June

June

யாழ்.முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட 213 பேர் உறவினர்களுடன் தங்கி வாழ அனுமதி

civiling_fleeng3.jpgவன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து குடாநாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 111 குடும்பங்களைச் சேர்ந்த 227 அங்கத்தவர்கள் சனிக்கிழமை ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 60 வயதுக்கும் மேற்பட்ட 213 பேர் அவர்களின் உறவினர்களுடன் தங்கி வாழுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் விண்ணப்பித்தவர்கள் பொறுப்பேற்க நலன்புரிநிலையங்களுக்கு வருமாறு யாழ்.அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

நலன்புரி நிலையங்களுக்கு வருகைதரும்போது தமது ஆள் அடையாள அட்டை, கிராமசேவை அலுவலரிடம் வதிவிடத்தை உறுதிப்படுத்திய கடிதம் ஆகியவற்றைக் கொண்டு அவர்களது உறவினர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களிற்கு நேரடியாகச் சென்று பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போக்குவரத்து ஏற்பாடுகளை அவரவரே செய்துகொள்ளல் வேண்டும். எனினும் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மாவட்டச்செயலக புனர்வாழ்வுக்கிளையுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள வயோதிபர்களின் விபரம்: நலன்புரிநிலையம்:கோப்பாய் 1. சிவகுரு இலட்சுமிப்பிள்ளை 366971050V 2. முத்தையா இராசம்மா 346872101V 3. ஆழ்வாப்பிள்ளை யோகேஸ்வரன் 483635087V 4. சின்னத்தம்பி தம்பையா 483218035V 5. தம்பையா பார்வதம் 60 வயது 6. சின்னத்தம்பி இராசமணி 488520040V 7. முருகுப்பிள்ளை புஸ்பவதி பிறப்பு 1941 நலன்புரிநிலையம்:மிருசுவில் (RCTMS) 1. துரைராசா மேரிறோஸ் 458272522V 2. யோகலிங்கம் பெனடிக்ற் 1945.10.20 3. சின்னையா நல்லையா 470631040V 4. கிருஷ்ணபிள்ளை இராசமணி 446880519V 5. முத்துராஜா வரோனிக்கம்மா 427790320V 6. சிவசாமித்துரை இராசம்மா 457030207V 7. இளையதம்பி கணபதிப்பிள்ளை 450593176V 8. கணபதிப்பிள்ளை தவமணிதேவி 486971786V 9. இராமுப்பிள்ளை கிஷ்ணமூர்த்தி 411880559v 10. சூசைப்பிள்ளை மரியதாஸ் 352282022v 11. மரியதாஸ் மேரி பெனடிக்கம்மா 406741869X 12. இராசையா குணரட்ணம் 362480884V 13. கறுப்பையா பூமணி 448222349V 14. சுவக்கீன் செபமாலை 280500704V 15. செல்லையா வேலுப்பிள்ளை 460510120V 16. பெனடிற் பிரான்சிஸ் 462890230V 17. குணரட்ணம் செல்லம்மா 446282476V 18. இராசையா பொன்னையா 416270031V நலன்புரிநிலையம்:கொடிகாமம் (GTMS) 1. இராசேந்திரம் மனோன்மணி 457270640V 2. குருசுமுத்து ஞானமுத்து 461944132V 3. கறுப்பன் மாரிமுத்து 423552530X 4. செல்லத்துரை சிவக்கொழுந்து 1927.08.04 5. பொன்னுத்துரை அஞ்சலாதேவி 1949.01.01 6. தங்கராஜா ராஜலக்ஸ்மி 496625137V 7. சின்னையா நாகதம்பி 412251016V நலன்புரிநிலையம்:கைதடி சிறுவர் இல்லம் 1. பேதுறுப்பிள்ளை இராசப்பு 412250091V 2. காளியன் மணியம் 480253183V நலன்புரிநிலையம்:பல்கலைக்கழக விடுதி,கைதடி 1.