மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் ! 

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் !

 

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் தச்சங்காடு மயானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் இரா சம்பந்தனின் மரணமும், அதன் தலைவர் மாசையின் மரணமும் வடக்கு கிழக்கு மக்களால் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனாலும் அதனை வைத்து மேற்கொள்ளப்படும் அரசியலுக்கு குறைவிருக்கவில்லை.

 

இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவரும் போது, தச்சங்காடு மயானத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது பிரிவினரை இலக்கு வைத்து சர்ச்சைக்குரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள் என பெயரிடப்பட்ட பதாகை மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. சுமந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 18 நபர்களின் படங்கள் பெயர்களுடன் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அந்தப் பதாகை சமூக வலைத்தளங்களில் உலாவந்திருந்தது.

தமிழரசுக்கட்சிக்குள் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிலிருந்தே சுமந்திரன் ஆதரவு அணி – சிறிதரன் ஆதரவு அணி என்று இருகூராக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் மாவை சேனாதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அங்கேயே தரித்து நின்ற பா.உ சிறிதரன் மீது ஊடகங்களின் பார்வை குவிந்திருந்ததுடன் – வழமை போல் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை துரோகிகள் பட்டியலில் சேர்த்து மரணச்சடங்கிலும் தமிழ்தேசியம் என்ற பெயரில் மிகப்பெரிய ஓர் அரசியல் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என தமிழர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *