17

17

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வெளிப்படைத் தன்மை அவசியம் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது – யசூசி அகாசி

acasi.jpgஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்க வேண்டுமென இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமாக 20 ஆவது தடவையாக இலங்கை வந்துள்ள யசூசி அகாசி நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமைச்சில் சந்தித்து பேசியதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இது தொடர்பாக அகாசி மேலும் கருத்து வெளியிடுகையில்;

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். இது மிகவும் முக்கியமானதும் கடினமானதுமான இலக்காகும். எனினும் நாடு முழுவதும் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான இலக்கை கொண்டிருக்க வேண்டும்.

நல்லிணக்க நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் சிலசமயங்களில் ஐ.நா.பங்களிப்புச் செய்யக்கூடும். இது பற்றி நானும் அமைச்சரும் கலந்து பேசினோம். இன நெருக்கடி, நல்லிணக்கம் பற்றி உலகளாவிய ரீதியில் பல அனுபவங்களும், வரலாறுகளும் இருக்கின்றன. நல்லியக்கம் பற்றிய நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா, கிழக்கு தீமோர் மற்றும் பல ஆபிரிக்க நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன. எனவே, இவ் விடயத்தில் இலங்கை ஏனைய நாடுகளின் இந்த அனுபவங்களில் இருந்தான பலனை பெற்று தமக்குரிய நோக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இதில் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளின் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லிணக்க விவகாரத்தில் இலங்கைக்கும் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்புகள் பற்றி பேசினோம். எனினும் இது தொடர்பாக மேலதிக விபரங்களை இப்போதே கூற முடியாது. ஏனெனில் இந்த உறவு எதிர்காலத்தில் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டுமென்பது பற்றிச் சொல்ல முடியாது. அதை இலங்கை அரசாங்கம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், இவ் விடயத்தில் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டுமென ஏனைய அரசாங்கங்களும், அமைப்புகளும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் முடியாது. இலங்கை அதன் தன்மைக்கேற்றவாறு செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். இதேவேளை, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஜப்பானின் நிலைப்பாடு என்னவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அகாசி; உரிய நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையானதாகவும் பரந்துபட்டதாகவும் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென நாம் நினைக்கிறோம். எவ்வாறிருப்பினும் இலங்கை அரசாங்கம் அதன் முன்முயற்சியாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றி நாம் உன்னிப்பாக அவதானிக்கிறோம்.

இந்த ஆணைக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி அமைச்சர் பீரிஸ் எனக்கு விளக்கமளித்தார். அது அவ்வாறு நடக்குமென நாம் நம்புகிறோம். அது மட்டுமல்லாது இந்த ஆணைக்குழுவானது விரிவான பரிமானமுள்ள நடவடிக்கை. இதை போர் குற்றச்சாட்டு பற்றிய விடயத்துடன் மட்டும் குறுக்கிவிட நாம் விரும்பவில்லை என்று கூறினார். 

பாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு!

091009.jpgபளைப் பகுதியில் பாதுகாப்புக் கடமையிலீபட்டு வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.  இவரது சடலம் நேற்றிரவு (June 15 2010) யாழ்ப்பாண மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, மரண விசாரணையின் பின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

பளை இராணுவ முகாமில் ஆறாவது படைப்பிரிவில் கடமையாற்றிய பதுளையைச் சேர்ந்த ரட்ணாயக்க முதியான்சிலாகே புஸ்பகுமார (வயது 35) என்ற இராணுவ வீரரே உயிரிழந்தவராவார்.  தற்போது மக்கள் மீள்குடியற்றப்பட்டு வரும் பளைப் பகுதியில் பல பொதுமக்களும் பாம்புக்கடிக்கு இலக்காகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் வருடம் ஒன்றிற்கு 60 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும், வருடம் ஒன்றில் 100 பேர் வரையிலானோர் பாம்புக்கடியினால் உயிரிழக்கின்றனர் என்றும் பேராதெனிய மருத்துவபீடத்தின் பேராசியர் எஸ்.ஏ.எச். குலரத்ன தெரிவித்துள்ளார்.

வி~சப்பாம்புகள் கடிப்பதனால் எற்படும் மரணங்களைத் தவிர்க்கும் வகையில் தேசிய செயற்திட்டமொன்றைச் செயற்படுத்த சகாதார அமைச்சும், மட்டுப்படுத்தப்பட்ட சூழல் மன்றமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நாடு முழுவதும் விழிப்பணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பாம்புக் கடிக்குள்ளானவர்களை உடனடியாக அரசாங்க மருத்துவமனைகளில் சேர்ப்பதன் மூலம் உயிரழப்புக்களைத் தவிர்க்க முடியும் என சுகாhதர அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related News:

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

acasi.jpgயுத்தத் திற்குப் பின்னரான நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குமென்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.

