

கொம்யுனிஸ்ட் சண்முகதாசனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் முகநூலில் நன்கு அறியப்பட்டவருமான எஸ் பாலச்சந்திரன் தன்னுடைய இடதுசாரியச் சிந்தனைக்கு முரணாக சீமானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அவருடைய பதிவை நீங்கள் இங்கு காணலாம்.

“தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள், புலனாய்வுத்துறைகள் பேச விரும்புவதை தன்னை விடுதலைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் சீமானே பேச ஆரம்பித்து விட்டார்” என்று சீமானின் சந்தர்ப்பவாத அரசியலைக் கடுமையாக விமர்சிக்கின்றார், ஜேர்மனியில் இருந்து இயங்கும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சபேசன்.

லைக்காவுக்கு எதிராக ஒருவன் மீடியா ஊடகவியலாளர்கள் போராட்டம் ! ஊடகவியலாளர்களை நடுத்தெருவில் விட்ட லைக்கா !

லைக்காவுக்கு எதிராக ஒருவன் மீடியா ஊடகவியலாளர்கள் போராட்டம் ! ஊடகவியலாளர்களை நடுத்தெருவில் விட்ட லைக்கா !

 

லைக்காவின் மீடியாக் குழுமத்திற்கு எதிரான வழக்குகள் வழக்குகள் ஆரம்பிக்கப்படதையடுத்து லைக்கா மீடியா குழுமத்தை விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் லைக்காவின் தமிழ் மீடியாக் குழுமமான ஒருவனை வாங்குவதற்குத் தயாரான நிலையில் யாரும் இருக்கவில்லை. அதற்கான நன்மதிப்பையும் லைக்கா உருவாக்கவில்லை. இந்நிலையிலேயே லைக்கா ஊடகக் குழுமம் மூடுவிழாக் காண்கிறது என்ற செய்தியை இரு வாரங்களுக்கு முன் தேசம்நெற் செய்தி வெயிளியிட்டு இருந்தது. தற்போது லைக்காவின் தமிழ் ஊடகப் பிரிவை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் சடுதியாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன் ஒருவன் அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.

லைக்கா நிறுவனம் இயங்கிய நாடுகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான வழக்குகளுக்குக் குறைவில்லை. வரி ஏய்ப்பிலும் லைக்காவுக்கு நிகர் லைக்காவே எனும் அளவிற்கு ஐரோப்பிய நாடுகளிலேயே நீதி மன்றங்கள் தீர்ப்பளித்து இருந்தன. பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் லைக்காவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் மொத்தம் 60 மில்லியன் பவுண்கள் வரியைச் செலுத்த வேண்டும் என லைக்கா பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும் வரி நெருக்கடிகள் உருவாகியுள்ளது. இலங்கையிலும் சட்ட நெருக்கடிகள். அதனால் தற்போது லைக்கா கிரிஸ்நாட்டுக்கு தங்கள் அலுவலகத்தை நகர்த்த உள்ளதாகத் தெரியவருகின்றது.

ஒருவன் மீடியா குழுமத்தில் அவர்களுடைய டிஜிற்றல் பப்ளிகேஷனுக்கு என்ன நடக்கும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை. அது தொடர்ந்தும் இயங்கும் என்றும் அது இன்றோடு நிறுத்தப்படும் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒருவன் பத்திரிகைக்கு ஆரம்பத்தில் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனே நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் நின்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதவன் தொலைக்காட்சியின் இயக்குநர் குரபரனூடாக வேட்பாளருக்கு ஒரு கோடி நிதி வழங்கியதும் அந்த வேட்பாளர்களை ஆதரிக்கச் சொல்லி பணிப்புரைகள் வழங்கப்பட்டதால் வித்தியாதரன் தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறி விட்டார்.

அவரைத் தொடர்ந்து அமிர்தநாயகன் நிகஸ்ஷன் பிரத ஆசிரியராக பொறுப்பேற்றார். டிசம்பர் 3 அன்று நிக்ஸ்ஷன் தனது முகநூல் பதிவில் வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “நான் எதிர்பார்க்கவில்லை என் மீது கொண்ட அன்பும் எனது நிர்வாகத்தின் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பும் இன்று வெளிப்பட்டுள்ளதை நான் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.” தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதையொட்டியே இப்பதிவு வெளியிடப்பட்டது. அது நடந்து சரியாக இரு மாதங்களில் நிக்ஸனின் மீதான நம்பிக்கையால் தங்களுடைய நிரந்தர வேலைகளையும் விட்டுவிட்டு லைக்காவின் கொழுத்த சம்பளத்திற்காக வந்தவர்கள் அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி நிர்க்கதியாகி உள்ளனர்.

ஐபிசி பிரித்தானியக் கலையகத்திலும் ஊடகவியலாளர்களுக்கு இதே நிலையேற்பட்டது. கொழுத்த சம்பளத்தோடு பெரும் எண்ணிக்கையில் ஊடகவியலாளர்கள் தொழில்நுட்பவியலாளர்களை உள்வாங்கி விட்டு சடுதியாக அவர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. ஊடக அனுபவமற்ற வியாபாரிகள் ஊடகங்களைப் பொறுப்பேற்கின்ற போது அவர்கள் தங்களுடைய நாய்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதில்லை.

இது தொடர்பில் கருத்து வழங்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர், மற்றவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்கள் லைக்கா நிறுவனத்திற்கு எதிராக தொழில் நீதிமன்றில் முறைப்பாடு செய்து தங்களுக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளப் போராட வேண்டும் எனத் தெரிவித்தார்.