செல்லன் செல்லத்துரை 1946.03.03 2. செல்லத்துரை கனகமணி 477691684V 3. வலோரி அன்ரன் 493101358V 4. நல்லையா அந்தோனிப்பிள்ளை 470851430V 5. வல்லிபுரம் முத்துக்குமாரு 1939.01.01 6. அருளப்பு பிலிமினியம்மா 358401368V 7. அந்தோனி பிலிப்பையா 341560284V 8. பிலிப்பையா ஞானசிகாமணி 466270164V 9. செபஸ்தியாம்பிள்ளை பிலிப் 400622680V 10. புஷ்பராசா ஜெயராணி 496063864 V 11. கனகன் செல்லத்துரை 1949.01.01 12. அருளம்மா சந்தியா 355321118V 13. முத்துக்குமார் சிவராசா 461360416V 14. கந்தையா ஜோர்ஜ் நவரட்ணம் 442052913V நலன்புரிநிலையம்: PRI, கைதடி 1. பொன்னுத்துரை ருக்மணியம்மா 1929.01.01 2. சின்னையா நவரட்ணம் 1947.11.09 3. நவரட்ணம் அக்னேசம்மா 496350286V 4. பூசைப்பிள்ளை அக்னேஷ் 366120300V 5. வேலன் ஞானபதி 1944.01.01 6. அந்தோனிப்பிள்ளை அன்னம்மா 1942.12.09 7. அலேசிப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை 1937.12.20 8. கபிரியாப்பிள்ளை (ஊ)போலினா 1934.01.01 9. கதிரவேலு பகவதியம்மா 1949.02.24 10. சூசைப்பிள்ளை அருளானந்தம் 1949.04.05 11. ஆரோக்கிய நாதர் செபஸ்தியாம்பிள்ளை 491314303ங 12. சுந்தரமூர்த்தி சிறிஸ்கந்தராஜா 1948.07.07 13. முத்துக்குமார் சிவராஜா 461360416V 14. பிலிப் சாந்தி யோகு 1935.01.01 15. சூசைப்பிள்ளை அமிர்தநாயகம் 401650229V 16. கந்தையா வரசுந்தரம் 1947.02.03 17. மருதலிங்கம் மதியாபரணம் 1949.04.17 18. நாகையா செல்லையா 472062840V 19. செல்லையா இராஜேஸ்வரி 493872231V 20. மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை 492681962V 21. ஜோன் சூசையம்மா 1949.01.01 நலன்புரிநிலையம்: சாவகச்சேரி மகளிர் கல்லூரி 1. சரஸ்வதி குமரேசன் 305040363V 2. வைரமுத்து தேவசிகாமணி 373962930V 3. அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியநாதன் பிறப்பு 1930. 4. ஆரோக்கியநாதன் சிசிலியா 458292132து 5. நடராசா நாகபூரணம் 1934.07.02. 6. முருகேசு விநாயகமூர்த்தி 463162468V 7. ரத்னம் சிதம்பரம் 426593319V 8. மோசஸ் மரியப்பிள்ளை 1948.07.28 9. செல்லையா பொன்னம்மா 1948.09.07 10. அருமைத்துரை இந்திராணி 476452139V 11. வைரமுத்து வீரசிங்கம் 350971750V 12. வீரசிங்கம் கனகாம்பிகை 1938.03.07. 13. அருளப்பு ஆன்றோஸ் 455532442V 14. ஆசீர்வாதம் பிரான்சிஸ் சேவியர் 1943.09.01 15. பிரான்சிஸ் சேவியர் பிலோமின்னம்மா 475483545V 16. செல்வன் தங்கமணி 1948.08.16 17. தம்பித்துரை அந்தோனிப்பிள்ளை 461780555V 18. நடராசா இந்திராதேவி 425760319V 19. கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் 463520070V 20. சின்னத்துரை கணபதிப்பிள்ளை 1924.10.25 21. பற்றிக் கசில்டா ஜெயமணி 497135534V 22. வைரவப்பிள்ளை வாரித்தம்பி 461062130V 23. சின்னத்தம்பி கிட்ணபிள்ளை 382121384V 24. கிட்ணபிள்ளை நல்லம்மா 455520088V 25. நாகமுத்து பரமநாதன் 490910171V 26. பொன்னையா அன்னலிங்கம் 1949.04.16 27. செல்வரட்ணம் யோகம்மா 1948.08.07 28. கணபதிப்பிள்ளை சின்னத்துரை 421037282V 29. பாக்கியராசா பாக்கியம் 426940418V 30. நவரட்ணம் அன்னபூரணி 438290141V 31. செபமாலை இரத்தினசிங்கம் 462910169V 32. கார்த்திகேசு மாசிலாமணி 1945.02.03 33. சில்வெஸ்ரர் மருசலின் 312890216V 34. மருசலின் லூர்த்தம்மா 425911392V 35. மனுவேற்பிள்ளை அல்பிரட் 481593999V 36. அல்பிரட் மாணிக்கம்மா 485292012V 37.கதிர்காமமுத்து சண்முகதாசா 451520121V 38. கணபதிப்பிள்ளை விஜயரத்தினம் 490960406V நலன்புரி நிலையம்: நெல்லியடி MMV 1. சிவக்கொழுந்து தங்கவேலு 386800995V 2. சிற்றம்பலம் மனோன்மணி 315380120V 3. சூசைப்பிள்ளை பூபாலசிங்கம் 1938.04.14 4. சின்னையா இராசவீரசிங்கம் 332981064V 5.ஆசீர்வாதம் மேரிமெற்றலிற்றா 455190860V 6. ஆரோக்கியம் செபஸ்தியான் 491382856V 7. தம்பன் நாகமணி 471820360V 8. சிவலிங்கம் அன்னலக்சுமி 456372767V 9. தேவதாஸ் வடிவாம்பாள் 457022824V 10. செல்லையா மன்மதசிங்கம் 421353166V 11. கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் 492003337V 12. சாருப்பு சாகுல்ஹமீத் பிறப்பு 1949 13. சின்னத்தம்பி இராஜதுரை 420410328V 14. இராசமாணிக்கம் எட்டியம்மா 490784381V 15. செல்லையா சபாரட்ணம் 490393129V 16. நாகலிங்கம் மகாலிங்கம் 461900490V 17. சின்னப்பா ஞானப்பிரகாசம் 490852875V 18. அருளப்பு ஜேசுதாஸ் 482823378V 19. நல்லன் லக்ஸ்மி 475611800V 20. ஞானப்பிரகாசம் எய்லொஸ் 492790257V 21. செபரட்ணம் மதுரநாயகம் 471692775V 22. சூசைப்பிள்ளை மாரியம்மா 288340838V 23. கந்தசாமி ஜெயச்சந்திரமூர்த்தி 481112249V 24. போனிம்பஸ் பிரான்சிஸ்கோசேவியர் 452342723V 25. கிளிஸ்ரினம்மா பிரான்சிஸ்கோசேவியர் 497553032V 26. பாவிலுப்பிள்ளை அரியாந்தஸ் 480520250V 27. வடிவேலு அருமைநாயகம் 482712967V 28. வைரமுத்து முத்தையா 383370086 V 29. முத்தையாயோகாம்பிகை 485141162V 30. குருக்குமா வள்ளிநாச்சிப்பிள்ளை 476620562V 31. ஆனந்த மயில் வசந்தகோகிலா 03.06.1939 32. நீக்கிலம் பிள்ளை வேலம்பமாரி 358511120V 33. பத்திநாதன் மேரிலூசியா 06.06.1936 34. பிரகாசம் அந்தோனி குரூஸ் 340100387V 35. நாகராசா பூங்கோதையம்மா 395410300V 36. கந்தசாமி புஸ்பலீலா 456272452V 37. சண்முகரட்ணம் காந்தமலர் 17.06.1947 38. செல்வராசா மாமலர் 485962220V 39. வேலுப்பிள்ளை மாமயில் 27.04.1927 40. சுவாமிப்பிள்ளை செபஸ்தியாம் பிள்ளை 23.06.1946 41. பிரான்சிஸ் ஜேசுதாஸ் 25.03.1949 42.தேவசகாயம் பிரான்சிஸ் 472810314V 43.பிரான்சிஸ் செபமாலை நாயகி 476640660V 44. பெர்னாந்து இராஜரட்ணம் 397550087V 45. சின்னத்துரை செல்லபாக்கியம் 387540091V 46. இராசையா மார்க்கண்டு 490784381V நலன்புரி நிலையம்: கொடிகாமம் இராமாவில் 1. இராசையா இராசரத்தினம் 480580257V 2. சீமாம்பிள்ளை கிறிஸ்துராசா 471014052V 3. கிறிஸ்துராசா பிரான்சிஸ்கா 476923549V 4. நமசிவாயம் தர்மலிங்கம் 322751800V 5. சிவானந்தம் சந்திரா 1949.04.14 6. வேலுப்பிள்ளை பாலசிங்கம் 1947.07.07 7. சிதம்பரப்பிள்ளை புஷ்பமணி 476853575V 8. குருசுமுத்து மாரியாய் 1919.06.16 9. ஜோசேப் மரியாம்பிள்ளை 1938.02.13 10. மரியாம்பிள்ளை அன்னம்மா 405362996V 11. நாராயணசாமி நந்தகோபாலசாமி 400951144V 12. கதர்முத்து தங்கவடிவேல் 1938.08.07 13. தங்கவடிவேல் புஷ்பவதி 1948.04.30 14. நாகலிங்கம் நவரத்தினமலை 1942.03.05 15. கஸ்பர் அந்தோனியம்மா 1944.12.23 16. தர்மலிங்கம் செல்லம்மா 1933.10.05 17. நல்லையா தங்கமுத்து 306100840V 18.இராசதுரை இலங்காதேவி 425551612V 19. செல்லத்துரை அருளப்பு 1947.10.01 20. நடராசா சத்தியமூர்த்தி 1947.07.04 21. இராயப்பு அந்தோனிப்பிள்ளை 357252075V 22. மானன்ரகி முத்தையா 1947.07.04 23. பிலியாகோப் ஆரோக்கியமலர் 1940.04.05 24.வேலையன் சண்முகம் 373541192X 25.மரியநாயகம் செபமாலை 436811560V 26. சிதம்பரநாதன் செல்லம்மா 1944.05.24 27. இராசசுந்தரம் சின்னக்கிளி 477004040V 28. அந்தோனி முத்து எலிசபெத் 1935.04.08 29. பொன்னம்பலம் நல்லையா 442402213 V 30. செபமாலை ஆபிரகாம் 223030220V 31. சிங்கராசா அல்பிரட் 1927.10.10 32. சூசைப்பிள்ளை எட்வின் ராஜா 451382349V 33 இராஜப்பு செபமாலை 362812143V 34. வேதநாயகம் செபஸ்ரியம்மா 1945.05.03 35. எட்வின்ராஜா ஜெறினம்மா 468592240V 36. கிறிஸ்தோபர் மாக்கிரட் 1927.11.11 37. கிறிஸ்தோபர் சறோசாமலர் 1949.08.30 38. பில்லியக்குட்டி தவமணி 1947.09.22 39. அப்புலிங்கம் தண்டபாணி 1944.09.14 40. மாணிக்கராசா சிவபாக்கியம் 416041580V 41. ரோனம் தரிசில்டா ஜெனசதா கிறிஸ்தோபர் 427800237V 42. சந்தனப்பிள்ளை பத்திநாதன் 449841694V 43. இராமலிங்கம் செல்லபாக்கியம் 326704849V 44. சுப்பிரமணியம் துரைராசா 1949.04.08 45. சந்திரன் தேவராணி 1949.04.26 46. இராசையா செல்லத்தம்பி 361810120V 47. செல்லத்தம்பி இராசலக்ஸ்மி 495183084V 48. செபமாலை செபஸ்தியாம்பிள்ளை 1940.01.01 49. சுப்பையா சின்னதம்பி 1947.05.07 50. நடேசன் பாலு 1947.05.22 51. அந்தோனிப்பிள்ளை எட்வேட் 1945.10.13 52. எட்வேட் மரியமலர் 1946.11.25 53. மதியாஸ் மாக்கிரட் 1942.05.22 54. விசேந்தி கிறிஸ்தோபர் 473471710V 55.பொன்னையா அருளம்பலம் 420082282V 56. சீனியர் ஆறுமுகம் 490892940V நலன்புரி நிலையம்: சிறுவர் இல்லம், கைதடி (கணவனும் மனைவியும்) 01. தோமஸ் அருளானந்தம் 482790348V 02. அருளானந்தம் பற்றிமா புஸ்பராணி 546673588 நலன்புரி நிலையம்: சாவகச்சேரி, மகளிர் கல்லூரி 01. இராசையா கந்தசாமி 1947.12.10 02. கந்தசாமி இராசாத்தியம்மா 1954.02.11

யாழ். மாநகர, வவுனியா நகரசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா?

sri-lanka-provincial-council.jpgயாழ். மாநகர, வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமென அக்கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்கோரல் எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை இடம்பெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த இரு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதா? குறித்து இன்னமும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழும் நிலையில் பாரிய உயிர், உடைமை அழிவுகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையிலும் தற்போது தேர்தல் நடத்துவது குறித்து அதிருப்தி அடைந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இத்தேர்தல்களை ஒத்திவைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார். சொல்லொணாத் துன்பத்தில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்பிய பின்பே தேர்தல் நடத்துவது “ஜனநாயகம்’ என்று அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தற்போது இந்தியாவில் உள்ளனர். அவர்கள் போருக்குப் பின்னரான நிலைவரம் தொடர்பாக இந்தியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 9 ஆம் திகதியே டில்லியில் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அதன் பின்னரே யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் ஒன்று கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று குறிப்பிட்ட அந்த உறுப்பினர், தேர்தலைப் பிற்போடுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில் போட்டியிடும் நிலைமையேற்படலாம் என்று கூறினார்.

இதேவேளை, யாழ்.மாநகர, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக தமிழக பத்திரிகையொன்றில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இரா.சம்பந்தனின் புகைப்படத்துடன் இச் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாயினும் மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

முசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீள்குடியேற்றம் – 551 குடும்பங்கள் மீள்குடியேற்றம்; பசில் எம்.பி.தலைமை

basil.jpg‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கான இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைபெறுகின்றது.

ஏழு கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட 551 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற வைபவத்தில் வட மாகாணத்துக்கான விசேட செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. பிரதம அதிதியாகவும் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் ஆலோசனைக்கமைய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாத பிடியிலிருந்து நாட்டை படை வீரர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் மீட்டெடுத்ததன் மூலமே இடம்பெயர்ந்த இந்த மக்களை வெகுவிரைவில் மீள்குடியமர்த்த கிடைத்தது.

மன்னார், முசலி, பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டாரவெளி, கடலான்குளம், சின்னபுலச்சி, பொட்கேணி, அரிப்பு மேற்கு மற்றும் அரிப்பு கிழக்கு ஆகிய ஏழு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இன்று மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

பொலிஸ் நிலையம், பாடசாலை திறக்கப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி கொடுத்த நிலையிலேயே இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். அத்துடன் இந்த மக்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறையைச் சேர்ந்தவர்களும், விவசாயிகளுமே இங்கு அதிகமாக உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்றப்படுவதுடன் இந்த மக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களும், மீன்பிடி வலைகளும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. கூட்டுறவு கடைகள், தபாலகம், மருந்து நிலையம், போக்குவரத்து வசதிகள் இன்றைய தினம் செய்து கொடுக்கப் படவுள்ளது. இதேவேளை அண்மையில் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவிலுள்ள மெனிக்பாம் மற்றும் பல்வேறு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் புதைக்கப் பட்டுள்ள கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் முசலி மக்களை போன்று அந்த மக்களும் வெகு விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர்.எனவேதான் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதை கண்காணிக்கும் பொருட்டு விசேட பிரிவு ஒன்றும் நிறுவப் பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பசில் ராஜபக்ஷ எம். பி. இதற்கான சகல நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதலாவது மீள்குடியேற்றம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய தேர்தலில் மிகவும் குறைவான வாக்களிப்பு

ஐரோப் பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு 43 சதவீதமாக அமைந்திருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நேரடித் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து மிகக் குறைவான வாக்களிப்பு இந்த முறைதான். வாக்காளர்கள் பலர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும், வாக்களித்துள்ளவர்களும் கூட பெரும்பங்கில் தேசிய அரசியல் காரணங்களை முன்னிட்டே வாக்களித்துள்ளதாகவும் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனைப் பொறுத்தவரையில், ஆளும் தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மோசமான முடிவு, பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வாரம் அமைச்சர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், கோர்டன் பிரவுன் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் ஓங்கிவருகின்றன. இளநிலை அமைச்சரான ஜேன் கென்னடி அரசாங்கத்தில் இருந்து கடைசியாக விலகியிருக்கிறார்.

யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்கள்; அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

jaffna-000.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல்களை முன்னிட்டு அடையாள அட்டை அற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது.

இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதோடு யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேரும் வவுனியா நகர சபை தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரம் பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள் பலருக்கு அடையாள அட்டை கிடையாது என அறிவிக்கப்படுவதால் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

இதன்படி தமது பிரதேச கிராம உத்தியோகத்தரினூடாக தற்காலிக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்குமாறு தேர்தல் செயலகம் கோரியுள்ளது.

