கிளிநொச்சியில் கடை, வீடு முதலான கட்டடங்களை அமைப்பதற்கு பிரதேச சபையின் முன்னனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி ஏ-9 பாதையில் சிறு கடைகள் மற்றும் அனுமதியற்ற வீதியோர வியாபாரங்கள் மேற்கொள்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
தற்போது மீள்குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில், கிளிநொச்சி நகரில் சனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வீதி விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்கும் வகையிலேயே கரைச்சிப் பிரதேச சபை சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.