இதற்கமைய இந்த வருடத்தில் மொத்தமாக 39 பில்லியன் யென்களை நிதியாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துடன் முழு அளவில் ஆலோசனைகளை நடத்தியே இந்த நிதியை வழங்குவதாகவும், தனிப்பட்ட குழுவுக்கோ, சமூகத்துக்கோ அன்றி நாட்டின் தேசிய நலனையும் தேவைகளையும் கருத்திற்கொண்டே உதவுவதாகவும் அகாஷி கூறினார்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மாத்திரமன்றி தென்பகுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஜப்பான் ஒத்துழைக்குமென்றும் ஜப்பானிய விசேட தூதுவர் குறிப்பிட்டார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள யசூசி அகாஷி நேற்றுக் காலை (16) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் வெளிவிவகார அமைச்சில் அவருடன் கூட்டாக செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை நீண்டதூரம் பயணித் துள்ளதாகக் கூறிய அகாஷி, நல்லிணக்கக் குழு அமைத்துள்ள மையை வரவேற்பதாகக் கூறினார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத் துவதற்கான செயற்பாடுகளுக்கு ஐக் கிய நாடுகள் சபையின் பங்களிப் பினைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக வெளிவிகார அமைச்சர் பீரிஸ¤டன் கலந்துரையாடியதாகவும் அகாஷி குறிப்பிட்டார்.

சுகாதாரம், கல்வி, உட்கட்ட மைப்பு துறைகளை மேம்படுத்தி ஜப்பானிய அரசு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை நல்குமென்று தெரி வித்த அவர், சந்திப்புகள், விஜயங் களை முடித்துக்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி இறுதி செய்தியாளர் மாநாட்டை நடத்தி மேலதிக விபரங்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

20ஆவது தடவையாக இலங்கைக்கு வந்துள்ள யசூஷி அகாஷியுடன் ஜப்பானிய தூதுக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
 

கிளிநொச்சி நகரில் கட்டங்கள் அமைத்தல், வீதியோர வியாபாரம் போன்றவற்றிற்கு பிரதேச சபை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கிளிநொச்சியில் கடை, வீடு முதலான கட்டடங்களை அமைப்பதற்கு பிரதேச சபையின் முன்னனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி ஏ-9 பாதையில் சிறு கடைகள் மற்றும் அனுமதியற்ற வீதியோர வியாபாரங்கள் மேற்கொள்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

தற்போது மீள்குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில், கிளிநொச்சி நகரில் சனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வீதி விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்கும் வகையிலேயே கரைச்சிப் பிரதேச சபை சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

பளைப் பிரதேச கிராமங்களில் அதிகளவில் வெடிப்பொருட்கள் காணப்படுவதால் மீள்குடியேற்றம் தாமதமாகின்றது.

LandMine_Signகிளி நொச்சி மாவட்டத்திலுள்ள பளைப்பிரதேசம் அதிகளவு மிதிவெடிகள், கண்ணிவெடிகள் காணப்படும் பிரதேசமாகவுள்ளது. இவ்வெடிப்பொருட்கள் முற்றாக இன்னும் அகற்றப்படாத காரணத்தினால் பளைப் பிரதேசத்தின் பல கிராமங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியாத நிலையும் எற்பட்டுள்ளது.

பளைப்பிரதேசத்திலுள்ள அரசர்கேணி, கச்சாய்வெளி, அல்லிப்பளை, கிளாலி, முகமாலை, வேம்பொடுகெணி, இத்தாவில், முதலான பகுதிகளிலேயே அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதிகள் பல கடந்தகால போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கும் சிறிலங்காப் படையினரின்  கட்டப்பாட்டுப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாக காணப்பட்டமையும் இதற்குக் காரணமாகும். தற்போதும் இப்குதிகளில் படையினர் வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இடம்பெயர்ந்த 585 பேர் இன்று ஒட்டு சுட்டானில் மீள்குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் இன்று (17) 178 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் மீள்குடியேற்றப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது.

மாங்குளம் ஏ-9 வீதிக்கு மேற்கே இன்றுபுரம் மற்றும் திருமுருகண்டி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் மீள்குடியேற்றப்படுவதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டவாளி பிரதேச செயலகப் பிரிவில் 35 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

இதேவேளை அடுத்தவாரம் சுமார் 3500 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பனிச்சன்குளம் மற்றும் அம்பகாமம் கிராமசேவகர் பிரிவுகளில் எதிர் வரும் 21ஆம் திகதி 175 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு திட்டப்பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இது தவிர எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 16 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றப் பணிகள் இடம் பெற உள்ளதாக கிளிநொச்சி அரச அதிபர் கேதீஸ்வரன் ரூபாவதி கூறினார்.

உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேர் இங்கு மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

இது தவிர கரச்சி கிழக்கு, வட்டக்கச்சி, மாவடியம்மன், ராம நாதபுரம் உட்பட 6 கிராம சேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுமார் 1500 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அரச அதிபர் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நலன்புரி முகாம்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர்.

வெளிநாட்டு பிரமுகர் வருகை: அரசின் திட்டங்களை நேரில் பார்வையிட சந்தர்ப்பம்

kahiliya.jpgவெளி நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை நேரில் காண்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பில் உலக நாடுகளில் பல்வேறு விதமான மாற்று கருத்துக்களும் கூறப்படுகின்றன. அது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தி வருகின்றது.  இந்நிலையில் நாங்கள் கூறும் விடயங்கள் தொடர்பான உண்மை நிலைமைகளை காண முடியும். தமிழக எம்.பிக்கள் குழுவை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வரும் படியும், வடக்குக்குச் சென்று அங்கு அரசினால் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பார்வையிடும்படியும் கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல சுட்டிக்காட்டினார்.