முன்பள்ளி முதல் மும்மொழி அறிமுகம்!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுந்த சம்பளம்!!
புலம்பெயர்ந்தவர் உதவியோடு வடக்கில் தொழிற்சாலைகள் அமையும்!!!
தேசிய மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன் உடனான நேர்காணல்.
முன்பள்ளி முதல் மும்மொழி அறிமுகம்!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுந்த சம்பளம்!!
புலம்பெயர்ந்தவர் உதவியோடு வடக்கில் தொழிற்சாலைகள் அமையும்!!!
தேசிய மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன் உடனான நேர்காணல்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் காலத்து கதைக்களத்தை மையமாக கொண்டு புதியவன் இராசையா உருவாகியுள்ள ஒற்றைப்பனை மரம் பலத்த சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் குறித்த படம் தொடர்பில் திட்டமிட்ட குற்றச்சாட்டுகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் முன்வைப்பதாக குறித்த படத்தின் இயக்குனர் தனது முகநூல் பதிவு ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முகநூல் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதன் படி;
நாம் தமிழர் கட்சி எனது திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. மீறி திரையிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.
சில திரையரங்க உரிமையாளர்கள் அறிக்கையைப் பார்த்தபின் தங்கள் திரையரங்குகளிலும் படத்தை திரையிடுமாறு கேட்கிறார்கள்.
எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாது அண்டைய மாநிலங்களிலிலும் திரையரங்க உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.
கேரளாவில் இதுவரை பத்து திரையரங்கங்கள் உறுதிசெய்து விட்டன.
என் மண்ணைப் பற்றி, என் மக்களின் வாழ்வியலைப் பற்றி என் அரசியல் சார்ந்து படம் செய்வது எனது உரிமை. படத்தைப் பார்த்து ஆதரிப்பதும் நிராகரிப்பதும் பார்வையாளர்கள் உரிமை…
அறிக்கையில் சொல்கிறார் , படம் பொய்ப்பிரச்சாரம் செய்கிறதாம் அப்போ இவர் சொல்லிறதெல்லாம்……
விதானையார் இடையில எதுக்கு கெம்பிறார். ” என குறித்த பதிவில் இயக்குனர் புதியவன் இராசையா குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.