ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க கோரி இத்தாலி நாபோலியில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 இலங்கையர்கள் கலந்துக்கொண்டதுடன் இத்தாலிய பிரஜைகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இத்தாலியில் வசிக்கும் அருட் தந்தை டிரோன் மிஹிந்துகுலசூரிய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி ஜெப ஆராதனையையும் நடத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் ஆராதயைில் கலந்துக்கொண்ட நிலையில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.