சகல தேர்தல்களிலும் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், புகையிரத பருவச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை என்பன உள்ளவர்களுககு மாத்திரமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு சுகாதார வசதி; 5 சுகாதார வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன

camb000dr.gifவடக்கி லிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கில் 5 சுகாதார வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதற்காக தனித்தனியே மருத்துவர்கள், தாதிமார் அடங்களாக சுகாதார உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

5 சுகாதார வயலங்களிலும் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 60 மருத்துவர்கள், 15 பதிவு செய்யப்பட்ட உதவி மருத்துவர்கள், 57 தாதிமார், 15 பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 30 மருந்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இடம் பெயர்ந்து வந்துள்ள 272,000 மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் அளிக்கும் வகையில் 15 ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய சுகாதார அமைச்சு அதில் வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்படும் 3 ஆஸ்பத்திரிகளும் அடங்குவதாக கூறியது.

செட்டிக்குளத்தில் பிரான்ஸ் தற்காலிக ஆஸ்பத்திரியும் வலயம் ஒன்றில் இந்திய ஆஸ்பத்திரியும் மெனிக்பாமில் எம். எஸ். எப். ஆஸ்பத்திரியும் இயங்கி வருகிறது. இந்த 15 ஆஸ்பத்திரிகளிலும் சுமார் 6741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக சகல நிவாரணக் கிராமங்களிலும் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதோடு இவற்றுக்கென தினமும் கொழும்பிலிருந்து மேலதிக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் மருந்தாளர் குழுக்கள் அனுப்பப்படுவதாகவும் அமைச்சு கூறியது. இது தவிர மோதல் காரணமாக காயமடைந்த மக்களுக்கு உதவுவதற்காக பதவிய, மன்னார், வவுனியா, செட்டிக்குளம், கெபதிகொல்லாவ, மதவாச்சி மற்றும் குருணாகல் ஆஸ்பத்திரிகளுக்கு மேலதிகமாக 232 மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரேசில் கடற்படையால் 16 உடல்கள் மீட்பு

airfrancetail.jpgகடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர்

அகாசி இன்று வருகிறார்

வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுவர் ஒருவரை ஜப்பான் இந்த வாரம் இலங்கைக்கு அனுப்புகிறது.  3 நாள் விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று திங்கட்கிழமை கொழும்பு வருகிறார். யுத்தத்தால் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீளக் குடியேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காகவே அகாசி வருகை தருவதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் தேசிய நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை அகாசி சந்திக்கவிருப்பதாக ஜப்பானிய தூதரகம் கூறியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுதல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பான முன்னேற்றம், தேசிய நல்லிணக்கத்திற்கான அரசியல் நடவடிக்கைகள் என்பன குறித்து அகாசி கலந்துரையாடவுள்ளதாக தூதரக பேச்சாளர் தெரிவித்தார். 2003 ஜூனில் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகளுக்கு 4.5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதற்கு அகாசி உதவியிருந்தார். பின்னர் 2008 இல் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவடைந்ததை அடுத்து அந்த நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்தன.

பிரஞ்ச் ஓபன் டெனிஸ் சம்பியன் பட்டம் முதற்தடவையாக பெடரர் வசம்

images-rojapedaral.jpgபிரான்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கிராண்ட ஸ்லாம் போட்டியான பிரான்ஸ் பகிரங்க டெனிஸ் சம்பியன் போட்டியில் டெனிஸ் உலகில் மன்னனாகத் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் ரொபின் சொடர்லிங்கை நேர்செட் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை முதற்தடவையாக கைப்பற்றியுள்ளார்.

பெடரர் கைப்பற்றியுள்ள கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை இந்த வெற்றியுடன் 14 ஆக உயர்ந்துள்ளதுடன் இதன் மூலம் இவர் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

நான்கு கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற வரிசையில் பெடரர் ஆறாவது இடத்தை வகிக்கின்றார். ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 27 வயதுடைய பெடரர் சுவீடனின் சொடர்லிங்கை 6-1   7-6   6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.

கெப்டன் அலி கப்பலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

police_spokesman_ranjith.jpgஇலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வத்தளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்தபோது கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் கப்பல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இக்கப்பலில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே கைது செய்யப்பட்ட வர்த்தகர் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. இக்கப்பலில் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை. எனினும் இக்கப்பலுடன் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இக்கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.