24

24

ஈஸ்டர் தாக்குதல் – நியாயம் வழங்க கோரி இத்தாலியில் போராட்டம் !

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க கோரி இத்தாலி நாபோலியில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

Demonstrations demand justice for victims of Easter attacks i

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 இலங்கையர்கள் கலந்துக்கொண்டதுடன் இத்தாலிய பிரஜைகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இத்தாலியில் வசிக்கும் அருட் தந்தை டிரோன் மிஹிந்துகுலசூரிய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி ஜெப ஆராதனையையும் நடத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் ஆராதயைில் கலந்துக்கொண்ட நிலையில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.

தோண்டத்தோண்ட பிணங்கள் – பாதிரியாரின் ஆலோசனையால் சொர்க்கம் செல்ல உயிரை விட்ட அப்பாவி மக்கள் !

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் கமாவ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த குழுவினரிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர். அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர். இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்து உள்ளனர். இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து உள்ளனர். போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்து விட்டார். இதுவரை இதுபோன்று 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி,  ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

யானையை கொடுமைப்படுத்தும் இலங்கை – மீளப்பெற தாய்லாந்து அரசு முயற்சி !

2001 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட மூன்று யானைகளில் ஒன்றான சக் சுரினை, மீளப் பெறுவதற்கான வழிகளை தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த யானை, அதனை கையாளுபவர்களால் தவறாக நடத்தப்பட்டதாக விலங்குகள் உரிமைகள் அமைப்பினால் கடந்த ஆண்டு அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக் சுரின் நிலைமையை அறிந்திருந்தாலும், யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வது, அதன் அளவு மற்றும் அதனுடைய காயங்களின் தன்மை காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளன.

தாய்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா, சாக் சுரினை தமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு C-130 போக்குவரத்து விமானத்தைப் பயன்படுத்துவதே ஆரம்பத் திட்டம் என்று விளக்கியுள்ளார் இருப்பினும், ஆயுதங்கள் மற்றும் தாங்கிகள் போன்ற இராணுவ தளவாடங்களை கொண்டு செல்வதற்காக முதலில் வடிவமைக்கப்பட்ட விமானத்தி ல், யானையை அடைக்க பொருந்தாது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன் இந்த யோசனை கைவிடப்பட்டது. இதனையடுத்து, சக் சுரினை மீட்டெடுக்க ஒரு கப்பலை அனுப்பும் திட்டத்தை தாய்லாந்து அரசாங்கம் முன்மொழிந்தது. எனினும் காயப்பட்ட யானைக்கு இரண்டு வார பயணம் மிக நீண்டதாக இருக்கும் என்பதால் இதுவும் பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. சக் சுரின் நாடு திரும்புவதற்கு பொருத்தமான தீர்வைக் காண அமைச்சு தற்போது வெளிவிவகார அமைச்சுடன் ஒத்துழைத்து வருவதாக வரவுட் கூறினார்.

ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு குறித்த யானை பரிசளிக்கப்பட்டதிலிருந்து அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதன் பின்னர், சக் சுரின் பல இடங்களுக்கு கை மாறியுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சமீப காலம் வரை, குறித்த யானை அளுத்கம கந்தே விகாரையில் வசித்து வந்தது. இலங்கையின் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான Rally for Animal Rights and Environment (ரேர்) கூற்றுப்படி, விகாரையில் யானையின் உடல் சங்கிலியால் கட்டுப்படுத்தப்பட்டதால், அதன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு இறுதியில், சக் சுரினை அவசர மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியது.