October

October

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர், நாடகக் கலைஞர் மாவடி ஏ ஆர் சிறிதரனுடன் நேர்காணல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பது அனுர தரப்பு மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – எம்.ஏ. சுமந்திரன்

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடும்படி பல தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். தேசிய மக்கள் சக்தி அரசும் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றதென முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்​ தெரிவித்தார்.
அரசியல் வழிகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசிடம் சுமந்திரன் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சமூகப் பிரச்சினை எனவும் அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான உரிமங்களில் அரசியல் தொடர்புள்ள தனிநபர்களின் நிதி ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார்.

வவுனியாவில் காணி பிணக்கினால் வாள்வெட்டு – இருவர் பலி !

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.
குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி !

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர் இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது,தோல்வியi தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிகார சமநிலையை பேண எம்.ஏ.சுமந்திரன் அவசியம் – அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம்!

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் நேர்காணல்.

அறிவிக்கப்பட்டது தேசிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் !

பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

01. பிமல் ரத்நாயக்க

02. பேராசிரியர் வசந்த சுபசிங்க

03. கலாநிதி அனுர கருணாதிலக்க

04. பேராசிரியர் உபாலி பனிலகே

05. எரங்க உதேஷ் வீரரத்ன

06. அருணா ஜெயசேகர

07. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

08. ஜனித ருவன் கொடிதுக்கு

09. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி

10. ராமலிங்கம் சந்திரசேகர்

11. கலாநிதி நஜித் இந்திக்க

12. சுகத் திலகரத்ன

13. வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர

14. சுனில் குமார் கமகே

15. காமினி ரத்நாயக்க

16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க

17. சுகத் வசந்த டி சில்வா

18. கீர்த்தி வெலிசரகே

19. சமிலா குமுது பிரிஸ்

20. அப்துல் ஃபதா முகமது இக்ராம்

21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா

22. மொஹமட் முகமது நசீர் இக்ராம்

23. க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்

24. ரொமேஷ் மோகன் டி மெல்

25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர​ெ

26. புபுது நுவன் சமரவீர

27. சரத் லால் பெரேரா

28. அனுர ஹெட்டிகொட கமகே

29. ஹேமதிலக கமகே

யாழ்ப்பாணத்தில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார் அங்கஜன் இராமநாதன்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் (11.10.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளார்.

கடந்த காலங்களில் அங்கஜன் இராமநாதன் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள காரணத்தினால் அந்த கட்சியின் பெயரையே அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாகவே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றிருந்தார்.

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய 349 சுயேட்சை குழுக்கள் – வடக்கில் 8 லட்சம் ஓட்டுக்களுக்காக 70 சுயேட்சை குழுக்கள்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 349 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

 

அதன்படி, பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 23 வேட்பாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 16 வேட்பாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 16 வேட்பாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 06 வேட்பாளரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 34 வேட்பாளர்களும், வன்னி மாவட்டத்திலிருந்து 33 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

 

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 33 வேட்பாளர்களும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 50 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 24 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 09 வேட்பாளர்களும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 22 வேட்பாளர்களும் , அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 09 வேட்பாளர்களும் , பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும் , பதுளை மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் , மொனராகலை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 07 வேட்பாளர்களும் , கேகாலை மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தமிழரசுக்கட்சியில் இருந்து விலகிய ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தலைமையில் புதிய கட்சி உதயம் !

யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது

 

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது.

 

இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

 

இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.