தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் தங்களை முன்னிலைப்படுத்த பலரும் முயற்சி எடுத்தனர். அதில் முன்னிலைக்கு வந்தவர்களில் பா உ சிறிதரனும், பா உ கஜேந்திரகுமாரும் முக்கியமானவர்கள். இவர்கள் மாவீரர் தினங்களில் தங்களை அடையாளம் காட்டியும், தாங்களே ‘தேசியத் தலைவர்’ரின் கொள்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்புகின்றனர். முன்னாள் விடுதலைப் போராளியும் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளருமான முல்லை மதியின் வார்த்தைகளில் சொன்னால் அதித கற்பனாவதிகள்.

தற்போது ஈழத் தமிழர்களைத் தாண்டி பின்தளத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் “தேசியத் தலைவர்” போட்டியில் முன்னணியில் ஓடிக்கொண்டுள்ளார். அவருடைய அணிக்கு மதிவதனி பிரபாகரனின் சகோதரி அருணா முக்கிய தூணாக உள்ளார். தலைவரின் குடும்பத்தை தான் நேரில் சந்தித்ததாக சீமானுக்கான அன்று ஒரு புரட்டையும் அவர் வெளியிட்டு இருந்தார். சீமானுக்கு லண்டனில் நிதி வழங்குபவர்களில் முக்கியமானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக நன்கு அறியப்பட்ட பிரித்தானிய அரசியல் செயற்பாட்டாளர் ஜனனி ஜனநாயகத்தின் தந்தை, நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி சீவரத்தினத்தின் மகன் இவர்களை விடவும் பல குட்டிக் குட்டி சீமான் ஆதரவுக் கூறுகள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளனர்.

இனவாதியும் சாதியமானுமான சீமானுடன் உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக மான் சின்ன அரசியல்வாதி இராசையா உமாகரன் உள்ளார். அவர் சீமானை வெகுவிரையில் தேசியத் தலைவராகப் பிரகடனப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசிலடிச்சான் குஞ்சுகளும் பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகளும் சமூகவலைத்தள லைக் பிரியர்களுமே சீமானின் அணியல் பெரும்பாலும் உள்ளனர். அவர்களுடாக சீமான் கணிசமான வருமானத்தை ஈட்டுவதுடன் ஈழத்தமிழர்களுக்கு எதிராக முற்போக்குதன்மையோடு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை சீமான் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி சங்கிகளின் பிஜேபியை தமிழ்நாடுக்குக் கொண்டு வரப்படாதபாடு படுகின்றார்.

திராவிடம் தமிழகத்தில் ஆரியத்துவத் திணிப்புக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும் வீச்சுப்பெற்ற கருத்தியல் என்கிறார் அசோக் யோகன் கண்ணமுத்து. பெரியார் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியாரின் சீர்திருத்தங்களில் காணப்பட்ட முற்போக்குப் பாத்திரம் முக்கியமானது என்கிறார் அவர். சீமான் போன்றவர்களின் சுயநல விமர்சனங்களையும் அசோக் யோகன் கண்ணமுத்து கடுமையாக விமர்சித்தார்.

கொம்யுனிஸ்ட் சண்முகதாசனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் முகநூலில் நன்கு அறியப்பட்டவருமான எஸ் பாலச்சந்திரன் தன்னுடைய இடதுசாரியச் சிந்தனைக்கு முரணாக சீமானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அவருடைய பதிவை நீங்கள் இங்கு காணலாம்.

“தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள், புலனாய்வுத்துறைகள் பேச விரும்புவதை தன்னை விடுதலைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் சீமானே பேச ஆரம்பித்து விட்டார்” என்று சீமானின் சந்தர்ப்பவாத அரசியலைக் கடுமையாக விமர்சிக்கின்றார், ஜேர்மனியில் இருந்து இயங்கும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சபேசன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *