கடல் வவளத்தை பாதுகாக்க புதிய பொறிமுறை – அமைச்சர் சந்திரசேகர் !
இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம், தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை . உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை , ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் முறையிட்டனர் . இதற்கு பதிலளித்த அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடல் வளத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று, அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என்றார்.