01

01

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமெரிக்க செனட் சபையில் முறைப்பாடு – மன்னிப்பு கோரினார் மார்க் சக்கபேர்க் !

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கபேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க செனட் சபையில் ஏராளாமான பெற்றோர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றால் தங்களது குழந்தைகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக கண்ணீர் வடித்திருந்தனர். மேலும், தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பினர்.

சமூக வலையத்தளங்கள் மூலம் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையில் குற்றச்சாட்டு முன்வைத்த குடும்பத்தினரிடமே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ நீங்கள் அனைவரும் அனுபவித்த அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் நான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற விஷயங்களை யாரும் கடந்து செல்லக்கூடாது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தொழில்துறை அளவிலான முயற்சிகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணை அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்றது.

மார்க் சக்கபேர்க் மற்றும் TikTok, Snap, X ஆகிய சமூக ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

அனோஜனின் மரணம்: 25வது வயதைத் தொடமல் மரணத்தை தழுவும் இளைஞர்கள்! லண்டனின் சோகக் கதை !

பெப்ரவரி 1 நாளை கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்த அனோஜன் ஞானசேகரனின் (21) இறுதிநிகழ்வுகள் லண்டனில் நடைபெறவுள்ளது. ஜனவரி 8 இரவு பல்கலைக்கழகம் முடிந்த பின் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்ற போதே இச்சம்பவம் இரவு 11:50 அளவில் ஸ்ரோபரி கில் ரெயில்நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது. இவருடைய பிரிவுத் துயரால் அவருடைய அவருடைய பெற்றோரும் சசோதரனும் தீராத மனவேதனையில் உள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஞானசேகரன் தம்பதிகளின் புல்வனான அனோஜன் இங்கிலாந்தில் பிறந்தவர். கணக்கியல் துறையில் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தார்.

இது பற்றிய தேசம் திரை காணொளி காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!