ஈஸ்டர் தாக்குதலின் ‘மஹ மொலகரு’ கோட்டாபய ராஜபக்சவா ? – விரைவில் கைது ?
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் புதிய “மஹ மொலகரு ” – முக்கிய காரணகர்த்தா – ஒருவரை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அசாத் மௌலானாவின் சனல் 4 வீடியோ பற்றி பேசிய உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று சனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.