26

26

மாம்பழம் திருடியவர்கள்! மான் வேட்டையில் இறங்கிய கிழடுகள்! இவர்களுக்கு ஊசிபோடத் திரியும் வைத்தியர்! நல்லதம்பி ஜெயபாலன்

வீட்டிலிருந்து சைக்கிளைக் கொண்டோடியவர்கள்! சாவீட்டுக்கு சங்கூதுபவர்கள்! மாம்பழம் திருடியவர்கள்! மான் வேட்டையில் இறங்கிய கிழடுகள்! இவர்களுக்கு ஊசிபோடத் திரியும் வைத்தியர்! நல்லதம்பி ஜெயபாலன் (இடதுசாரிச் செயற்பாட்டாளர்)

அனைத்து இனங்களின் கலாசாரத்துடன் செயற்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – நாமல் ராஜபக்ஷ

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக ஹட்டனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் இராணுவ அதிகாரிகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் அமைப்புக்கள் நாட்டின் முப்படைகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தவும், நாட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.
அதேவேளை, அனைத்து இனங்களின் கலாசாரத்துடன் செயற்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கும் உமாசந்திர பிரகாஷ் – குடும்பம் – சொத்து – அதிகாரம் உமாச்சந்திர பிரகாஷ் – “தேசம்திரை காணொளி“

யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கும் உமாசந்திர பிரகாஷ் – குடும்பம் – சொத்து – அதிகாரம் உமாச்சந்திர பிரகாஷ்

ஜனாதிபதி அனுரவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு !

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்ததுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.

முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கியமான பங்காளியாகவுள்ளதோடு, இலங்கையின் இரண்டாவது பாரிய ஏற்றுமதி மற்றும் சுற்றுலா சந்தையாகவும் மூன்றாவது பாரிய இறக்குமதி சந்தையாகவும் செயல்படுகிறது.

இலங்கைக்கான தனது சந்தை பிரவேசத்தை விரிவுபடுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆதரவளிப்பதற்கான தமது அரப்பணிப்பை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தினர்.

அத்துடன், அறிவுப் பரிமாற்றம், கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் புதிய பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

தொழிற்கல்வி, கடல்சார் விவகாரங்கள், முதலீடு, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை தூதுக்குழு வலியுறுத்தியதுடன், இந்த பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுப்பதற்கு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் உறுதி செய்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை அமைதியான முறையில் நடத்திய இலங்கைக்கு தூதுக்குழுவினர் பாராட்டு தெரிவித்ததுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தமது நாடுகளின் ஜனாதிபதிகள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இத்தாலிய தூதுவர் டெமியானோ பிராங்கோவிக் (Damiano Francovigh), ருமேனியாவின் தூதுவர் ஸ்டெலுடா அர்ஹைர் Steluta Arhire, நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொபெக் (Bonnie Harbach), பிரான்சின் தூதுவர் மாரி-நோயில் டூரிஸ் (Marie-Noelle Duris),ஜெர்மனித் தூதுரகத்தின் பிரதிநிதி ஒல்ப் மெல்ஷோ (Olaf Malchow), நெதர்லாந்தின் பிரதித் தூதுவர் இவாம்ஸ் ரட்ஜன்ஸ் (Iwams Rutjens) ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

பொதுதேர்தல் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் – முருகேசு சந்திரகுமார்

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஏராளமான சுயேட்சை குழுக்கள் களமிறங்கி வாக்குகளை சிதைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றி மக்கள் மத்தியில் தெளிவு இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தியில் நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியில் மாத்திரமே தான் சிறுபான்மையினர் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மாத்திரமே சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளவர்கள். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இனவாதி அல்ல. அவரே சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டவர்.

தேசிய மக்கள் சக்தியினரின் உண்மை முகங்கள் தற்போது வெளிவர தொடங்கிவிட்டது. அவர்களே எல்லாம் என்ற மாயை உருவாகி அலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

தற்போது அதன் உண்மை வெளிவர தொடங்கிவிட்டது. ரில்வின் சில்வாவின் கருத்து, அவர்கள் யார் என்பதனையும் அவர்களின் உண்மை முகங்களையும் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் இன பிரச்சினைக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு பொருளாதார பிரச்சினை தான் இருக்கிறது என கூறுகின்றனர். தமிழர்களுக்கு சோற்றுக்கு தான் பிரச்சினை என சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். சஜித் பிரேமதாச தலைமையில் தான் பாராளுமன்றம் அமையும். அவரே பிரதமராக பதவியேற்பார்.

ஊழலற்ற நேர்மையானவர்களே நாடு முழுவதும் சஜித் தலைமையில் போட்டியிடுகின்றனர் என்றார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான உமாச்சந்திர பிரகாஷ் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாங்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம். தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சி பீடம் ஏறி எதனையும் செய்யவில்லை.

குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் என எவருக்கும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் இனியும் செய்யப்போவதில்லை.

எனவே தான் சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். யார் மக்கள் பிரதிநிதியாக போக வேண்டும் என்பதனை மக்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்பது ஜனநாயகம் அல்ல. வேட்பாளர். தெரிந்தவர் அறிந்தவர் அயலவர்கள் என வாக்களித்து வாக்கை சிதறடிக்க வேண்டாம் என்றார்.

ஈரான் மீதும் தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல்!

ஈரானின் இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று (26) அதிகாலை இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில், இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர்.

ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.

 

எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://x.com/IDF/status/1849957541301666038?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1849957541301666038%7Ctwgr%5E51f5d1ee7e637168403b952cb60dff3e96a0f045%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fisrael-began-to-attack-iran-1729909552

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியினருக்கும் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

 

இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.